Home » 2015 » January (page 2)

Monthly Archives: January 2015

சூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3

சூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3

டி.சி. கரண்ட் (DIRECT CURRENT) – ஏஸி கரண்ட் (ALTERNATIVE CURRENT) டி.சி கரண்ட் என்பது பாட்டரி மற்றும் சோலார் செல், கம்யூடேட்டர் டைப் டைனமோ ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். டிசி மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அதிக அளவு இழப்பு ஏற்படும். எனவே டி.சி மின்சாரம் இப்பொழுது வீட்டு உபயோகம், தொழில்சாலைகளுக்கு உகந்தது அல்ல. ஏ.சி மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் ... Read More »

இறந்துபோன பாட்டி அனுப்பிய எஸ்.எம்.எஸ்! அதிர்ச்சியில் உறைந்த பேத்தி

பிரித்தானியாவில் இறந்த பாட்டியிடமிருந்து பேத்திக்கு குறுஞ்செய்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வசித்த லெஸ்லி எமர்சன் (Lesley Emerson Age-59) என்கிற பெண் கடந்த 2011ம் ஆண்டு மரணமடைந்தார். அப்போது அவருடன், அவர் பயன்படுத்திய கைப்பேசி உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்பட்டன. இந்நிலையில் அவருடைய பேத்தி ஷெர்ரி (Sheri Emerson Age- 21), தனது பாட்டி இறந்து போனதை மறந்து, வழக்கம் போல நல்ல செய்திகளை தனது பாட்டியின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியை அனுப்பிக் கொண்டிருந்தாள். இதேபோல் அவள் அனுப்பிய செய்திக்கு ... Read More »

ஆவிகளை திருப்தி படுத்தும் விபசாரிகள் – சுடுகாட்டில் விசித்திரம்.!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆவிகளை மகிழ்விப்பதற்தாக திருவிழா நடத்தப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள மணிக்கண்காட் என்ற இடத்தில் இருக்கும் பழமையான சுடுகாட்டில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.வருடத்திற்கு ஒருமுறை ஆவிகள் திருவிழா என்ற பெயரில் இந்த கொண்டாட்டம் நடைபெறுகிறது. ஆவிகள் கோப ரூபமானவை என்பதால், அவை மேலும் பாவங்கள் செய்து பாவிகள் ஆகாமல் இருக்க, அவற்றின் கோபத்தை தடுத்து அவற்றை மகிழச்செய்து, சாந்தப்படுத்துவதே ஆவிகள் திருவிழா என்று கூறப்படுகிறது. ஆவிகளை எப்படி சந்தோஷப்படுத்துவது? காதல் ஏக்கத்திலும், பெண்ணாசையிலும் சிக்கித்தவிக்கும் ஆவிகள் ... Read More »

3 நாளில் மறுஜென்மம் எடுப்பேன் – சாமியார் விஷம் குடித்து தற்கொலை

தன்னிடம் தெய்வ சக்தி இருப்பதாகவும், இதனால் 3 நாளில் மறுஜென்மம் எடுப்பதாக கூறியும் சாமியார் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெல்காமில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 நாளில் மறுஜென்மம்  கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் அதானி தாலுகா கெம்பவாடா கிராமத்தில் உள்ள கணபதி மடத்தின் சாமியார் அனந்தசுவாமி (வயது 80). அவர் கடந்த 40 ஆண்டுகளாக கணபதி மடத்தின் சாமியாராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று ... Read More »

கண்டுபிடிக்கப்பட்டது வேற்றுக்கிரவாசிகளின் எலும்புக்கூடுகளா..?

வேற்று கிரக வாசிகளின் எலும்பு கூடுகள் கண்டு பிடிப்பு .உலகில் பரபரப்பி கிளப்பி வரும் வேற்று கிரகவாசிகளின் எலும்பு கூடுக்சல் மீட்க பட்டுள்ளன . இவ்விதமான் எழுமு கூடுகள் மக்கள் பார்வைக்கு பிரிட்டனில் வைக்க பட்டுள்ளன. Read More »

