Home » 2016 » April » 18

Daily Archives: April 18, 2016

லீவு கேக்க போறேன்!!!

லீவு கேக்க போறேன்!!!

ஒருத்தன் ஆபீஸ்ல லீவு வாங்கணும்……என்ன சொன்னா மேனேஜர் லீவு தருவாருன்னு ரொம்ப நேரம் யோசிச்சு…யோசிச்சு….ஒரு முடிவுக்கு வந்து…..டக்குன மேலே செவுத்துல ஏறி தலைகீழா தொங்கிட்டு…ஆய்ய்…ஊயி’னு சவுண்டு விடுறான். உடனே அவன் கூட வேலை செய்யுறவன் ஓடி வந்து…”டேய்..டேய்..என்னடா இப்படி தலை கீழா தொங்கிட்டு கத்திட்டு இருக்கே” அப்படின்னு கேக்குறான். அதுக்கு நம்மாளு……””பேசாம இரு…நான் மேனேஜர் கிட்ட லீவு கேக்க போறேன்னு…நீ போயி ஒன வேலையை பாரு””ன்னு சொல்றான்……அவனும் போயிட்டான்…. கொஞ்ச நேரம் கழிச்சு மேனேஜர் வர்றான்…ஆபீசிக்குள்ளே நம்மாளு ... Read More »

அக்பரின் வள்ளல்தன்மை!!!

அக்பரின் வள்ளல்தன்மை!!!

அக்பரிடம் ஒரு விஷயம் மட்டும் பீர்பாலுக்குப் பிடிக்கவில்லை. அதாவது அக்பரின் ஆராயாமல் கொடுக்கும் வள்ளல்தன்மை. பல முறை பீர்பால் அதை எடுத்துக் கூறியும் அதைப் பொருட்படுத்தாமல் அக்பர் தன விருப்பப் படி வாரி வழங்கிக் கொண்டு இருந்தார். இதானால் அக்பரின் கஜானா காலியாகும் நிலைமை ஏற்பட்டது. ஒருமுறை அக்பர் மாறு வேடத்தில் இரவு நேரம் தன சேனாதிபதி அஹமத் கானுடன் வந்து கொண்டு இருந்தார். நட்ட நடு இரவில் அவர் தெருவோரம் கண்ட ஒரு காட்சி அவரின் ... Read More »

பாத வெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு!!!

பாத வெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு!!!

பெண்களுக்கு பாதிப்பையும், கவலையையும் தருவது பாத வெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு. இவை ஒரு வகையான பூஞ்சை காளான்களால் வருகிற பிரச்சினையாகும். தோல் இறுகி கடினமாகி வழவழப்பினை இழந்து வெடித்துப் பிளந்து பார்ப்பதற்கே அருவெறுப்பினை தரும். இந்த பிரச்சினை அநேகமாக பத்தில் ஐந்து பெண்களுக்காவது இருக்கிறது. இவற்றிற்கு தற்போதைய நவீன மருத்துவம் நிறைய தீர்வுகளை அளித்தாலும், அவை செலவு பிடிப்பதாகவும், முழுமையான தீர்வினை தருவதாகவும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த பிரச்சினைக்கு தேரையர் எளிமையான இரண்டு தீர்வினை நல்கியிருக்கிறார். ... Read More »

முட்டாள் வேலைக்காரன்!!!

முட்டாள் வேலைக்காரன்!!!

ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன் ஒருநாள் அவனை அழைத்து, “”நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!” என்றான். அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் ... Read More »

ஒரு குடம் அதிசயம்!!!

ஒரு குடம் அதிசயம்!!!

பீர்பால்  , அறிவாற்றலும் புத்திக்கூர்மையும் உள்ளவர். எவ்வளவு பெரிய சிக்கலையும், தமது அறிவுத்திறமையாலே சமாளித்துவிடுவார்னு கேள்விப்பட்ட காபூல் அரசருக்கு, பீர்பாலின்அறிவாற்றலைஆராய்ந்து அறிய ஆவல் ஏற்பட்டது. அதனால ஒரு கடிதத்துல, “மேன்மைதாங்கிய அக்பர் சக்ரவர்த்தி அவர்களுக்கு, ஆண்டவன்தங்களுக்கு நலன்கள் பலவும், வெற்றிகள்பலவும் தருவாராக. தாங்கள் எனக்கு ஒருகுடம்அதிசயம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்னு எழுதி கையெழுத்துப் போட்டு“, தூதன் மூலமாஅக்பருக்கு அனுப்பினாருகாபூல் அரசர். கடிதத்தைப் படிச்ச அக்பர் திகைச்சு, ஒரு குடம் அதிசயம் அனுப்புவதா? ஒன்றுமேபுரியவில்லையேன்னு குழம்பி, அரண்மனையை சுற்றி வளம் வந்தார். அக்பர் முகம் குழப்பத்தில் இருப்பதை பீர்பால் கண்டார். பீர்பால் அக்பரிடம் சென்று இதுபற்றி வினவினார். அக்பர் கடிதத்தை பீர்பாலிடம் கொடுத்தார். அந்த கடிதத்தை படித்தார் பீர்பால். பீர்பால் நீண்ட சிந்தனைக்கு பிறகு, அக்பரிடம் மூன்று மாதத்தில் அதிசயம்அனுப்புவதாக பதில்எழுதுமாறு சொன்னார். அப்புறம் அக்பர், பீர்பாலிடம், ஒருகுடம் அதிசயம் எப்படி அனுபுவிர்? என்று விசாரிச்சாரு. அதுக்கு பீர்பால், மூன்று மாதம் கழித்துஅந்த அதிசயத்தைப் பாருங்களேன். பீர்பால் யோசித்துக்கொண்டே அவர் வீட்டிற்க்கு புறப்பட்டார். பிறகு பீர்பால் ஒரு மண் குடத்தைஎடுத்தார். ஒரு பூசணிக்கொடியில் காச்சிருந்தபூசணிப்பிஞ்சுஒண்ணை கொடியோட மண்குடத்திற்குள் வைத்தார். வைக்கோலால் குடத்ததை மூடினாரு.  நாளாக நாளாக பூசணிப் பிஞ்சுகுடத்திற்குள்ளேயே நன்றாக வளர்ந்து பெருத்தது. குடம்நிறையுமளவிற்கு பூசணிக்காய் பெருத்ததும், பூசணிக்காயைத் தவிர மற்ற வைக்கோல், கொடி,காயின் காம்பு எல்லாவற்றையும்கத்தரித்து விட்டார் பீர்பால். இப்போ அந்தக்குடத்தை அக்பரிடம்காட்டினார் பீர்பால். அக்பருக்கு ஆச்சரியம். குடத்தின் வாயோஉள்ளே இருக்கும்பூசணிக்காயைவிட மிகவும் சிறியது. இதனுள்இவ்வளவு பெரிய பூசணிக்காயைஎப்படி நுழைத்தாய்? பீர்பால்அதை விளக்கிவிட்டு, அந்தப் பூசணிக்காய் குடத்தைஅப்படியே காபூல் அரசனுக்கு, அதிசயம்னு அனுப்ப சொன்னார் அக்பர் தூதன் மூலமாக ஒரு கடிதத்தையும் அந்த குடத்தையும் அனுப்பினார். கடிதத்தை காபூல் அரசன் பிரித்து படித்தார். ... Read More »

Scroll To Top