Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!

புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!

பரிணாமவியலை எதிர்ப்பவர்கள் பொதுவாக தங்களது மத புத்தகத்தில் எழுதியுள்ள வரிகளை அப்படியே உண்மை என்று நம்பிக்கொண்டு, அதன் அடிப்படையிலேயே உலகம் தோன்றியது, உயிர்கள் தோன்றின என்று வாதிடுவார்கள். பல கோடி ஆண்டுகள் பழைய இந்த பிரபஞ்சம் வெறும் ஐந்தாயிரம் வருடங்களே பழையது என்றும் கூறுவார்கள்.

ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னால் பெருவெடிப்பை அவர்களது மதப்புத்தகத்தில் உள்ள கடவுள் தோற்றுவித்தார் என்று நம்புகிறார்கள். ஆகையால், பல மில்லியன் வருடங்களுக்கு முந்தையதாக கணக்கிடப்படும் டைனசோர்கள் ஆகியவற்றை நம்மை ஏமாற்ற சாத்தான் என்ற அவர்களது கடவுளின் எதிரி போட்டு வைத்திருப்பதாகவும் நம்புகிறார்கள்.

ஆனால், பரிணாமவியல் என்ற அறிவியல் தொடர்ந்து வளர்ந்து மேன் மேலும் அதிக ஆதாரங்களை கொண்டுவந்து குவித்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒரு சிறு ஆதாரத்தை பார்ப்போம்.

பொதுவாக பரிணாமவியலை எதிர்ப்பவர்கள் ஒரு சில வாதங்களை முன் வைப்பார்கள். சமீபத்தில் எந்த குரங்கு மனிதனாக ஆனது என்று காட்டுங்கள் என்று சொல்வார்கள்.

இங்கிலாந்தில் பலர் தங்களது வீடுகளுக்கு வெளியே பறவைகள் உண்ண தான்யங்களை கொடுக்கும் பறவை உணவுக் கூடுகளை (bird-feeders) வைத்திருக்கிறார்கள். இது அவர்களது தோட்டத்துக்கு அழகு சேர்க்கும் என்று கருதித்தான் வைத்திருக்கிறார்கள். ஆனால், இந்த வழக்கம் புதிய பறவை இனங்களை தோற்றுவித்திருக்கிறது என்று அறியலாய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

ஐரோப்பிய பிளாக் கேப் (European blackcaps) என்னும் பறவை வரலாற்று ரீதியாக இங்கிலாந்தில் பனிக்காலம் இருக்கும்போது ஸ்பெயினுக்கு சென்று தமது குளிர்காலத்தை கழிக்கும். அங்கு பழங்களையும் சிறு செடிகளின் பெர்ரி பழங்களையும் உண்டு வாழும். ஆனால், தற்போது இப்படிப்பட்ட பறவைகளுக்கு தானியம் அளிக்கும்  பறவை உணவுக் கூடுகள்  (bird-feeders)  வந்துள்ளதால், இந்த பறவைகளின் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன.

தற்போது இந்த ஈரோப்பியன் பிளாக்கேப்  பறவைகளில் ஒரு பகுதி எப்போதும்  இத்தகைய பறவை உணவுக் கூடுகளில் கிடைக்கும் தானியங்களை மட்டுமே உண்டு வாழக்கூடியதான பறவையினமாக மாறி வருகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்.

இங்கிலாந்தில் வசிப்பவர்கள் குளிர்காலத்திலும் இந்த பிளாக்கேப் பறவைகளுக்கு தானியம் கொடுக்க ஆரம்பித்ததால், பிளாக் கேப் பறவைகளில் ஒரு பகுதி குளிர்காலத்திலும் இங்கேயே இருக்க ஆரம்பித்தது. அது மட்டுமல்ல. குளிர் காலத்தில் இங்கே தங்கிவிட்ட மற்ற பிளாக் கேப் பறவைகளுடன் மட்டுமே பாலுறவு வைத்துகொண்டது. இது தனியே ஒரு பறவை இனமாக மாற முதல் படி. இதுதான் நடக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதினாலும், அவர்களுக்கு ஆதாரம் வேண்டுமே! ஆகவே பரிசோதனைசாலையில் புகுந்து பரிசோதிக்க ஆரம்பித்தனர்.

