இது மாம்பழ சீசன். அதிகமான அளவில் மாம்பழங்களை பார்த்தவுடன் கணக்கு தெரியாமல் சாப்பிட்டுவிட்டு வயிற்றுவலி, கழிச்சல், வாந்தி என கஷ்டப்படுவதுண்டு. மாம் பழம் உண்ணும்பொழுதுபால் அதிகம் சாப்பிடவேண்டும் என்பது சித்த மருத்துவ விதி. புளிப்புள்ள மாம்பழங்களை உண்ணும்பொழுது சிறுநீரக கற்கள் தோன்றலாம். பெரும்பாலும் இனிப்பான, நார் அதிகமில்லாத மாம்பழங்களை உண்பது நல்லது. இல்லையெனில் வயிறு ஊதல், பசி மந்தம், கழிச்சல் ஆகியன உண்டாகும். ரத்தமூலம் உடையவர்கள் அதிகம் மாம்பழம் உண்பதை தவிக்க வேண்டும். தாய்மைக்கு அங்கீகாரமாக வடிவமைக்கப்பட்ட ... Read More »
Monthly Archives: January 2016
புரிந்தது தெளிந்தது!
January 24, 2016
ஒரு துறவி தன் சீடனுடன் குடிலில் அமர்ந்திருந்தார். ஒரு குடும்பஸ்தர் வந்தார். “”சுவாமி! எனக்கு ஆயிரம் கடன்கள். பெண்ணுக்கு கல்யாணம் செய்ய வழியில்லை.உடல்நிலையும் சரியில்லை. இந்த பிரச்னை தீர யோசனை கூறுங்கள்…” என்றுகேட்டார். “”அப்பனே! இது விதிப்பயன். மாற்றலாகாது. பெருமாள் நாமத்தை மனதார உச்சரி;கஷ்டங்களைக் குறைக்கலாம்,” என்றார் துறவி. வந்தவர் விரக்தியாய் கேட்டார். “”உங்கள் கூற்றுப்படி, விதிப்படி தான் எல்லாம் நடக்குமென்றால், பெருமாளை துணைக்கு அழைப்பானேன்! அவன் நாமத்தை சொல்லுவானேன்!”. குரு சிரித்தார். “”மகனே! பெருமாள் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் எடுத்தார். மனிதரூபத்தில் இருந்தார். அவர் நினைத்தால் எல்லாவற்றையும் மாற்றியிருக்க முடியும். ... Read More »
அச்சமில்லை!!!அச்சமில்லை!!!
January 24, 2016
பண்டாரப் பாட்டு அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், 1 அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. நச்சை வாயி லேகொணர்ந்து ... Read More »
கிரேட் எஸ்கேப்!!!
January 24, 2016
இந்தியாவை விட்டு வெளியேறி உலக நாடுகளின் துணையுடன் இந்திய சுதந்திரத்தினைப் பெறவேண்டும் என்ற நோக்கோடு 13.06.1940ஆம் ஆண்டு காந்தியைச் சந்தித்தார். புதிய முறையில் இந்திய சுதந்திரத்தைப் பெற முயற்சிப்பதாகக் கூறினார். காந்தி வாழ்த்தினார். இந்நிலையில் கல்கத்தாவில் ஹால்வில் என்பவருடைய நினைவகத்தை அகற்றும் போராட்டத்தில் போஸின் புதிய கட்சி ஈடுபட்டது. அந்த விவகாரத்தில் போஸ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தாம் உண்ணாநோம்பு இருக்கப்போவதாக பிரிட்டிஷ் உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதினார். பிரிட்டிஷ் அரசு அவரை விடுதலை செய்தது. தன்னைப் ... Read More »
அயர்லாந்தில் போஸ்!!!
January 24, 2016
அயர்லாந்து தந்த உற்சாகம் இந்நிலையில் பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்டிருந்த அயர்லாந்தில் டிவெலரா தலைமையில் புரட்சிவெடித்தது. அயர்லாந் சுதந்திரம் பெற்றது. இதனை அறிந்த போஸ் அயர்லாந்தின் இடத்தில் இந்தியாவை வைத்துக் கற்பனைசெய்து மகிழ்ந்தார். அங்கு நடந்த புரட்சியைப் போல் இந்தியாவிலும் நடைபெறவேண்டும் என்று விரும்பினார். செயல்பட்டார். கைதுசெய்யப்பட்டு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை பெற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் காந்தி உப்புச் சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். மக்கள் ஆதரவினைப் பெற்றார். கல்கத்தாவில் நகராட்சி மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் சிறையிலிருக்கும் போஸின் ... Read More »
கட்சியும் பதவியும்!!!
