சங்கர் தயாள் சர்மா பிறப்பு: ஆகஸ்டு 19, 1918ம் வருடம் போப்பால் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது துணைவியார் பெயர் விமலா சர்மா. பதவி: இந்தியாவின் ஒன்பதாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1992இல் இருந்து 1997 வரை பதவியில்இருந்தார். இதற்கு முன் இவர் எட்டாவது துணைக் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார். 1952-இல் இருந்து 1956 வரை போபால் மாகாணத்தின் முதலமைச்சராகவும் இருந்தார். மத்தியப்பிரதேச முதல் அமைச்சராகவும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் ஆந்திர ஆளுநராகவும் ... Read More »
Category Archives: படித்ததில் பிடித்தது
மனிதர்கள் மூன்று வகை!!!
December 25, 2016
மனிதர்கள் மூன்று வகை… துடிப்போர் எடுப்போர் கொடுப்போர்! பிறரைப் பற்றியே பேசுவோர் தன்னைப் பற்றியே பேசுவோர் தன்னைப் பற்றிப் பேச வைப்பவர்! தவறு செய்வோர் தண்டனை தருவோர் தவறுகளையும் தவறின்றிச் செய்வோர்! அறிவுரை கேட்போர் அறிவுரை சொல்வோர் அதன் படி வாழ்வோர்! சிந்திப்போர் செயல்படுவோர் சிந்தித்துச் செயல்படுவோர்! அறிவுடையோர் ஆற்றலுடையோர் அறிவை ஆற்றலுடன் வெளிப்படுத்துவோர்! சிரிக்காதவர் சிரிப்பவர் சிரிக்கவைப்பவர்! பேசாதவர் பேசுபவர் பேசவைப்பவர்! மாறாதவர் மாறுபவர் மாற்றுபவர்! கருவிகளை நம்புவோர் கடவுளை நம்புவோர் தன்னை நம்புவோர்! வாழ்க்கையைத் ... Read More »
வாழ்க்கையின் தத்துவங்கள் ஏழு!!!
December 24, 2016
ஏழு என்பதற்கும் வாழும் வாழ்க்கைக்கும் நிறைய சம்பந்தமுண்டு. சூரியனே மிகப்பெரிய சக்தியாக உள்ளது இச் சூரிய ஒளியில் மறைந்திருக்கும் நிறங்கள் ஏழு , இந்த ஏழு நிறங்களும் ஒன்றேடுடன் இணைந்து (இறைவனுக்கு மாத்திரம் தெரிந்த தொழிநுட்பத்தில்) வெள்ளெளியாக பூமியை மிக சக்திவாய்ந்த ஒளிக்கதிர்களாக வந்தடைகிறது. ஆகவே ஏழுக்கு ஒருவித சக்தியுள்ளது என்பது வெளிப்படையாகிறது,இதனை கருத்திற் கொண்டு எமது முன்னோர் வாழ்க்கைக்கு மிக முக்கிய பக்கபலமாக இருப்பவற்றை ஏழு விதமாக பிரித்துள்ளனர் அவையாவன. கவனிக்க ஏழு விடயங்கள்!!! உன் ... Read More »
வாழ்க்கையின் வெற்றிக் கோட்பாடுகள்!!!
December 23, 2016
* எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை அழகாக கையாளுங்கள். * அர்த்தமில்லாமலும்,தேவையில்லாமலும் பின் விளைவுகளை அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். * தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். * விட்டுக் கொடுங்கள். * சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள். * நீங்கள் சொன்னதே சரி,செய்வதே சரி என்று கடைசி வரை வாதாடாதிர்கள். * குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். * உண்மை எது,பொய் எது ... Read More »
எத்தனை வகை பானைகள்!!!
December 23, 2016
எத்தனை வகை பானைகள் ! நம் தமிழகத்துள் (வழங்கப்பெற்ற – வழங்கப்பெறும்) பானை வகைகள் சில……….. 1) அஃகப் பானை – தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம் 2) அஃகுப் பானை – வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை. 3) அகட்டுப் பானை – நடுவிடம் பருத்த பானை 4) அடிசிற் பானை – சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை. 5) அடுக்குப் பானை – நிமிர்வு முறையில் ... Read More »
ஜெகதீச சந்திர போஸ்!!!
