Home » உடல் நலக் குறிப்புகள் » ஞாபக சக்தியைக் கூட்டும் பப்பாளி!
ஞாபக சக்தியைக் கூட்டும் பப்பாளி!

ஞாபக சக்தியைக் கூட்டும் பப்பாளி!

ஞாபக சக்தியை உண்டாக்கும்…

நோய் எதிர்ப்பைக் கூட்டும் பப்பாளி!

–––––––––––––––––––––––

பப்பாளி பழத்தின் பல்வேறு நன்மைகள் பற்றி நேற்று பார்த்தோம்… அதன் தொடர்ச்சியாக மேலும் சில நன்மைகளைப் பற்றி இன்று பார்ப்போம்.

‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில், குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே, தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.

பப்பாளி இலைகளின் பொடி, யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும், மருந்தாக விளங்குகிறது. ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதில் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும், நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்மணிகள், தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால், மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள், எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும், ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில், நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top