சதுரகிரி மதுரை- ஸ்ரீவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது வத்திராயிருப்பு, வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பது தாணிப்பாறை. இதுவே சதுரகிரி மலையின் அடிவாரம். சதுரகிரி பிரமிப்பு, மகிழ்ச்சி, இன்பம், பக்தி, சித்தி முதலியனவற்றை உண்டாக்கக்கூடிய பிரமாண்டம். இயற்கை வளங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோயில்களும் நிறைந்த மலை. இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஆன்மிக சிறப்பும், பதினெட்டு சித்தர்களும், பற்பல ... Read More »
Monthly Archives: December 2015
அதிர்ஷ்டசாலி யார்?
December 28, 2015
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது… பிச்சைக்காரனை இழுத்து ... Read More »
குழந்தை
December 28, 2015
அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது. * கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது. * குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது. * அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது. * பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது. * ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. * புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது. * நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது. * நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது. * * 4,5 வயதுகளில் ... Read More »
கஷ்ட காலங்களில் கடவுள்
December 28, 2015
ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான். அது அவன் வாழ்க்கைப் பயணம். நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால்தடங்கள். அவனுக்கு ஆச்சரியம். சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக் கேட்டான். “என்னுடன் வருவது யார்?” “நான் கடவுள்” என்று அசரீரியாகப் பதில் வந்தது. அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ‘கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்’. பயணம் தொடர்ந்தது. அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில் ... Read More »
நிற்காத கடிகாரமாயிருப்போமா
December 27, 2015
நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன். காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான். அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. “”இது என்ன வாழ்க்கை! காலை முதல் மாலை வரை கண்மூடிக்கொண்டே இருப்பது! இரவானாலும் தூங்குவது! அதிகாலையில் கொட்டும் பனியில் குளத்திற்குப் போய் நீராடுவது! பூ பறிப்பது! சுவாமியை வணங்குவது! போதாக்குறைக்கு தனிமை வேறு! பேச்சுத்துணைக்கு ஆளில்லையே! ஏன் இங்கு வந்தோம்! இது வேண்டாமென்று ஊருக்குத் திரும்பிப் போனால் “இவ்வளவுதானா உன் வைராக்கியம்?’ என ஊரே கேலி ... Read More »
சும்மா ஒரு வெட்டி வேலை
December 27, 2015
சும்மா ஒரு வெட்டி வேலை: நான் விஜயகாந்த் அல்ல புள்ளிவிபரங்களை சரியாகச் சொல்ல…. தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை தோரயமாக 53722 இதில் பாதி பள்ளிகள் 25000 தனியாருடையது என எடுத்துக் கொண்டால் 25000 பள்ளிகள். அதில் 50 பிள்ளைகள் வருடத்துக்கு புதிதாக சேருவதாக வைத்துக் கொள்வோம் டொனேசன் மினிமம் 20000 வைத்துக் கொள்வோம் மொத்த டொனேசன் : 25000 * 50 * 20000 = 2500,00,00,000 ரூபாய் தமிழகத்தில் மட்டும் ஒருவடத்திற்கு. இது அனைத்தும் ... Read More »
மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை
December 27, 2015
மனதை தூய்மைப்படுத்த மலைக்குகைகளிலும், வனங்களிலும், புண்ணிய தலங்களிலும் அலைந்து திரிந்து பயனில்லை. மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக்கிய பிறகு, அவன் எங்கு வசிக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை. தூய்மையான உள்ளத்தில் கடவுளாகிய மெய்ப்பொருள் உள்ளபடி ஒளிர்கிறார். மனிதன் தன் மனதை தூய்மையாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கிருந்தே இதனைச் செய்ய முடியும். வேண்டியது மன வைராக்கியம் மட்டுமே. இதயத்தில் எப்போது வீணான ஆசைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றதோ, அப்போதே மனிதன் ... Read More »
இல்லற இன்பம்
December 26, 2015
ஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்தர் அறிவுரை கேட்க வந்திருந்தார். அவர் தயங்கித் தயங்கி கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை! என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! எப்பொழுதும் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை! எதிர்த்துப் பேசறா… எரிஞ்சு விழறா… கோபப்படறா… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்”. கபீர்தாசர் பார்த்தார். “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்?”, யோசனை செய்து பதில் சொல்கிறேன்! என்று ... Read More »
தெரிந்து கொள்ளுங்கள்
December 26, 2015
* வெயிட் போடலியா? வெயிட் போடலேன்னு, கேக், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களை இளம் வயதினர் சாப்பிடுவதுண்டு. இது பின்னாளில் கெடுதலாக அமையும். வயதுக்கு ஏற்ற எடை இல்லாவிட்டால், தானாக காட்டிக்கொடுத்துவிடும். அப்போது பசியெடுக்காது; சோர்வு வரும். அப்போது டாக்டரிடம் போய் “செக் அப்’ செய்வது தான் நல்லது. மற்றபடி, பாலாடைக்கட்டி, இனிப்பு தயிர், பருப்பு வகைகள், கடலைகள், பேரீச்சை வாழை, ஆப்பிள் போன்றவை சாப்பிட்டு வரலாம். அதுவே போதுமானது. * பசியெடுக்கலியே… சிலர் நன்றாக ... Read More »
அமெரிக்கப்பழமொழிகள்
December 26, 2015
ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான். உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான். செயலே புகழ் பேசும். உடையவனின் பாதம் வயலுக்கு உரம். சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்குகின்றன தோல்வி ஏற்படும் நேரத்தில்தான் மாவீர்ர்கள் உருவாகிறார்கள். ஆகவே, தொடர்ச்சியான பல பெரிய தோல்விகளே வெற்றி என்பதாக வர்ணிக்கப்படுகிறது. தீயோர் நேசத்தைவிட தனிமை மேலானது. வலிமை வாய்ந்த நண்பன் வலிமை மிகுந்த எதிரியாக மாறுவான். பல் இல்லாமல் இருந்தால்கூட ஒரு கலைமானால் சில காரியங்களைச் சாதித்துக் ... Read More »