தந்தையின் மரணத்திற்குப் பின்னர் சுபாஷ் மீண்டும் வியன்னா பயணமானார். வியன்னாவில் நடைபெற்ற இந்திய மாணவர் மாநாட்டில் கலந்து கொண்டு சுபாஷ் சிறப்புரை ஆற்றினார். பின்னர் ரோம் நகரில் நடைபெற்ற ஆசிய மாணவர் சங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் சுபாஷ். அப்போது அந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய முசோலினியை சந்தித்துப் பேசினார். இந்திய சுதந்திரப் போரைப்பற்றி இருவரும் கலந்தாலோசித்தார்கள். ரோம் நகரிலிருந்து யூகோஸ்லாவியா நாட்டிற்குச் சென்று அங்கு சிலகாலம் தங்கினார். 1935 ல் சுபாஷ் ஜெர்மனி நாட்டிற்குச் ... Read More »
Daily Archives: April 2, 2016
மேயர் சுபாஷ்!!!!
April 2, 2016
சுபாஷ் சிறைக்குள் இருந்த சமயத்தில் கல்கத்தா நகர மாநகராட்சிக்கு மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. சிறைக்குள் சுபாஷ் தாக்கப்பட்ட விஷயம் அறிந்த வங்காள மக்கள் பிரிட்டிஷ் அரசின் மீது கடும்கோபத்தில் இருந்தார்கள். அரசை பழிவாங்கக் காத்திருந்த மக்களுக்கு இந்த மேயர் தேர்தல் நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. சிறைக்குள் இருந்த சுபாஷை கல்கத்தா நகர மேயராக்க மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். எனவே சிறைக்குள் இருந்த சுபாஷ் சார்பாக மக்களே ஒரு மனுவை சுபாஷ் சார்பில் தாக்கல் செய்தார்கள். தேர்தல் ... Read More »
முல்லா நசுருதீன்
April 2, 2016
முல்லா நசுருதீன் ஊர்மக்கள் மத்தியில் உட்கார்ந்திருந்தார். வெளியூரில் இருந்து வந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அருகில் அமர்ந்தார். முல்லாவின் காதருகே சென்று ஏதோ சவால் விட்டார். முல்லா கலகல என்று சிரித்து விட்டு “ஆஹா… வெகு சுலபம்… கொஞ்ச நேரத்தில் சொல்லுகிறேனே… பொறுங்கள்” என்றார். பிறகு அருகிலிருந்த சிலரைப் பார்த்து…” உழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான யோசனைகள் சில எனக்குத் தோன்றி உள்ளன. அவற்றை இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து ... Read More »
நினைவாற்றலைத் தரும் மாம்பழம்!!!!
April 2, 2016
குளிர் முடிந்து கோடை வெயில் வரப்போகிறது. தர்பூசணி, நுங்கு, மாம்பழம் போன்றன அதிக அளவில் விற்பனைக்கு வரும் என்றாலும், பார்த்தவுடன் தன் நிறத்தால் நம்மை ஈர்த்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் ஆற்றல் மாம்பழத்திற்கு உண்டு. முக்கனிகளில் முதலிடத்தையும் பழங்களின் ராஜா என்ற சிறப்பையும் பெற்ற மாம்பழம் சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. Mangisera Indica என்பது மாம்பழத்தின் தாவரவியல் பெயராகும். இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையினையுடையது. மாம்பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் ... Read More »
வெற்றிலை பயன்–சித்த மருத்துவம்:-
April 2, 2016
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர்தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும். வயிற்றுவலி: இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி ... Read More »
சந்தனம்,விபூதி,குங்குமம் எல்லாம் எதுக்காக..?
April 2, 2016
இந்து மதம் அற்புதம் நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். வாகனங்களின் எஞ்சின் தொடர்ந்து இயங்கும்போது அதிகம் சூடாகும். இந்த சூட்டைக் குறைத்து எஞ்சினுக்கு ... Read More »