Home » பொது » சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து வதந்திகள்??/
சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து வதந்திகள்??/

சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து வதந்திகள்??/

சுபாஷ் சந்திரபோஸின் மரணம் குறித்து பற்பல வதந்திகள் உலவின. பல மர்மங்கள் இன்றும் வெளிச்சத்திற்கு வரவில்லை. நூல்களிலும் இணைய தளங்களிலும் பலர் கொடுத்திருந்த தகவல்களை வரிசைப்படுத்தியுள்ளேன்.

  • தாய்வானின் அதிகாரிகள் விமான விபத்து நடந்ததாகச் சொல்லப்பட்ட தேதியில் அப்படியொரு விபத்து தாய்வானின் நடந்ததாக எந்தவித ரெக்கார்டும் இல்லை.
  • பிரிட்டிஷ் இண்டெலிஜென்சியின் ரகசியக்கோப்புகளில் பிரிட்டிஷ் பிரைம் மினிஸ்டர் கிளமெண்ட்ஸ் அட்லீ ‘’ போஸ் இப்போது எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்’’ என்று 1945ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவெடுத்ததாகப் பதியப்பட்டிருக்கிறது.
  • CIA எனப்படும் சென்ட்ரல் இண்டெலிஜென்ஸ் ஏஜென்சி 1950ஆம் ஆண்டு வரையிலும் போஸ்க்கான தேடுதல் வேட்டையைத் தொடர்ந்திருக்கிறது. அவர் இறந்ததாகக் கூறிய நிலையில் அவரை ஏன் தேட வேண்டும்?
  • 1946ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்த கேலாச்சர் என்பவர் ஒரு பொதுமேடையிலேயே அப்போதைய அயர்லாந்து நாட்டின் தலைவர்  டிவெலராவை டப்ளின் நகரில் போஸை வரவேற்றதாக விமர்சித்திருக்கிறார். டிவெலராவும் இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காதது கவனித்தில் கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமில்லாமல் 1946ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவிற்கு வந்திருந்த டிவெலரா பத்திரிக்கையாளர்களிடம் ‘’நான் இங்கே போஸை சந்திப்பேன் என்று எதிர்பார்த்து வந்தேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்! 1945ஆம் ஆண்டு போஸ் இறந்திருந்தால் 1946ஆம் ஆண்டு டிவெலரா ஏன் அவரைச் சந்திக்க விரும்பவேண்டும்,
  • பிரிட்டிஷ் இண்டெலிஜென்சின் ஒரு ரிப்போர்ட்டில் போஸ் எங்கிருக்கிறார் என்பது நேருவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதனால்தான் அவர் வெளியுறவுத்துறையை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விஜயலெட்சுமி பண்டிட்டை ரஷ்யாவுக்கான இந்தியத் தூதராக நியமித்திருக்கிறார் என்று குறிப்பெழுதப் பட்டிருப்பதாக ஒரு தகவலும் உண்டு.
  • ரஷ்யன் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் புரட்சியாளர் அபானி முகர்ஜீ என்பவரின் மகன் கோகா என்பவரை இந்தியத்தூதர் டாக்டர். சத்யநாராயணா சின்ஹா சந்தித்தபோது, அவரிடத்தில் கோகா தனது தந்தையும் போஸ்வும் சைபீரியாவில் சிறைக்கைதிகளாகப் பக்கத்துப் பக்கத்து அறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கே போஸ்க்குச் சிறை ரெக்கார்டுகளில் ‘கிளாசி மாலங்’ என்று பெயரிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். சிறையிலிருந்து போஸ் பலமுறை நேருவுக்குத் தான் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாகவும், தன்னை மீட்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கடிதம் எழுதியிருக்கிறார்.
