Home » 2016 » April (page 4)

Monthly Archives: April 2016

மன அழுத்தம் குறைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்!!!

மன அழுத்தம் குறைவதற்கான ஆயுர்வேத மருத்துவம்!!!

மூளை, இதயம் மற்றும் ரத்தம் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகியவை நமது உடலில் ஓயாது பணிபுரிகின்றன. இயங்கிக் கொண்டேயிருக்கும் அவற்றிற்கு மென்மையும், நெகிழ்ச்சியும், தடையின்மையும், சீரான வேகமும், சூடும் தேவை. மேலதிகாரிகள் நம்மிடம் கடுமையாக நடந்து கொள்ளும்போது மூளை மற்றும் இதயப்பகுதிகளில் ஏற்படும் ஸ்ட்ரெஸ் காரணமாக ரத்தக் குழாய்களின் வழியே அபரிமிதமான வேகமும்சூடும் பரவுவதால் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. அப்போது வரக்கூடிய கோபத்தையோ, துக்கத்தையோ வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் மூளைப் பகுதியில் மென்மையும், நெகிழ்ச்சியும் விட்டகன்று கடும் ... Read More »

செவ்வாழைப் பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

செவ்வாழைப் பழத்தின் மருத்துவக் குணங்கள்:-

பல்வலி குணமடையும் பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும். சொரி சிறங்கு நீங்கும் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும். நரம்பு தளர்ச்சி குணமடையும் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் ... Read More »

மாதுளம்பூவின் பயன்கள்!!!

மாதுளம்பூவின் பயன்கள்!!!

மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும். மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு ... Read More »

ஆவாரம் பூ..!

ஆவாரம் பூ..!

பூக்களின் அழகும், நறுமணமும் எத்தகை யோரையும் மயக்கும் தன்மை கொண்டது. பூக்களில் மறைந்துள்ள மருத்துவத் தன்மையை நம் முன்னோர்கள் அறிந்து கொண்டால் தான் அதை இறைவனுக்கு பூஜிக்க பயன்படுத்தினர். கடந்த இதழில் அல்லியின் மருத்துவக் குணங்களை அறிந்துகொண்டோம். இந்த இதழில் ஆவாரம் பூவின் மருத்துவக் குணங்களை அறிந்துகொள்வோம். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்ற பழமொழி அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதிலிருந்தே இதன் மருத்துவப் பயனை அறியலாம். ஆவாரம் பூ உயிர்க்காக்கும் மருந்தாகும். மஞ்சள் நிறத்தில் கொத்துக் கொத்தாய் ... Read More »

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இந்தியாவில் கோடைக்காலத்தில் தெருக்களில் விற்றுக் கொண்டு வரும் பழங்களில் ஒன்று தான் நுங்கு. இந்த நுங்கு மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக கோடையில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்துக்களை இது தன்னுள் அதிகம் உள்ளடக்கியுள்ளது. மேலும் உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி, இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளது.அதிலும் கோடையில் அதிகப்படியான ... Read More »

உழவன் கவிதை!!!

உழவன் கவிதை!!!

விவசாயம் தழைத்திட விஞ்ஞானம் படித்திடுவோம் இயற்கை பயிர் இளைஞர்களிடம் விதைத்திடுவோம் ஏர் கொண்டு மக்கள் மனதில் உழுதிடுவோம் வெள்ளை அரசியலெனும் விஷச் செடி களையெடுப்போம் மரம் மாடு செடி கொடியென‌ உரம் செய்வோம் உயிரனைத்திற்கும் கல்வி உணவு தன்னிறைவை அறுவடை பண்ணுவோம் சோறு படைக்கும் விவசாய சாமிக்கு இலவச பொங்கல் வைக்கும் அரசியலுக்கு மாற்று கொணர்வோம் விளை நிலம் சார்ந்தே திட்டங்கள் விழைய வேண்டும் குளிர் காலத் தொடரில் கடன் சுமைக்கு தற்கொலை தொடரா வண்ணம் பயிர் ... Read More »

யானையின் எடை!!!

யானையின் எடை!!!

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது. யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ... Read More »

கொக்கும், மீனும்!!!

கொக்கும், மீனும்!!!

அழகியவனாந்தரமும் நீர்நிலைகளும் இருக்கும் அந்தஊரில்ஒருபெரியகுள­­ ம்இருந்தது. அதில்ஒரு கொக்கு தினசரிமீன்பிடித்­ து உண்பதைவழக்கமாகக் கொண்டிருந்தது. தினசரிஅதிகநேரம்காத்திருந்து மீனைப்போராடிப் பிடிப்பதால் கொக்குசலிப்புற்றிருந்தது. ஒருநாள்கொக்கின் மூளையில் ஒருயோசனைதோன்றியது. இந்தமீன்களை அவைகளின் சம்மதத்தோடே நாம்விரும்பிய இடத்தில் கொண்டுபோய்திண்றால் எப்படிஇருக்கும் என்றுயோசித்தது. அதற்குஒருவஞ்சகமான திட்டமும் தயாரித்தது. ஒருநாள்கொக்குவருத்தமுடன் ஒற்றைக் காலில்நின்றுகொண்டிருந்தது. துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “கொக்குநம்மைப் பார்த்தவுடன் கவ்விக் கொள்ளுமே. சும்மாவிடாதே, ஆனால்இதுசெயலற்று நிற்கின்றதே என்னவாக இருக்கும்” என்று, யோசித்தவாறே அதன்முன்வந்தது. “என்ன கொக்காரே! உன்ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மாநிற்கிறீர்”? என்றது. ... Read More »

தெனாலி ராமன் கதை: வாய்கொப்பளிக்க தண்ணீர்!!!

தெனாலி ராமன் கதை: வாய்கொப்பளிக்க தண்ணீர்!!!

தெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்… திருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்… தனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது… மனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்.. சொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள். புதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்.. ”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி. ”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான் ”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி.. தெனாலி ராமன் ... Read More »

பீஷ்மர் சொன்ன கதை : நல்லவர் தீயவர் அறிந்து கொள்வது!!!

பீஷ்மர் சொன்ன கதை : நல்லவர் தீயவர் அறிந்து கொள்வது!!!

“சில நேரங்களில் நல்லவர் தீயவர் போலவும் தீயவர் நல்லவர் போலவும் காட்சி அளிக்கிறார்கள் . அப்படியான தருணத்திலே அவர்களின் தன்மையினை எப்படி அறிந்து கொள்வது” இதற்கு ஒரு நரி, புலியின் கதையினை சொல்கிறேன்.. “புரிகன் என்ற அரசன் மக்களை கொடுமை செய்து அரசாண்டதால் மறு பிறவியிலே ஒரு நரியாகப் பிறந்தான்.. தெய்வ அருளால் அந்த நரி தன் முற்பிறப்பின் நிலையினை அறிந்த்து. இப்பிறப்பிலே நல்ல வாழ்வு வாழ வேண்டும் என நினைத்து, நரியின் இயற்கை குணமான மாமிச ... Read More »

Scroll To Top