நமக்கு போர்க்கருவிகள் என்றதுமே கத்தி, வேல், வாள், கேடயம், அரிவாள், வீச்சரிவாள் போன்றவையே நினைவுக்கு வரும். பழைய திரைப்படங்களை பார்த்தவர்களுக்கு “கட்டாரி’என்ற போர்க்கருவியையும் கூடுதலாக தெரிந்திருக்கலாம். அதையும் நாம் நேரில் பார்த்தவர்கள் கிடையாது. ஆனால் பழங்காலத்தில் போர்க்கருவிகள் இன்னும் பலஇருந்திருக்கின்றன. வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரும் வியப்பை தருவதாக அமைந்துள்ளது. பண்டைக்காலத்தில் நிலப்படையானது நான்கு வகைகளாகக் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: 1) கரிப்படை (யானைப்படை), 2) பரிப்படை (குதிரைப்படை), 3) தேர்ப்படை, 4) காலாட்படை. பழந்தமிழரின் போர்க்கருவிகள்:- 1) வளைவிற்பொறி 2) கருவிரலூகம் 3) கல்லுமிழ் கவண் 4) கல்லிடுகூடை 5) இடங்கணி 6) தூண்டில் 7) ஆண்டலையடுப்பு கவை 9) கழு 10) புதை 11) அயவித்துலாம் 12) கைப்பெயர் ஊசி 13) எரிசிரல் 14) பன்றி 15) பனை 16) எழு ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
நிலா மனிதர் – நீல் ஆம்ஸ்ட்ராங்!!!
August 25, 2016
சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர் எனும் பெருமைக்குரிய உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் 82 வயதில் (25.08.2012) காலமானார். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் “நாசா” குடியிருப்பில் மனைவியுடன் வசித்து வந்தார். இம்மாத ஆரம்பத்தில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் இருதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தனர். இதைத் தொடர்ந்து அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. தொடர்ந்து குணம் அடைந்த அவர் வீடு திரும்பினார். இந்த ... Read More »
தமிழ் வருடங்களின் பெயர்கள்!!!
August 24, 2016
தமிழ் எண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஞாபகத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் தமிழ் வருடங்களும். இது எந்த வருடம் என்று நாட்காட்டியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. நமது வாரிசுகளிடம் கேட்டால் அவ்வளவு தான். தமிழில் மொத்தம் 60 வருடங்கள் இருக்ககின்றன. இவை மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். ஒரு சஷ்டியாகக் கருதப்படும் 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் இதோ தமிழ் வருடங்களின் பெயர்கள்:- 01. பிரபவ Prabhava 1987 – 1988 ... Read More »
தமிழ் எண்கள்!!!
August 24, 2016
தமிழ் எண்களானவை தமிழ் மொழியின் எண் குறிகளும், அவற்றின் பயன்பாடுகளும், அளவை முறைகளுமான பரந்ததான ஒரு எண் வழக்காகும். தமிழ் எண்கள், தமிழுக்கு தனித்துவமானவை. பெரும்பாலும் தமிழ் எழுத்துக்களை ஒத்துள்ள தமிழ் எண் குறியீடுகள் தற்போது பயன்படுத்தப்படாமல், தமிழ் எழுத்துக்களோடு இந்தோ அராபிய எண் குறியீடுகளே பயன்படுகின்றன. தமிழ் எண்களின் சிறப்பான அம்சம் என்னவென்றால் அந்த எண் முறைகள் பயன்படுத்கப்பட்ட காலத்தில் பயன்பாட்டில் இருந்திருக்க முடியாத பின்ன அளவுகளுக்கும், பேரெண்களுக்குமேல்லாம் பெயர்கள் இருந்திருக்கின்றன. உதாரணமாக பலகாலமாக பயன்பட்டுவரும் ... Read More »
கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு!!!