  • போஸின் இறப்பு மர்மம் குறித்த விசாரணைக்கு இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி முகர்ஜி கமிஷனில் நிசாமுதீன் என்பவர் அளித்த வாக்குமூலத்தில் விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட விமானத்தில் கேப்டன் ஏக்ரம், லால்சிங் மற்றும் சில பெங்காளி வீரர்களும், மூன்று ஜப்பானியர்களும் மட்டுமே அதில் பயணித்ததாகவும், போஸ் அதிலில்லை என்றும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
  •  பிரிட்டனில் 25.10.1945ஆம் நாள் காபினட் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் கிளமண்ட அட்லீ தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டிஷ் அரசே பதிப்பித்த ஆட்சி மாற்றம் என்ற நூலில் இந்தியாவில் ஒரே எதிரியாகப் போஸ் வருணிக்கப்பட்டார். அவரைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து என்ன தண்டனை அளிப்பது என அமைச்சரவை விவாதித்துள்ளது. ஆக போஸ் இறந்து விட்டது உண்மையாக இருக்குமானால் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாதம் கழித்து பிரிட்டிஷ் அரசின் அமைச்சரவை போஸைக் கைது செய்வது பற்றி எப்படி விவாதித்திருக்க முடியும்?
  •  பிரிட்டிஷ் – இந்திய அரசு பிரிட்டனில் உள்ள அரசுக்கு 23.10.1945 ஆம் நாள் அனுப்பிய கடிதத்தில் போஸைக் கைது செய்தால் நாடே கொந்தளிக்கும் “அவர் எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும். அவரை சரண் அடைய வற்புறுத்தாதீர்கள்” என்று எழுதி இருந்தது.
  •  21.01.1967ஆம் நாள் போஸின் பிறந்த நாள் வருவதற்கு இரண்டு நாள் முன்பே முன்னாள் மத்திய அமைச்சரும் ஜாதவ்பூர் பல்கலைக் கழகப் பேராசிரியருமான சமர் குகா பிறந்த நாள் வாழ்த்து கூறி போஸ்க்கு எழுதிய மடலில் சூரியன் உதிப்பதற்காக எல்லோரும் காத்துக் கொண்டுள்ளோம் என அவரின் மீள்வருகை பற்றிச் சூசகமாக்க் குறிப்பிட்டார். நேரு 1964ஆம் ஆண்டு மறைந்த பின்னர் போஸ் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள சிந்திதிருக்கக் கூடும் என்பதற்குப் பேராசிரியரின் கடிதமே சாட்சியமாகும்.
  •  நேரு, காந்தி, ஜின்னா மூவரும் பிரிட்டிஷ் நீதிபதியிடம் உடன்பாட்டுக்கு வந்து போஸ் இந்தியாவுக்குள நுழைந்தால் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என்று உறுதி அளித்ததாக நீதிபதி கோஸ்லா கமிஷன் முன் போஸின் மெய்க்காப்பளராக இருந்த உஸ்மான் பட்டேல் பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார்.
  •  ஜஸ்டிஸ் முகர்ஜி கமிஷன் அறுபதாண்டுகள் சஸ்பென்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த நீதி விசாரணைக் கமிஷன் என்ற இடத்தில் 18.08.1945ஆம் நாள் விமான விபத்து நடக்கவே இல்லை. எனவே, விபத்தல் போஸ் இறந்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தீர்ப்பளித்தது.
  •  2001ஆம் ஆண்டு இந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு புலனாய்வு செய்து, ஆகஸ்ட் 18.08.1945 ஆம் நாள் போஸ் விமான விபத்தில் கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை திட்டமிட்டே கட்டப்பட்டது. பின் தொடரும் நேச நாடுகள் படைகள் பிடியில் இருந்து தப்பிக்கவே இக்கதை கூறப்பட்டது. போஸ் சோவியத் யூனியனுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறியது.

போஸ் ஒரு முறைதான் பிறந்தார். ஆனால், இரண்டுமுறை இறந்தார். நாம் நமது அரசாங்கத்தைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதாலும் அதற்காக நாம் நமது மனசாட்சியை அடகுவைத்துவிட முடியாது என்பதாலும் நேதாஜி இரண்டுமுறை இறந்ததாக நாம் நம்புவதில் தவறில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top