Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » எரிகல் தாக்கி பெரிய பள்ளம்!!!

எரிகல் தாக்கி பெரிய பள்ளம்!!!

கேரளாவில் எரிகல் தாக்கி பெரிய பள்ளம் ஏற்பட்டதாக தகவல் : தேசிய பேரிடர் குழு விரைவு

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் எரிகல் தாக்கி பள்ளம் ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து தேசிய பேரிடர் தடுப்பு துறையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களின் வான்வெளியில் நேற்றிரவு மிகப்பெரிய எரிகோளம் காணப்பட்டதாகவும் ராட்சத வெடிகளை கொளுத்தியதுபோல் தோன்றிய அந்த எரிகோளம் மெதுவாக நகர்ந்து சென்றதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கரிமல்லூர் கிராமத்தில் இன்று ராட்சத எரிகல் விழுந்ததைப் போல் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு, சுற்றுப்புறத்தில் உள்ள தரைப்பகுதி கருகிப்போய் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து தேசிய பேரிடர் தடுப்பு துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top