Home » 2016 » April » 14

Daily Archives: April 14, 2016

பெண்கள் விடுதலைக் கும்பி!!!

பெண்கள் விடுதலைக் கும்பி!!!

காப்பு பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசிக் களிப்பொடு நாம்பாடக் கண்களி லேயொளி போல வுயிரில் கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே. 1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும் குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி) 2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி) 3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில் ... Read More »

பாவேந்தர் பாரதிதாசன்!!!

பாவேந்தர் பாரதிதாசன்!!!

தமிழுக்கும் அமுதென்று பேர்! –  அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! – இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! ... Read More »

பாரதியார் படைப்புகள்

பாரதியார் படைப்புகள்

காற்று வெளியிடைக் கண்ணம்மா – நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது ஊற்றினை ஒத்த இதழ்களும் – நிலவு ஊறித் ததும்பும் விழிகளும் – பத்து மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் – இந்த வையத்தில் யானுள்ள மட்டிலும் – எனை வேற்று நினைவின்றித் தேற்றியே – இங்கோர் விண்ணவ னாகப் புரியுமே! இந்தக் (காற்று) நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன் – துயர் போயின, போயின துன்பங்கள் நினைப் பொன்எனக் கொண்ட பொழுதிலே – என்றன் வாயினிலே அமு தூறுதே – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே கண்ணம்மா ம்ம்ம் கண்ணம்மா ம்ம்ம் – கண்ணம்மா என்ற பேர்சொல்லும் போழ்திலே – உயிர்த் தீயினிலே வளர் சோதியே – என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக் (காற்று) Read More »

வாதுக்கு வந்த பண்டிதர்!!!

வாதுக்கு வந்த பண்டிதர்!!!

பெயர் பெற்ற ஒரிய நாட்டுப் பண்டிதர் ஒருநாள் “திடுதிடுப்” பென்று விஜயநகரம் வந்து சேர்ந்தார். நேரே அரண்மனைக்குச் சென்றார். அரண்மனை முன்வாசலில் கட்டியிருந்த அந்தப் பெரிய வெண்கல மணியை அடிக்கத் தொடங்கினார். விஜயநகரப் பேரரசின் பண்டிதர்களை வாதுக்கு இழுக்கும் அறிகுறி அல்லவா அது! அந்த மணி ஓசை கேட்டு அரசர் கிருஷ்ணதேவராயர் திடுக்கிட்டார். உடனே ஒரிய நாட்டுப் பண்டிதரை வாதுக்கு இழுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! அப்பொழுது அரண்மனைப் பண்டிதர்களுக்கு ஆள் அனுப்பினார். அவர்களை உடனே அந்த ... Read More »

பாரத மாதா நவரத்தின மாலை!!!

பாரத மாதா நவரத்தின மாலை!!!

(இப்பாடல்களில் முறையே ஒன்பது இரத்தினங்களின் பெயர்கள் இயற்கைப் பொருளிலேனும் சிலேடைப் பொருளிலேனும் வழங்கப் பட்டிருக்கின்றன) (காப்பு) வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த பாரதமா தாவின் பதமலர்க்கே – சீரார் நவரத்ன மாலையிங்கு நான் சூட்டக் காப்பாம் சிவரத்தன மைந்தன் திறம். (வெண்பா) திறமிக்க நல்வயி ரச் சீர்திகழும் மேனி அறமிக்க சிந்தை அறிவு – பிறநலங்கள் எண்ணற் றனபெறுவார் இந்தியா என்ற நின்றன் கண்ணொத்த பேருரைத்தக் கால். (கட்டளை கலித்துறை) காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக் கும்பிட்டுக் கம்பனமுற் ... Read More »

Scroll To Top