Home » 2016 » January (page 13)

Monthly Archives: January 2016

ஆண்டவன் கட்டளை

ஒரு போர்ப்பாசறையில், அன்றைய தினம் நடந்த போர் பற்றி வீரர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது படைத்தலைவர் அங்கு வந்தார். ஒரு வீரன் அவரிடம்””தலைவரே! இன்றைய போரில் வீரர்கள் ஆற்றிய வீரச்செயல்கள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்,” என்றான். “”அப்படியா! இன்று சாதனை புரிந்தவர் யார்?” “”தலைவரே! நம் வீரன் மல்லமாறன், எதிரிகளுடன் கடுமையாகப் போராடி கடுமையாக காயமடைந்தான். ஆனாலும், வலியைப் பொருட்படுத்தாமல் போரிட்டான். அவனே சாதனையாளன்,” என்றான் ஒருவன். “”இது ஒன்றும் பெரிய சாதனையல்ல! வேறு ஏதாவது சொல்லுங்கள்,” என்ற ... Read More »

5 Success Tips
கல்யாணமான புதுசு

கல்யாணமான புதுசு

கல்யாணமான புதுசு. மாமியார் வீட்டுக்கு விருந்துக்குப் போயிருந்தப்போ, “மாமா” “என்ன மாப்ளே…?” என்றார் என் மாமனார். “இல்லை…உங்ககிட்ட ஒண்ணு கேட்கணும்” என இழுத்தேன் நான். “அட எதுக்கு வெட்கப்படுறீங்க…சும்மா கேளுங்க” “இல்லை… நான் இருக்குற வீட்ல இருந்து ஆபிஸ் ரொம்ப தூரம்…ஒரு பைக் வாங்கிக் கொடுத்தீங்கன்னா……” “அதுக்கென்ன வாங்கி கொடுத்துட்டா போச்சி…இதை கேக்குறதுக்கா தயங்குனீங்க?” “இன்னொன்னும் பண்ணனும்” “இன்னொண்ணா…சொல்லுங்க” “பெட்ரோல் போடுறதுகு மாசம் ஒரு 1500 ரூபாயும் கொடுத்தீங்கன்னா…..” கடகட வென சிரித்துவிட்டு சொன்னார் என் மாமனார், ... Read More »

அன்பான விவசாயி!!!

அன்பான விவசாயி!!!

 அன்பான விவசாயி முன்னொரு காலத்தில் கோதை கிராமம் என்ற சிற்றூரில் கண்ணப்பன் என்ற விவசாயி இருந்தான். ஒருநாள், அவன் தன் வயலில் ஆழமாக உழுது கொண்டிருக்கும் போது அவனது ஏர் பழுதடைந்துவிட்டது. பழுதடைந்த ஏரை சரி செய்ய வேண்டி, அந்த ஊரைச் சேர்ந்த தச்சரை அணுகினான் கண்ணப்பன். தச்சரோ கண்ணப்பனிடம் ஏரை சரி செய்ய நூறு ரூபாய் வேண்டுமென்று கேட்டார். உடனே கண்ணப்பன், “”தச்சரே! நானோ ஏழை விவசாயி, கடன் வாங்கித்தான் விவசாயம் செய்து வருகிறேன். கடந்த ... Read More »

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை!!!

கண்ணன் – என் விளையாட்டுப் பிள்ளை!!!

கேதாரம் – கண்டஜாதி – ஏகதாளம் ரசங்கள்: அற்புதம், சிருங்காரம் தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; பாதி தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்; என்னப்பன் என்னையன் என்றால் அதனை எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் – சற்று மனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். ... Read More »

அருகம்புல்!!!

அருகம்புல்!!!

அருகம்புல் சாறின் மருத்துவ குணங்கள் :- அருகம்புல் இயற்கை நமக்களித்த மிகச்சிறந்த மருந்தாகும். இது எளிதில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியது. பல நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் இதற்கு உள்ளது. அருகம்புல் சாறு எடுத்து உட்கொண்டால் உடலில் ஏற்படும் பல வியாதிகளுக்கு விடைகொடுக்கலாம். கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் அருகம்புல் எளிதாகக் கிடைக்கிறது.. இதைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் ... Read More »

ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்க சில எளிய டிப்ஸ்…

ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்க சில எளிய டிப்ஸ்…

உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, இத்தகைய அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள். அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க நினைக்கும் ... Read More »

இந்துஸ்தான் புரட்சிப்படை!!!

இந்துஸ்தான் புரட்சிப்படை!!!

கல்கத்தா நகரின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்த நகரம் சிட்டகாங். 1929 ஆம் ஆண்டில் சிட்டகாங் நகரில் வாழ்ந்த வந்த சில இளைஞர்கள் இந்திய தேசத்தின் விடுதலைப் போரில் மிகுந்த ஆர்வம் கொண்டார்கள். புரட்சியை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியாவிற்கு விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. புரட்சியை ஏற்படுத்த ஒரு அமைப்பு வேண்டுமல்லவா? எனவே புரட்சி எண்ணம் கொண்ட இந்த இளைஞர்கள் இந்துஸ்தான் புரட்சிப் படை எனும் ஒரு தீவிரவாத அமைப்பை துவக்கினார்கள். இப்படையின் தளபதியாக ... Read More »

மதமும் ஒழுக்கமும்!

மதமும் ஒழுக்கமும்!

பாமரனைப் பண்புள்ளவனாகவும் பண்புள்ளவனைத் தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே மதம் எனப்படும். மனிதன் முடிவில்லாத பிரம்மாண்டமான ஒரு வட்டம் போன்றவன். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியாக விளங்கும் பரிதி எங்குமில்லை. ஆனால் அந்த வட்டத்தின் மையம் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் அமைந்திருக்கிறது கடவுள் பிரம்மாணண்டமான ஒரு பெரிய வட்டம் போன்றவர். அந்த வட்டத்தின் சுற்றளவுப் பகுதியான பரிதியும் எங்கும் கிடையாது. ஆனால் அந்த வட்டத்தின் மையம், எங்கும் எல்லா இடங்களிலும் அமைந்திருக்கிறது. கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இலக்கணம் இதுதான். ... Read More »

போஜராஜன்!!!

போஜராஜன்!!!

போஜராஜாவுக்கு ஒரு நாள் விபரீத யோசனை தோன்றியது. காளிதாசன் வாயிலிருந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாகிவிட்டது. நான் காலமான பிறகு ஒரு சரம சுலோகம் எழுதுவான் அல்லவா? அதை மற்றவர்கள் கேட்பார்களே தவிர, நான் எப்படிக் கேட்க முடியும்? என்ற எண்ணம் வந்துவிட்டது. உடனே காளிதாசரை அழைத்து வரச் சொன்னான். சரம சுலோகத்தை நான் இப்போதே கேட்க வேண்டும் என்றான். என் வாக்கினாலே ஒன்று பாடினால் அப்படியே நடந்துவிடும். அதனால் நான் சரம சுலோகம் பாட முடியாது. ... Read More »

Scroll To Top