August 23, 2016
* டைட்டானிக் கப்பல் வட அட்லாண்டிக் கடலில் மூழ்கிய ஆண்டு 1912 * ரஷ்யாவை இரும்புத்திரை நாடு என அடைமொழியிட்டுக் கூறியவர் வின்ஸ்டன் சர்ச்சில் * வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர் ஹெரடோட்டஸ் * பஞ்ச தந்திரக் கதைகளைத் தொகுத்தவர் விஷ்ணுசர்மன் * காந்தியடிகளை முதன்முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் * இந்தியாவில் தொலைபேசி உற்பத்திக்குப் புகழ்பெற்ற நகரம் பெங்களூர் * ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் கார்டஸ் * இந்தியாவின் முதல் ... Read More »
சென்னைக்கு பிறந்த நாள்!!!
August 22, 2016
தென் இந்தியாவின் நுழைவு வாயிலாக கருதப்படும் சென்னை மாநகரம் 1639-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி உருவானது. நீண்ட.. நெடிய.. வரலாற்றை கொண்ட சென்னை மாநகரம் இன்று (ஆக.22) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறது. பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இன்று இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தொடக்க காலத்தில் சிறு சிறு கிராமங்களாக பிரிந்து கிடந்தது. அந்தப் பகுதிகளை பல்லவ, சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்கள் ஆட்சி செய்தனர். அந்த சமயத்தில், வெளிநாடுகளில் இருந்து வர்த்தகர்களும், மதபோதகர்களும் கப்பல் ... Read More »
மனைவி கணவனிடம் எதிர்பார்பது!!!
August 21, 2016
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் விசயங்கள் :- ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் விரும்பும் ஆண்கள் பல விசயங்களை தமக்காக செய்ய வேண்மும் என எதிர்பார்க்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பது போல் அமைந்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனால் எதிர்பார்ப்புக்கு முரணாக அமைந்தால் குடும்ப வாழ்க்கை பூதம்பமாக வெடிக்க ஆரம்பிக்கும். பெண்கள் எதிர்பார்க்கும் விசயங்கள் அனைத்தும் ஆண்களால் செய்ய முடியவில்லை என்றாலும் செய்ய முடிகிற காரியத்தை நிறைவேற்றினால் அது அவர்களின் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு வேராக அமையும் என்பதை ஒவ்வொரு ஆணும் ... Read More »
ஆறு வகைப் படைவீரர்கள்!!!
August 20, 2016
ஆறு வகைப் படைவீரர்கள் எந்த நாடாக இருந்தாலும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தகுந்த சைன்யத்தை ஏற்படுத்திப் பராமரிக்க வேண்டியது அவசியம். இந்தப் படைவீரர்களின் தொகுப்பு முற்காலத்தில் எப்படி இருந்தது என்பதையும், அவர்கள்மீது கொள்ளப்பட்ட கண்காணிப்பு பற்றியும் மஹாகவி காளிதாஸன், தனது “ரகுவம்ச” காவியத்திலே அழகாக வர்ணித்துள்ளார். 1. மௌலா: நல்ல குடியில் பிறந்து, பரம்பரையாகவே அரசனுக்கு ஊழியம் செய்பவர்கள். இவர்களைச் சுலபத்தில், பகைவர்கள் பணத்தாலோ, மற்ற வகையாலோ வசப்படுத்த முடியாது. இவர்கள் தங்களது அரசரிடத்தில் உறுதியான விஸ்வாசம் ... Read More »
பதினாறு செல்வங்கள்!!!
August 20, 2016
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:- பதினாறு செல்வங்கள்: 1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி) 2.குறையாத வயது (நீண்ட ஆயுள்) 3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்) 4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்) 5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை) 6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை) 7.சலியாத ... Read More »
திருவிளக்கின் தத்துவம்!!!
August 20, 2016
திருவிளக்கின் தத்துவம் ………. குத்து விளக்கு என்பது சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூா்த்திகளின் வடிவம். விளக்கின் அடிப்பகுதி பிரம்மா! நடுத்தண்டு விஷ்ணு, நெய் ஏந்தும் அகல் சிவன்! அதற்கு மேல் உள்ள பகுதி மகேஸ்வரன்! சிகரமாக உள்ள உச்சிப் பகுதி சதாசிவன்! விளக்கின் சுடா் லட்சுமி! ஒளி சரஸ்வதி! வெப்பம் பார்வதி ஆகும். திரு விளக்கில் உள்ள ஐந்து முகங்களும் நமது ஐம்புலன்களையும், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் பஞ்ச பூதங்களையும் குறிக்கும் ... Read More »