Home » பொது » ஒரு நிமிடம் கூட ஓயாதீர்கள்….

ஒரு நிமிடம் கூட ஓயாதீர்கள்….

எப்போதும் விரிந்து மலர்ந்து கொண்டே இருப்பது தான் வாழ்க்கை. யாருக்கும் பயனில்லாமல் சுருங்கி விடுவது தான் மரணம். தோல்வியின் மூலம் நாம் புத்திசாலிகள் ஆகிறோம். அதனால், எத்தனை முறை தோற்றாலும் குறிக்கோளை அடைவதற்கான முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள்.

ஒரு நிமிடம் கூட ஓயாமல், ஏதாவது ஒரு பணியைச் செய்து கொண்டே இருங்கள். அது தவறோ சரியோ, எதுவாக இருந்தாலும் பொருட்படுத்தவேண்டாம். நமது அகவாழ்க்கை சிறந்ததாகவும், தூய்மையானதாகவும் இருந்தால் மட்டுமே நாம் காணும் உலகமும் சிறப்பும் தூய்மையும் கொண்டதாக இருக்கும்.

சண்டையிடுவதோ, குறைசொல்வதோ தேவை இல்லை. நிலைமையைச் சீர்படுத்தி அமைக்க அவை சிறிதும் உதவப்போவதில்லை. நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சூட்சும தன்மையை அடைந்து நம்மிடமே வந்து விடும்.

– விவேகானந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top