Home » 2015 » January » 11

Daily Archives: January 11, 2015

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 06

யார் ? இவர்கள் 06 வேற்றுக்கிரக வாசிகளின் வருகை ஆக்கிரமிப்பிற்கா? ஆராய்ச்சியிற்கா? வேற்றுக்கிரகவாசிகளின் எமது கிரகத்திற்கான வருகைக்குரிய காரணம் 1.ஆராய்ச்சி நாம் ஏனைய கிரகங்களைப்பற்றி அறிய முயற்சிப்பது போல் வேற்றுக்கிரகங்களில் நிலவும் பௌதிக அம்சம், உயிர்வாழ்வதற்கான சாதக நிலைகள் ஆகியவற்றை ஆராய்வதற்கான நோக்கத்தை எம்மிடம் தாராளமாக கொண்டுள்ளது போன்று ஏனைய கிரகங்களில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் எதிர்பார்ப்பதுவும் இயல்பானதே. ஆகவே ஆராய்ச்சி என்பதை அடிப்படையாகக்கொண்டு அவர்கள் எமது கிரகத்திற்கு வருகைதருகின்றனர் என்பது மிகவும் முதன்மையான காரணமாக அமைகின்றது. ஆனால் ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 05

யார் ? இவர்கள் 05 பறக்கும் தட்டை மக்கள் பார்த்து சில மணிநேரம் கழித்து இன்னோர் தகவலும் வெளியானது. நியூ மெக்சிகோ அருகே உள்ள ரோஸ்வேல் என்ற இடத்தில் வட்டவடிவமான (பறக்கும் தட்டு) பெரிய பொருள் ஒன்று நொறுங்கிக்கிடப்பதாக கூறப்பட்டது. நிறைகுறைந்த அதேநேரத்தில் உறுதியான உலோகத்தில் அந்த பறக்கும் தட்டு தயாரிக்கப்பட்டு இருந்தது. எனினும் அரசு தரப்பில் ஆரம்பத்தில் இச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது. அதேநேரம் அமெரிக்க விமானப்படை இது தொடர்பாக இரகசிய விசாரணை ஒன்றையும் உடனடியாக நடாத்தியது. ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 26

நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தை சிலர் துன்பங்களும் சிக்கல்களும் நிறைந்ததெனக் கூறுவர். ஆனால் நலமும் கேடும் கலந்து காணப்படுவதே இவ்வுலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் உண்டு. உண்மை யாதெனில், நாம் வெளியுலகில் காணும் கேடுகள் எல்லாம் நமது எண்ண விருத்திகளின் பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களுமே. புண்பட்ட மனமுள்ளவர்களுக்கு கேடுகள் வரினும் அவை கெடுதி நிறைந்தவையாகத் தென்படுவதில்லை. சிறு நேரத்து இன்பத்தை அடைவதற்கு பல துன்பங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை இருக்குமளவுக்கு மனிதனுக்கு துன்பமும் இருக்கும். ஆசை அறுபடுமளவுக்கு ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 04

குறிப்பிட்ட வேற்றுக்கிரகவாசிகளின் கிரகங்கள் வேறுபட்ட பௌதிக இயல்புகளை கொண்டிருத்தல். எமது பூமியிலுள்ள கருவிகள், உலோகங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையிலான கருவிகளை அவர்களுடைய விஞ்ஞானிகள் பயன்படுத்துவதன் மூலம் அவை எமது அவதானிப்பு சாதனங்களை தோற்கடிக்கக்கூடிய சாத்தியம் உண்டு என்று அமெரிக்காவின் பிரபல ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள். இதுவரை எமது விஞ்ஞானிகளால் மேற்படி வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான பாரிய தடயங்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமை இச்சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது. அவ் ஆய்வாளர்களின் கருத்திலிருந்து ஆராய்ந்து பார்க்கையில் சில விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாமென எண்ணுகிறேன். ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 03