அமானுஷ்யன் – 121

ஜம்முவில் இருந்து டெல்லிக்கு கேசவதாஸுடன் வந்து சேர்ந்த அக்‌ஷயிற்காக ஆனந்த், மது, மகேந்திரன் மூவரும் காத்திருந்தனர். தம்பியை ஓடிச் சென்று கட்டியணைத்த போது ஆனந்த் கண்கலங்கி விட்டான். அக்‌ஷய் அண்ணனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே மதுவிற்கும், மகேந்திரனிற்கும் நன்றி சொன்னான். மகேந்திரன் சொன்னான். “பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதே. நீ செய்ததற்கு முன் நாங்கள் செய்ததெல்லாம் ஒரு விஷயமே அல்ல” உடனடியாக அக்‌ஷயை பிரதமர் சந்திக்க விரும்பியதால் அக்‌ஷய் விமான நிலையத்திலிருந்தே அனைவருடனும் பிரதமர் அலுவலகத்திற்குப் போனான். ... Read More »

அமானுஷ்யன் – 120

துப்பாக்கியை அமானுஷ்யனை நோக்கி குறி வைத்த சலீம் அந்த நேரத்தில் அடைந்த பெருமிதத்தை வாழ்நாளில் வேறெப்போதும் பெற்றதில்லை. அமானுஷ்யனைப் போன்ற எதிரியை வீழ்த்துவது என்பது அவன் சாதித்த மற்றெல்லா சாதனைகளுக்கும் சிகரமாக அமையப் போகிறது. அவன் பின்னால் வந்த காலடித்தடத்தை அவன் பொருட்படுத்தவில்லை. தலிபான் அல்லது போலீஸ்காரர்களில் ஒருவராகத் தான் இருக்கும். வந்த ஆளைப் பார்ப்பதில் ஒரு வினாடி அவன் கவனத்தைத் திருப்பினாலும் அந்த கவனச் சிதறலில் அவன் அமானுஷ்யனைத் தவற விட்டு விடக்கூடும். ஆனால் சுடுவதற்கு ... Read More »

அமானுஷ்யன் – 119

அக்‌ஷய் கண்களுக்கு நெடுஞ்சாலை தென்பட்ட போது ஆட்கள் சாலை முழுவதும் வழி மறித்து நிற்பதைப் பார்த்தான். அனைவர் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்தன. இப்படியே நேராகப் போய் நெடுஞ்சாலையைச் சென்றடைவது தற்கொலைக்கு சமானம் என்பது புரிந்தது. பின்னால் திரும்பிப் போகலாம் என்றாலோ சலீம் இருக்கிறான். அத்தனை பேர்களை சமாளிப்பதை விட சலீம் ஒருவனை சமாளிப்பது ஓரளவு சுலபம் என்றாலும் அவன் திறமைகளை அக்‌ஷய் பரிசோதிக்க விரும்பவில்லை. பாதையின் இரு பக்கங்களிலும் தனியார் நிலங்கள் முள்வேலிக்குள் பத்திரமாக இருந்தன. அங்கே ... Read More »

அமானுஷ்யன் – 118

ஜம்மு விமானநிலையத்தில் வந்திறங்கிய கேசவதாஸ் உடனடியாக வீரேந்திர நாத்திடம் போனில் பேசவில்லை. மாறாக அமானுஷ்யன் விவகாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தங்கள் சப் இன்ஸ்பெக்டர் ஒருவருக்குப் போன் செய்தார். “ஹலோ நான் கேசவதாஸ் பேசுகிறேன்” அந்த சப் இன்ஸ்பெக்டர் கேசவதாஸ் போனை எதிர்பார்க்கவில்லை. சற்று தடுமாறி விட்டு சொன்னார். “..சொல்லுங்கள் சார்” “அமானுஷ்யன் செத்து விட்டானா இல்லையா?” அமானுஷ்யன் விஷயத்தில் இது வரை கேசவதாஸ் நேரடியாக தலையிடாதவர் ஆனதால் சப் இன்ஸ்பெக்டர் மறுபடி தடுமாறியது போல் தெரிந்தது. “இல்லை சார்” ... Read More »

அமானுஷ்யன் – 117

கேசவதாஸ் அவசர அவசரமாக ஜம்முவிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் அமானுஷ்யன் கேஸைக் கவனித்துக் கொண்டு இருந்த அந்த உயர் அதிகாரியின் போன் வந்தது. “சார். பிரதமர் அலுவலகத்தில் உங்களைக் கூப்பிட்டு என்ன சொன்னார்கள்?” மிகுந்த எதிர்பார்ப்போடும், படபடப்போடும் வந்த கேள்விக்கு கேசவதாஸ் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை. அவருக்குள் கோபம் குமுறிக் கொண்டு வந்தது. மந்திரியோடு சேர்ந்து கொண்டு இது வரை என்னென்னவோ செய்து வந்த அந்த அதிகாரிக்கு அதை கேசவதாஸிடம் சொல்ல வேண்டும் என்று ... Read More »

Scroll To Top