December 22, 2016
பூஜ்யம் முதல் வானவியல் வரை, உலகம் வாழ பாரதம் வழங்கிய அருட்கொடைகள் ஏராளம். ஆனால், நமது அறிவியல் சாதனைகள் முறைப்படி பதிவு செய்யப்படாததால், நம்மைப் பற்றி நாமே தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்த மயக்கத்தைப் போக்கிய அண்மைக்கால விஞ்ஞானி, வங்கம் தந்த ரிஷியான ஆச்சார்ய ஜெகதீச சந்திர போஸ்.(பிறப்பு: 1858, நவ. 30- மறைவு: 1937, நவ. 23) அடிமைப்பட்ட பாரதத்தில் உதித்து, ஆங்கிலேயனே வியக்கும் வண்ணமாக அரிய சாதனைகளை நிகழ்த்திய போஸ், தனது கண்டுபிடிப்புகளை ... Read More »
திட்டமிட்டு வாழுங்கள்
December 21, 2016
ஒரு சாதாரண சுற்றுலாப் பயணம் போவதென்றாலும் கூட யாரும் திட்டமிடாமல் போவதில்லை. என்று, எப்போது, எப்படிப் போவது, எங்கு தங்குவது, எந்தெந்த இடத்தில் எவ்வளவு காலம் கழிப்பது என்று முன் கூட்டியே திட்டமிடாமல் கிளம்புவதில்லை. சில நாள் பயணத்திற்கே திட்டம் தேவையென்றால் வாழ்க்கைப் பயணத்திற்குத் திட்டம் எவ்வளவு முக்கியமாக இருக்க வேண்டும்? ஆனால் வாழ்க்கைப் பயணத்தில் திட்டமிடுவதில் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. சுற்றுலாப் பயணத்தைப் போல் இதில் பயணத்தை ஆரம்பிக்கும் முன் நாம் என்னென்ன செய்ய வேண்டும் ... Read More »
80/20 விதி
December 18, 2016
ஆராயப்படாத வாழ்க்கை வாழத்தகுந்ததல்ல என்றான் ஒரு கிரேக்க ஞானி. ஏனென்றால் ஆராயும் போதே வாழ்க்கை ஆழமாகின்றது. சரியையும், தவறையும் கண்டுபிடித்து எதிர்காலத்தை நிர்ணயிப்பது சாத்தியமாகிறது. அப்படி ஆராயவும், ஆராய்ந்தறிந்த உண்மைகளை உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு முறையே இந்த 80/20 விதி. இந்த விதியை முதலில் இத்தாலிய பொருளாதார நிபுணர் வில்ப்ரெடொ பரெடொ (Vilfredo Pareto) என்பவர் தன் நாட்டின் பொருளாதாரத்தை ஆராய்ந்த போது கண்டுபிடித்தார். தன் நாட்டின் 80% சொத்துக்கள் 20% மக்களிடம் இருப்பதாக 1906 ல் ... Read More »
நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரை!!!
December 17, 2016
காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி வாழ மறுக்கிறோம். 18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார். மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் : பால் உணவு உட்கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள். படுக்கும்போது எப்போதும் இடது ... Read More »
நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!!
December 16, 2016
நசிந்துபோன நாட்டுப்புற விளையாட்டுக்கள்!!! கிராமப்புற விளையாட்டுக்களை பல வகைப்படுத்தலாம். ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புள், ஜோடிப்புறா, வண்டிப்பந்தயம், கோலிக்குண்டு,சிலம்பு, ச+ விளையாட்டு என பலவகையுண்டு. ச+ விளையாட்டு இவ்விளையாட்டில் மாணவர்கள் இரண்டு பிரிவுகளாக சமமாக பிரிந்து இரண்டு கட்சிகளாக அல்லது இரண்டு பிரிவுகளாக இருப்பார்கள். உட்கார்ந்திருப்பவர் ஒரு கட்சியும், ஓடுபவர்கள் மற்றொரு காட்சியாகவும் இருப்பார்கள். ஒரு பிரிவினர் கிழக்கு பக்கம் உட்கார்ந்திருந்தால் மற்றொரு பிரிவினர் மேற்குப்பக்கம் அமர்ந்திருப்பார். நிற்பவருள் ஒருவர் ஓட இன்னொருவர் தொடவேண்டும். தன்னால் தொடமுடியாது என்று ... Read More »