Home » படித்ததில் பிடித்தது (page 2)

Category Archives: படித்ததில் பிடித்தது

குறை !

குறை !

தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான். முதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். “இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை!” என்று குறை சொன்னாள். “நீ இப்போதுதான் இங்கே ... Read More »

கடவுள் எங்கே?

கடவுள் எங்கே?

ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், “எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்!” என்றார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் ராஜேஷ். “காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? ... Read More »

நட்புக்குத் துரோகம் !

நட்புக்குத் துரோகம் !

ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன. நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன. ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக தன் இருப்பிடத்தை விட்டு கழுதை ... Read More »

அரசனுக்கே விளங்காத‌ புதிர்..?

அரசனுக்கே விளங்காத‌ புதிர்..?

அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல் வழியே சென்று கொண்டிருந்தார் ..அங்கு வயல்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டுகொண்டிருந்தன …! அந்த வழியால் வந்த மூன்று பெண்கள் வந்தனர் .. அவர்களில் ஒருத்தி -இந்த நிலம் முகத்துக்குத்தான் ஆகும் – என்றாள்…! இல்லை இல்லை இது -வாய்க்கு தான் ஆகும் -என்றாள் …! மூன்றாவது பெண் சொன்னாள் இல்லை இல்லை.. இது -பிள்ளைக்குத்தான் – ஆகும் என்றாள் …! அரசனுக்கு எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியது விளங்கவில்லை …! மாறு ... Read More »

எமக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் ….!

எமக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் ….!

இந்த உலகில் மற்றவர்களுக்காக பலர் பல விடையங்களில் தியாகம் செய்துள்ளனர் அதில் ஒரு சுயநலமும் இருந்திருக்கலாம் …ஆனால் இவர்கள் பிறர் நலத்துக்காக தம்மை இழிவு படுத்தினர் அல்லது இழந்தனர் ….அவர்களில் இவர்கள் … மேரி கியூரி அம்மையார் குடும்பம் ; ரேடியம் என்ற மூலகத்தை கண்ணு பிடித்தவர்கள் .அம்மையார் மற்றும் அவர் கணவர் .மற்றும் மகள் ..மூவரும் இந்த கண்டு பிடிப்புக்காக தம்மை தியாகம் செய்தவர்கள் விளைவு ;ரேடியத்தின் கதிர் வீச்சு மூவரும் புற்று நோயால் தான் ... Read More »

வலது கை, இடது கை!!!

வலது கை, இடது கை!!!

“அப்பா,கோயிலின் கதவின் முன்னால் என்னப்பா எழுதி இருக்கு?” ஐந்து வயது பையனைக் கூட்டிக் கொண்டு கோவிலுக்கு வந்த இடத்தில், வாசலில் ஸ்வாமி தெரியாமல் பெயர் பொறித்து இருந்த இரும்பு கதவைப் பார்த்து தான் பையன் கேட்டான். “அது ஒன்னும் இல்லப்பா, இந்த கதவை கோவிலுக்கு தானமா கொடுத்தவங்க பேர் அதிலே போட்டுருக்காங்க. அவ்வளவு தான்.” “அதுக்காக உள்ளே இருக்கிற ஸ்வாமி கூட தெரியாமல் பேரப் போடணுமா அப்பா?” “உனக்குத் தெரியுது, அவங்களுக்குத் தெரியலேயே. அங்க இருக்கிற விளக்கைப் ... Read More »

அப்பாவும் மகனும்

அப்பாவும் மகனும்

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள் . அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது.. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார்… பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது ... Read More »

மாய குதிரை

மாய குதிரை

நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது.  அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது…. மனம் எங்கு வேண்டுமானாலும் செல்லும் மாய தந்திரம் படைத்தது.. ஆனால் எங்கோ சென்று விட்ட தோழியை அழைத்து வந்து வீட்டு மொட்டை மாடியில் அமர வைத்து கதை பேசுவது மனதின் பயணமில்லை….. அது கற்பனை… சரி, ... Read More »

தங்க நாணய கதை

தங்க நாணய கதை

ஒரு ஊரில் ராமசாமி என்ற சுயநலமிக்க செல்வந்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஊருக்கு சென்று திரும்பும் வழியில் 30 தங்க நாணயங்கள் இருந்த பையை தொலைத்துவிட்டார். இதனால் வருத்தமடைந்த செல்வந்தர் தனது நண்பர் குருவிடம் நடந்ததை கூறி புலம்பினார். சில நாட்கள் கழித்து குரு ஊரிலிருந்து திரும்பும்போது வழியில் ஒரு பையில் தங்க நாணயங்கள் இருப்பதை கண்டார். அந்த பை ராமசாமியுடையது என தெரிந்துகொண்ட குரு அதை அவரிடம் கொடுத்தார். குருவிடமிருந்து தங்க நாணயங்களை பெற்றுக்கொண்ட ... Read More »

பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???

பணம் மட்டும்தான் வாழ்க்கையா ???

ஒரு ஊரில் கருமி ஒருவன் வாழ்ந்து வந்தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அவன் பொருள் சேர்த்தான். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. அவனிடம் ஐந்தாயிரம் பொற்காசுகள் வரை சேர்ந்தன. அவற்றை எண்ணிப் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். வாழ்க்கை முழுவதும் பொருள் சேர்ப்பதிலேயே கழித்து விட்ட அவன் பொற்காசுகளில் சிலவற்றைச் செலவு செய்து இனி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான். அப்பொழுது அவன் முன்பு சாவுக்கான எமன் தோன்றினான். அவனிடம் “உன் உயிரை எடுத்துச் ... Read More »

Scroll To Top