Home » 2016 » April (page 5)

Monthly Archives: April 2016

வெற்றி !!!!!……

வெற்றி !!!!!……

ஒரு போர் வீரனை வேறு முகாமுக்கு மாற்றும் போது அதிகாரி அவனிடம் ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார்.”கடமையில் கருத்தாக இருப்பான்.ஆனால் எதெற்கெடுத்தாலும் பந்தயம் கட்டுவது தான் இவனது பலவீனம்.”அடுத்த முகாம் அதிகாரி கடிதத்தைப் பார்த்துவிட்டு,’பந்தயம் கட்டுவது கெட்ட பழக்கம்.எதெற்கெல்லாம் பந்தயம் கட்டுவாய்?’என்று கேட்டார்.அவனோ, ”எதற்கு வேண்டுமானாலும் பந்தயம் கட்டுவேன்.இப்போது கூட ஒரு பந்தயம்.உங்கள் முதுகில் ஒரு மச்சம் இருக்கிறது என்கிறேன்.பந்தயம் நூறு ரூபாய்.”என்றான்.’ எனக்கு முதுகில் மச்சமே கிடையாது.நீதோற்று விட்டாய்.நீயே பார்,”என்று அவர் கூறி தனது சட்டையைக் கழற்றிக் ... Read More »

உஷ்ணத்தை குறைக்கும் ராகி!!!

உஷ்ணத்தை குறைக்கும் ராகி!!!

உஷ்ணம் போக்கும் கேப்பைக் கூழ் கேள்வரகு – ராகி களிதேவையானப் பொருட்கள் :இரண்டு பேருக்கு 4 டம்ளர்* தண்ணீர் 2 டம்ளர்* கேள்வரகு – ராகி மாவு * 225ml அளவு டம்ளர்(காபி டம்ளர்). செய்முறை: அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் 4 டம்ளர் தண்ணீரை விட்டு கொதிக்க விடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் கேள்வரகு மாவை கொஞ்சம் கொஞ்சமாய் கொதிக்கும் நீரில் போட்டுக் கொண்டே கிளறவும்.கட்டி கட்டாமல் கிளறுதல் முக்கியம்.(ரவா கிண்டுதல் போல.) பின்னர் மிதமான தீயில் ... Read More »

உடலுக்கு ஏற்ற சோளம்!!!

உடலுக்கு ஏற்ற சோளம்!!!

உடலுக்கு ஏற்ற சோளம்: சிறுதானியங்களில் பல வகைகள் இருந்தாலும் சோளம் முதன்மையான உணவு பொருளாக கருதப்படுகிறது. சோள உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சோளம் பயிரிடப்படுகிறது. சோளத்தில் ரொட்டி, கஞ்சி, கூழ், சாதம் போன்றவை மட்டும் தயாரிக்கப்பட்டு வந்த நிலை மாறி தற்போது, இட்லி, தோசை, ஊத்தாப்பம், பணியாரம், ரொட்டி, பரோட்டா, அப்பம், அடை, உப்புமா, கேசரி, வடகம், முறுக்கு, பிஸ்கட், சோள ... Read More »

இன்று ஒரு தகவல்:  வல்லாரை:-

இன்று ஒரு தகவல்: வல்லாரை:-

வல்லாரையின் வேறு பெயர்கள் சரஸ்வதி, பிண்டீரி, யோகவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்து குளத்தி, அசுர சாந்தினி.இதில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் மிகுதியாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் மிகுந்து இலை சிறியதாக உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் பெற்றிருக்கிறது. மலேசியர்களும், சீனர்களும் வல்லாரையை விரும்பி உணவுடன் உட்கொள்கிறார்கள். இதிலுள்ள ஆவியாகும் எண்ணெய் தோல் பகுதியில் செயல்பட்டு நன்கு வேலை செய்கிறது. உடலைத் தேற்றும் பலம் தரும். தோல் ... Read More »

ஒரு தகவல் : தூதுவளை:-

ஒரு தகவல் : தூதுவளை:-

தூதுவளை:- (வேறு பெயர்கள்: தூதுவளை, தூதுளம், தூதுளை.) தாவரப் பெயர்கள்: Solanum Trilubatum; இது வெப்பம் உண்டாக்கி, கபம் நீக்கி தமிழகம் எங்கும் தன்னிச்சையாக வளர்கிறது. வீட்டுத் தோட்டத்திலும் வளர்ப்பதுண்டு. இது் ஊதாநி றப் பூக்களையும், உருண்டையான பச்சை நிறக் காய்கள் சுண்டைக் காய் மாதிரி இருக்கும். சிவப்புப் பழங்களையும் வளைந்த முட்கள் நிறைந்த தண்டினையும் உடைய ஏறு கொடி.: வேர் முதல் பழம் வரை எல்லா பாகமும்.பயன் உள்ளது. வள்ளளார் கூறும்போது “அறிவை விளக்குவதற்கும் கவன ... Read More »

குப்பை மேனி!!!

