Home » 2015 » January » 02

Daily Archives: January 2, 2015

பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா?

வல்லபூதம் வாலாஷ்டிக பேய்கள் | அல்லற் படுத்தும் அடங்கா முனியும் | பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் | கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் | பெண்களைத் தொடரும் ப்ரும்மராட்சதரும் | அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட || எங்கள் வீட்டு உதவியாளி சமீபத்தில் தன் பேத்திக்கு உடல் நலமில்லை என்று விடுப்பு கேட்டாள். விசாரிக்கையில் இரவு மாடி அறையில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தைக்கு திடீரென்று எக்கச்சக்கத்திற்குக் காய்ச்சலாம். அருகில் படுத்திருந்த இவள் தரையெல்லாம் என்றுமில்லாத அளவிற்கு சில்லிட்டுப்போய்விட்டதாய் ... Read More »

கடலுக்கு அடியில் 8000 அடி ஆழத்தில் நுண்ணுயிர் வாழ்க்கை கண்டுபிடிப்பு

சமீபத்தில் சர்வதேச சமுத்திர ஆய்வு திட்ட ஆய்வாளர்கள் ஜப்பான் கடற்கரை ஓரமாக கடற்படுக்கைக்குக் கீழே சராசரியாக 2 1/2 Km (2440 மீட்டர்) ஆழத்தில் நிலக்கரி படுக்கைக்களுக்கு (coal beds) இடையில் ஒரு கலமுடைய உயிரியின் ஆர்கனிசம்களைக் (microbes) கண்டு பிடித்துள்ளனர். இதுவே பூமியில் சமுத்திரங்களுக்குக் கீழே மிக ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட உயிர் வாழ்க்கையாகும். மேலும் இந்தக் கண்டுபிடிப்பானது நமது பிரபஞ்சம் அல்லது சூரிய குடும்பத்திலுள்ள ஏனைய கிரகங்களின் தரைக்குக் கீழே பக்டீரியாக்கள் உயிர் ... Read More »

சூரிய குடும்பம் – 5

இதுவரை சூரிய குடும்பத்தில் சூரியன்,பூமியின் துணைக்கோள் சந்திரன் மற்றும் தரை மேற்பரப்பை உடைய கிரகங்களான பூமி, புதன் ஆகிய அங்கத்தவர்களைப் பற்றிப் பார்த்தோம். இன்றைய தொடரில் வானில் சந்திரனுக்கு அடுத்து பிரகாசமாக அதிகாலை மற்றும் அந்தி மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஒரு நட்சத்திரம் போல் தென்படும் வீனஸ் எனப்படும் வெள்ளியைப் பற்றி பார்ப்போம். பொதுப்படையாக வீனஸ் என்பது ரோமானியார்களின் அன்பு,காதல் மற்றும் அழகுக்கான பெண் தெய்வத்தின் பெயராகும். – ஹபிள் தொலைக் காட்டியால் படம் பிடிக்கப் ... Read More »

பயிர் வட்டம் (Crop Circle) – 3

நம் ஊர்களிலுள்ள சில பிரபலமான கோவில்களில் மட்டும் மக்கள் கூட்டம் குவிந்தபடி இருக்க, பல கோவில்கள் ஆள் அரவமற்று அமைதியுடன் இருக்கின்றன. ஆனால் ஏதோ ஒரு தருணத்தில், எங்கோ ஒரு கோவிலில் திடீரென, ‘சாமி சிலை கண்களைத் திறந்தது’ என்றோ, ‘கண்ணீர் வடித்தது’ என்றோ தகவல் வரும். அப்புறம் யாரும் கிட்ட நெருங்க முடியாதபடி அந்தக் கோவிலில் கூட்டம் அலையடிக்கும். படிப்படியாக அந்தக் கோவிலுள்ள கிராமத்தை நோக்கிப் பத்து, நூறு, பத்தாயிரம், இலட்சம் என மக்களும், வியாபாரிகளும், ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 16

இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை. கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது. கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) ... Read More »

Scroll To Top