Home » பொது » குழந்தைகளை `எரிக்கும்’ தின்பண்டங்கள்!
குழந்தைகளை `எரிக்கும்’ தின்பண்டங்கள்!

குழந்தைகளை `எரிக்கும்’ தின்பண்டங்கள்!

டி.வி.யில் காட்டப்படும் அநேக விளம்பரங்களில் குழந்தைகளே நடிக்கிறார்கள். விளம்பரங்களில் காட்டபடும் உணவு பொருட்களில் பெரும்பாலும் குழந்தைகளை குறி வைத்தே தயாரிக்க படுகின்றன.

அப்படி காட்டபடும் பெரும்பாலான தின்பண்டங்கள், எண்ணையில் பொரிக்கபட்ட… உருவாக்கபட்ட ஸ்நாக்ஸ் அயிட்டங்களே. இவை அனைத்துமே குழந்தைகளின் உடலை கெடுக்கக் கூடியவை. இன்றைய நாகரீக உலகின் நவீன தின்பண்டங்களான இவை, புதிய வடிவங்களில் பாக்கெட் செய்யப்பட்டு பல நாட்கள் கடைகளில் தொங்கவிட படுகின்றன. ரசாயனக் கலவையின் துணையோடுதான் உற்பத்தி செய்யப்படுகிறது.

குளிர்பானங்களில் பூச்சி மருந்து தன்மை இருந்ததை மீடியாக்கள் முன்பு வெட்ட வெளிச்சமாக்கின. அதன்பின்னர், குளிர் பான நிறுவனங்கள், தங்கள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முன்வந்தன. ஆனால் தற்போது லிற்பனையாகும் உணவு பொருட்களான நொறுக்குத் தீனிகள் பலவும் குழந்தைகளின் உடலை கெடுக்கும் உணவுகளாக இருந்தும் அவை பெருமளவு தயாரிக்கபடுகின்றன.

தற்போது மருத்துவர்கள் இந்த மாதிரியான ஸ்நாக்ஸ் அயிட்டங்களை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர். இதற்கு காரணமாக அவர்கள் சொல்லுவது, `இந்த நொறுக்குத் தீனிகள் அனைத்தும், மெழுகு கலவையால் உற்பத்தி செய்யப்படுகின்றன! இதை குழந்தைகள் சாப்பிடுவதால் சுகாதாரத்தை சிதைத்து விடும். மேலும் இந்த உணவு பொருட்கள் புதிய பல்வேறு நோய்களை உற்பத்தி செய்யும் விஷத் தன்மையுள்ளவை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.’ என்கிறார்கள்.

ஆனால், டிவியில் வரும் விளம்பரங்களின் கவர்ச்சியை நம்பி, குழந்தைகள் அந்த உணவுகளை கேட்டு அடம் பிடிக்கும். பெரியவர்களும் நம்பி ஏமாறுவார்கள். உதாரணமாக, அந்த தின்பண்டங்களை எரித்தால் நீங்களே அதை கண்கூடாக பார்க்க முடியும். மெழுகுவர்த்தி போல் அவை எரியும்! இதை குழந்தைகள் சாப்பிட்டால் என்னவாகும் என்பதை நினைத்து பாருங்கள்.

இந்தமாதிரியான தின்பண்டங்களுக்கு பதிலாக நீங்களே வீட்டில் வித விதமாக, கலர் கலராக தின்பண்டங்களை தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்து சாப்பிட வையுங்கள். குறிப்பாக சத்தான உணவுகளை தயாரித்துக் கொடுத்து, சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கிக் கொடுங்கள்.

உறுதியான உடலும், சுறுசுறுபான மனமும் இருக்க உணவு அவசியமாகிறது. ஆனால் அந்த உணவில் மாவு பொருள், புரதம், கொழுப்பு ஊட்டச் சத்துகள், தாது பொருட்கள் அளவான நிலையில் சமச்சீர் உணவாக இருக்க வேண்டும்.

சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்பு பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் பி குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும்.

சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை கொடுக்கும். இவை குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவு பொருட்கள் உடலுக்கு சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top