Home » படித்ததில் பிடித்தது (page 68)

Category Archives: படித்ததில் பிடித்தது

ஓங்காரம்(பிரணவம்)

ஓங்காரம்(பிரணவம்)

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரணவம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இந்த ”ஓம் – ஓம்” என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர். ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு ... Read More »

இந்துஸ்தான் புரட்சிப்படை!!!

இந்துஸ்தான் புரட்சிப்படை!!!

கல்கத்தா நகரின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்த நகரம் சிட்டகாங். 1929 ஆம் ஆண்டில் சிட்டகாங் நகரில் வாழ்ந்த வந்த சில இளைஞர்கள் இந்திய தேசத்தின் விடுதலைப் போரில் மிகுந்த ஆர்வம் கொண்டார்கள். புரட்சியை ஏற்படுத்தி அதன்மூலம் இந்தியாவிற்கு விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது. புரட்சியை ஏற்படுத்த ஒரு அமைப்பு வேண்டுமல்லவா? எனவே புரட்சி எண்ணம் கொண்ட இந்த இளைஞர்கள் இந்துஸ்தான் புரட்சிப் படை எனும் ஒரு தீவிரவாத அமைப்பை துவக்கினார்கள். இப்படையின் தளபதியாக ... Read More »

நம்பகமானவரா நீங்கள்?

நம்பகமானவரா நீங்கள்?

என்னை நம்புங்கள்! நான் நம்பத்தகுந்த ஆள்தான்! என்று யாராவது சொன்னால்,அவர்களை நம்மால் நம்ப முடியுமா என்ன? ஒருவரின் நம்பகத்தன்மை அவரதுவார்த்தைகளில் மட்டுமில்லை. தந்த வார்த்தைகளைப் காப்பாற்றுவதில் இருக்கிறது. மனித உறவுகளைக் கட்டமைக்கும் பலமான அஸ்திவாரமே பரஸ்பர நம்பிக்கைதான். ஒருமனிதன் எதை இழந்தாலும் நம்பகத்தன்மை மட்டும் இருந்தால், அதனைக் கொண்டு இழந்தவை அனைத்தையும் மீட்கலாம். ஆனால், நம்பகத்தன்மையைஇழந்துவிட்டால் பின்னர் எதுவுமே இருக்காது. நீங்கள் அனைவருடைய உள்ளங்களிலும் நம்பகமானவராய் நிலைபெறவென்று சில வழிமுறைகள் உண்டு: சொன்ன சொல்லைக் காப்பது: நாம் சொன்ன சொல்லைக் காக்க முடியாமல் நம்மையும் ... Read More »

குழந்தை

குழந்தை

அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது. * கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது. * குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது. * அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது. * பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது. * ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது. * புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது. * நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது. * நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது. * * 4,5 வயதுகளில் ... Read More »

சும்மா ஒரு வெட்டி வேலை

சும்மா ஒரு வெட்டி வேலை

சும்மா ஒரு வெட்டி வேலை: நான் விஜயகாந்த் அல்ல புள்ளிவிபரங்களை சரியாகச் சொல்ல…. தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை தோரயமாக 53722 இதில் பாதி பள்ளிகள் 25000 தனியாருடையது என எடுத்துக் கொண்டால் 25000 பள்ளிகள். அதில் 50 பிள்ளைகள் வருடத்துக்கு புதிதாக சேருவதாக வைத்துக் கொள்வோம் டொனேசன் மினிமம் 20000 வைத்துக் கொள்வோம் மொத்த டொனேசன் : 25000 * 50 * 20000 = 2500,00,00,000 ரூபாய் தமிழகத்தில் மட்டும் ஒருவடத்திற்கு. இது அனைத்தும் ... Read More »

சித்திரக்கவிகள்

சித்திரக்கவிகள்

இந்தப் பாடல் நேராக வரிவடிவிலும், சுழியாகச் சித்திர வடிவிலும் அமைந்துள்ளது. மேலிருந்து கீழாக முதல் எழுத்துக் களையும் கீழிலிருந்து மேலாகக் கடையெழுத்துக் களையும் சுற்றி சுற்றி நான்கு முறைப் படித்தாலும் சரியாக வரும். கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற ... Read More »

வாழ்க்கை

ஒரு பணக்கார வணிகனுக்கு நான்கு மனைவிகள் இருந்தனர். வணிகனின் முதல் மனைவி உண்மையான வாழ்க்கைத் துணையாகத் திகழ்ந்தாள். அவனுடைய வீட்டையும், சொத்தையும், வணிகத்தையும் கவனித்துக் கொண்டாள். அவள் அவனை அதிகமாக நேசித்த போதிலும், அவன் அவளை நேசிக்கவில்லை. ஒருநாள் வணிகன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையிலிருந்தான். அவன் இறக்கப் போவதை அறிந்து கொண்டான். எனவே அவன், தான் அதிகமாக நேசித்த தன் நான்காவது மனைவியை அழைத்து, “நீ என் அருகில் இருந்து என்னைக் கவனித்துக் கொள்வாயா?” என்று ... Read More »

நம்மால் முடியும்

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார். அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு ” ஏன் சோகமாக இருக்கிறீர்கள் ” என்று கேட்டார். அதற்கு இவர் ” எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது ... Read More »

நேர்மை

நேர்வழி நெடுந்தூரம் குறுக்கு வழி கொஞ்ச தூரம் அது முடியுமிடம் சொர்க்கம் இது முடியுமிடம் நரகம் பாதையை பார்த்து தேர்ந்தெடு பயணம் நேரம் ஆகட்டும் பார்ப்பது சொர்க்கமாய் இருக்கட்டும் Read More »

படித்ததில் பிடித்தது

கரன்சி காகிதங்கள் ஒன்றுபோலிருந்தாலும் அவை ஒன்றல்ல .சில காகிதங்களில் மருந்து வாசம் வீசும் .சில தாள்களில் குருதி மணக்கும் .பல தாள்களில் கண்ணீரும் புன்னகையும் ஒருங்கே ததும்பும் . நன்றி – ஆத்மார்த்தி புதிய தலைமுறை  Read More »

Scroll To Top