January 24, 2016
கட்சியும் பதவியும் காந்தியின் போராட்டங்களில் சி.ஆர். தாஸ்க்கு நம்பிக்கையில்லை. சட்டசபைத்தேர்தலில் இந்தியர்கள் பங்கேற்கவேண்டும் என்று அவர் காந்திக்குக் கோரிக்கைவிடுத்தார். காந்தி அதனை ஏற்கவில்லை. காந்தி கோஷ்டி – தாஸ் கோஷ்டி என்ற இரு பிரிவாக இந்தியர்கள் பிரிந்தனர். நேரு இரண்டு கோஷ்டிக்கும் நடுவில் நின்றார். தாஸ் சுயராஜ்ஜியக் கட்சியினைத் தொடங்கினார். ஃபார்வர்ட் என்ற பிரிட்டிஷாரைகில நாளிதழினைத் தொடங்கினார். அப் பத்திரிகையின் ஆசிரியராகப் போஸை நியமித்தார். இச்சூழலில் மத்திய சட்டசபை மற்றும் மாகாண அசெம்ப்ளிக்கான தேர்தல் வந்தது. அதில் ... Read More »
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!!!
January 23, 2016
எப்படி உலகம் முழுக்க இன்னமும் தீர்க்கப்படாத பல மர்மங்கள் விடையில்லா கேள்விகளுடன் உறங்குகிறதோ… அதேப்போல நம் இந்தியாவிலும் பல மர்மங்கள் உண்டு. எண்ணிலடங்கா மர்மங்கள் இருந்தாலும் இந்தத்தொகுப்பு டாப் லிஸ்ட் மட்டுமே… இது முழுக்க முழுக்க தொகுக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமேயொழிய எனது தனிப்பட்ட கருத்துக்கள் எதுவும் இதிலில்லை. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எப்போதுமே மிதவாதத்துக்கும் தீவிரவாதத்துக்குமான ஆதரவில் இளைய சமுதாயம் இரண்டாவதில்தான்அதீத ஆர்வமும் ஆதரவும் கொண்டிருக்கும்.நேதாஜி என்ற பேரைக்கேட்டாலே இன்றளவும் இளைஞர் கூட்டம் எழுச்சியடைவதற்கான வரலாறு மிகப்பெரியது. ... Read More »
இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படாத மனிதர் நேதாஜி!!!
January 23, 2016
நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல …” என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்…. சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள் சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்., அவர் மாபெரும் ... Read More »
ஜனவரி 23:இன்று நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பிறந்த தினம்!!!
January 23, 2016
கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தம்பதிக்கு ஒன்பதாவது மகனாக பிறந்தார் போஸ். இளம் வயதிலேயே படிப்பில் பயங்கர சுட்டி. மெட்ரிகுலேசன் தேர்வில் இரண்டாம் இடம் பெற்று பலரை வியக்க வைத்தார். மாநில கல்லூரியில் இங்கிலாந்தை சேர்ந்த ஓடென் எனும் வரலாற்று பேராசிரியர் ,”ஆங்கிலேயர்கள் தான் இந்தியர்களை விட மேலானவர்கள். அதனால் இந்தியர்கள் எப்பொழுதும் எங்களிடம் இருந்து விடுதலை பெற முடியாது ! இந்த யதார்த்தத்தை உணரவேண்டும் !” என்று பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவரை ... Read More »
சபாஷ் ‘சுபாஷ்’
January 23, 2016
இளைஞர்களிடம், ‘உங்களுடைய ரத்தத்தை என்னிடம் தாருங்கள். நான் உங்களுக்கு விடுதலை வாங்கித் தருவேன்’’ என்று விடுதலைக்கு ரத்தத்தை விலைபேசி ஆண்களையும் பெண்களையும் திரட்டி, ஒரு ராணுவத்தை உருவாக்கி, ஒன்பது நாடுகளின் ஆதரவினைப் பெற்று பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடிய வீரத்திருமகன் நேதாஜி. நேதாஜி என்றால் இந்தியில் “மரியாதைக்குரிய தலைவர்“ என்று பொருள். முகம்மது ஜியாவுதீன், ஓர்லாண்டோ மசோட்டா, கிளாசி மாலங், பகவான்ஜி, கும்நாமி பாபா, சவுல்மரி, இச்சிரோ உக்குடா போன்ற பல பெயர்களில் உலகின் பல பகுதிகளில் நேதாஜி உலவியிருக்கிறார். ... Read More »