யார் ? இவர்கள் 03 வேற்றுக்கிரகவாசிகளை கைது செய்ய முடியாமல் போனது ஏன்? பறக்கும் தட்டுக்களை கைப்பற்ற முடியாமல் போனது ஏன்? 1. உயர் தொழில்நுட்பவிருத்தி உயர்வேகம் ஏற்கனவே ஆய்வின் முற்பகுதியில் குறிப்பிட்டபடி பல அவதானிப்புகளிலும் பறக்கும் தட்டுகள் உயர்வேகம் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டது. வேகம் தொடர்பான அறிக்கைகள் அவதானிப்புகளை மேற்கொண்ட அனைத்து தரப்பானோர்களிடம் இருந்தும் பெறப்பட்டுள்ளமையானது பூமியில் உள்ள சாதனங்களின் வேகத்தை விட மேம்பட்டவை என்பது தெரிகிறது. பறக்கும் தட்டுக்கள் மட்டுமல்லாது வேற்றுக்கிரக வாசிகளும் மிகவும் ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 02

யார் ? இவர்கள் 02 சமீபத்தில் நிகழ்ந்த ஒரு பறக்கும் தட்டு சம்பவம் மேற்கத்தைய நாடுகளை கதிகலங்கச் செய்துள்ளது. கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை விமானிகளால் படம் பிடிக்கப்பட்டு தொலைக்காட்சி வாயிலாக செய்திகளாக உலகெங்கும் காண்பிக்கப்பட்டது. இச்சம்பவமானது 05/03/2004 இல் இடம்பெற்றது. வழக்கமாக விமானப்படை விமானங்கள் மூலம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வினோதமான பதினொரு ஒளிரும் பொருட்கள் வானில் தென்படுவதை பார்த்தவுடன் கண்காணிப்பு சாதனத்தில் பதிவு செய்யப்பட்டது. இதை அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பு அதிகாரி ஒருவர் உறுதிசெய்தார். மே ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 25

இந்து வேதங்கள், சிரார்த்த கிரியைகள் மூதாதையர்களின் ஆவிகளின் ஷேமத்துக்காக செய்யப்படுவதையும் அவைகளுக்கு உணவு பானம் முதலியன படைக்கப்படுவதையும் விவரிக்கின்றன. இந்த வழக்கங்கள் இந்துக்கள் மத்தியில் மாத்திரமன்றி, கிரேக்கர்கள், யூதர்கள், ஆஃப்ரிக்க ஆதிவாசிகள், பிரித்தானியர்கள் போன்ற வேறு பல இனமக்கள் மத்தியிலும் காணப்பட்டன. ஆங்கிலத்தில் இவ்வழக்கத்தை Libation என்று கூறுகிறார்கள். இறந்தவரை நினைத்து அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்பதும் அவருடைய நினைவாக ஏழைகளுக்குத் தானம் வழங்குவது போன்ற புண்ணிய கருமங்களைச் செய்வதும் இறந்தவருக்கு நன்மை பயக்கும் காரியங்களாகும். ... Read More »

புரியாத புதிர் – யார் ? இவர்கள் 01

யார்? இவர்கள் 01 முன்னுரை ஏன்? எதற்கு? எப்படி? இந்தக்கேள்விகளுக்கு விடை இல்லாமல் எதுவும் இல்லை என்ற நம்பிக்கையுடன் அறிவியல் வளர்ந்துள்ளது. உலகம் படைக்கப்பட்டது முதல் இன்று வரை அறிவியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி பிரமாண்டமானது; பிரம்மிக்கத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மூலமே இன்றைய நாகரிக மனிதனின் வாழ்வு வளம் பெற்றிருக்கிறது என்று கூறும் வண்ணம் அறிவியலின் ஆக்கிரமிப்பு மனித வாழ்க்கையோடு ஒன்றிவிட்டது. உலகையும் மனிதனையும் அறிவியலும் அதன் படைப்புகளும் ஆக்கிரமித்துக்கொண்டாலும் அவ்வப்போது நிகழும் சில அதிசய சம்பவங்கள் ... Read More »

Scroll To Top