குப்பை மேனி!!!

குப்பை மேனி:- வேறு பெயர்கள்: அரிமஞ்சிரி, அண்டகம், அக்கினிச் சிவன், பூனை வணங்கி, அனந்தம், கொழிப் பூண்டு, சங்கரபுஷ்பி, மேனி. இது தோட்டங்கனிலும், சாலையோரங்களிலும். காடுமேட்டில் பொதுவாக இந்தியாவில் எங்கும் காணப்படுகிறது. இதை யாரும் வளர்ப்பதில்லை , காடுமேட்டில்தானே தானே வளரும் தன்மை உடையது . சிறு செடியாக வளரும். இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவமாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும். இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப் புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, ... Read More »

இளநரைக்கு தடைபோடும் நெல்லி!!!

இளநரைக்கு தடைபோடும் நெல்லி!!!

கர்ப்பகாலத்தில் எடுத்துக் கொள்ளும் சத்து மாத்திரைகளின் புண்ணியத்தால் பெண்களுக்கு சரசரவென வளரும் கூந்தல், பிரசவத்துக்குப் பிறகு கொட்ட ஆரம்பித்து விடும். `அம்மாவோட முகத்தை குழந்தைப் பார்க்க ஆரம்பிச்சவுடனே, இப்படித்தான் அதிகமா முடி கொட்டும்’…என்றொரு காரணத்தைச் சொல்வார்கள். ஆனால், பாலூட்டும் தாய்மார்களுக்கு அந்த சமயத்தில் அதிகச்சத்து தேவைப்படும்.அதை எடுத்துக் கொள்ளத் தவறும் போது, சத்துக் குறைபாடு காரணமாக கூந்தல் உதிரும் என்பதே உண்மை. எனவே, பிரசவத்துக்குப் பிறகு, ஆரோக்கியமான உணவுடன் கூந்தல் பராமரிப்பையும் மேற்கொண்டால்,,, நாற்பது வயதிலும் நரை ... Read More »

உடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்!!!

உடலுக்கு ஆற்றலை தரும் சப்போட்டா பழம்!!!

கண்களுக்கு நல்லது: சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி படி வைட்டமின் ஏ வை  கொண்டுள்ளதால் பார்வையை பலப்படுத்துவதோடு முதுமையை தள்ளிபோடும் ஆற்றலை வழங்குகிறது. ஆதலால் தினமும் ஒரு சப்போட்டா பழம்  எடுத்துக்கொள்ளலாம்.. இதய பாதுகாப்பு:  இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்றபடி பாதுகாக்கும் தன்மையை சப்போட்டா பழம் கொண்டுள்ளது என அமெரிக்காவில்  மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.  தூக்கமின்மையால் ... Read More »

நம்பினால் நம்புங்கள்!!!

நம்பினால் நம்புங்கள்!!!

* உலகிலேயே மிகப்பெரிய பாறை ஆஸ்திரேலியாவில் உள்ளது. ‘உலுறு’ என்ற இப்பிரமாண்ட பாறை 114 மாடிக் கட்டிடத்தை விடவும் உயரமானது. * சில மேகங்களின் உயரம் 16 கிலோமீட்டரை விடவும் அதிகம்! * வாளை மீன்கள் வாயு வெளிப்படுத்துவதன் மூலமாக தகவல் பரிமாறிக் கொள்கின்றன. * குதிரைகளால் ஒரே நாளில் 160 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய முடியும். * கைரேகையைப் போலவே நாக்கின் ரேகைகளும் தனித்துவம் மிக்கவை. * ஈபிள் டவரின் 1665 படிகளில் ஒருவர் ... Read More »

வெயிலில் சருமம் பாதிக்காதிருக்க வழிகள்!!!

வெயிலில் சருமம் பாதிக்காதிருக்க வழிகள்!!!

கோடைகாலத்து உஷ்ணம் அழகை அதிகம் நேசிப்பவர்களுக்கு சிறிது அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் வசதி வாய்ப்புள்ளவர்கள்,அதிக காலம் கோடை வாசஸ்தலங்களில் போய் தங்கிவிடுகிறார்கள். குளிர்பிரதேசங்களை தேடிப்போகாமலே, அழகை பராமரிக்க வாய்ப்பிருக்கிறது. கோடைகாலத்தில் அதிக வியர்வை வழிவதும், சருமம் கறுப்பதும்தான் முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன. அதை சமாளிக்க இதோ வழி சொல்கிறோம்.. * வெயில்தாக்கத்தால் சருமம் கறுக்காதிருக்க சன்ஸ்கிரீன் பொருட்களை பயன்படுத்தவேண்டும். கிரீம் வகையிலான அதனை சருமத்தில் பூசிக்கொண்டால் அலட்ரா வயலெட் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம். * வெளியே ... Read More »

Scroll To Top