Home » சிறுகதைகள் » காலை வெட்டிய வீரம்!!!
காலை வெட்டிய வீரம்!!!

காலை வெட்டிய வீரம்!!!

ஒரு நாள் மாலை நேரம் அரண்மனை தோட்டத்தில் அரசரும் பெரிய தனவந்தர்களும் படைத் தளபதிகளும் கூடி இருந்தனர்.

ஒவ்வொருவரும் அவர்கள் சண்டையில் செய்த வீர தீரச் செயல்கள் பற்றி பேசிப் பெருமைபட்டுக் கொண்டிருந்தனர் . அப்போது தெனாலி ராமனும் அங்கு இருந்தான் . அவர்கள் பேச்சையும் கேட்டுக் கொண்டு இருந்தான் . அவர்கள் பேச்சு அவனுக்கு பிடிக்கவில்லை.

போங்கள் அய்யா , நீங்கள் எல்லாம் என்ன பிரமாதமாக சாதித்து விட்டீர்கள் . நானும் போர்களம் சென்று இருக்கிறேன் . அதில் ஒருவனுடைய காலை என் வாளால் வீடி வீழ்த்தி விட்டேன் என்றான்.

அதைக் கேட்ட அனைவரும் தெனாலிராமன் கூடவா போர்க்களம் சென்றிருப்பான் என்று யோசிக்க தொடங்கினர்.

பின் அதில் ஒருவன் காலை வெட்டியதாக சொல்கிறாயே அவன் தலையை வெட்டு வதற்கென்ன என்று கேட்டான்.

அதைக் கேட்ட தெனாலிராமன் தலையைத் தான் எனக்கு முன்பே எவனோ வெடிவிட்டானே ! நான் என்ன செய்ய என்று சொன்னதுதான் தாமதம் . மன்னர் உட்பட அனைவரும் கொல்லென சிரித்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top