இந்த பறவைகளின் கால்களில் இருக்கும் ஒரு வேதிப்பொருளை அடையாளம் கண்டு குளிர்காலத்திற்கு ஸ்பெயினுக்கு போகும் கூட்டத்துக்கும், குளிர்காலத்தில் இங்கேயே இங்கிலாந்து மக்கள் கொடுக்கும் பறவை தானியத்தை உண்ணும் கூட்டத்துக்கும் வித்தியாசம் இருக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அவர்கள் என்ன உணவு சாப்பிடுகிறார்கள், குளிர்காலத்தில் எங்கே இருக்கிறார்கள் என்பதை வைத்து வேதி வித்தியாசம் இருந்தது. அதன் பின்னர் அந்த பறவைகளின் இரத்தத்தை எடுத்து வித்தியாசம் இருக்கிறதா என்று ஆராய்ந்தார்கள். அதுவும் வேறு வேறு ஆகிவிட்டிருந்தன.

குளிர்காலத்தில் இங்கே இருக்கும் பிளாக் கேப் பறவைகள் வேறு விதமான இறக்கைகளை அடைந்துவிட்டன. அவற்றின் சிறகுகள், அவற்றின் மூக்கு ஆகியவையும் மாறுதல் அடைந்துவிட்டன. அவைகளது இறக்கைகள் வட்டவடிவமாக ஆகி சிறிய தூரம் பறப்பதற்கு ஏற்றவையாக ஆகிவிட்டன. அவற்றின் அலகுகள் நீளமானதாகவும் அகலத்தில் சிறியதாகவும் ஆகியிருந்தன. இப்படிப்ப்பட்ட அலகுகள்  மூலம் எளியதாக bird-feedersகளிலிருந்து எளிதில் தானியத்தை எடுத்து சாப்பிட வசதியாக ஆகியிருக்கின்றன. இத்தனை பரிணாமவியல் மாற்றங்களும் கடந்த 50 வருடங்களில் நடந்து விட்டன.

இப்போது பரிணாமவியலை எதிர்ப்பவர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது. ஒரு பறவையினத்திலிருந்து ஒரு சூழ்நிலை மாற்றத்தின் காரணமாக புதிய பறவையினம் தோன்றியிருக்கிறது.

பரிணாமவியல் போன்ற அறிவியல்களை எதிர்ப்பவர்கள் என்ன ஆதாரம் காட்டப்பட்டாலும் அதனை ஒப்புக் கொள்ளப் போவதில்லை. ஆகவே இந்த ஆதாரங்கள் அவர்களுக்கல்ல. இந்துக்களாகிய நமக்குத்தான். நம்மில பலர் கிறிஸ்துவ பள்ளிகளில் படித்து வந்தவர்கள். அங்கு மென்மையாக ஏற்றப்படும் கருத்தியல்கள் காரணமாக, ஆதாம் ஏவாள், கடவுள் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியை படைத்தார் போன்ற கதைகளை உண்மை என்று நம்புபவர்களும் உள்ளனர்.

இந்து மதத்தின் ஆன்மீகம் அறிவியலுக்கு எதிரானதல்ல. இயற்பியல், வேதியியல் போன்றே உயிரியலும், உயிரியலின் அடிப்படையாக இருக்கும் பரிணாமவியலும் அறிவியல்களே.

இந்து மதத்தின் ஆன்மீகம் உயிர் என்பதை வெறுமே மனிதர்களுக்கு மட்டுமே கொடுப்பதல்ல. உதாரணமாக மற்ற மதப்புத்தகங்களில் மனிதனை படைத்துவிட்டு பிறகு உயிரை கொடுக்க ஒரு நாள் முழுவதும் செலவழிக்கும் அந்த மதப்புத்தகங்களில் கடவுள் பாக்டீரியா, செடிகொடிகள் தாவரங்கள்
ஆகியவற்றுக்கு இப்படி உயிர் கொடுப்பதில்லை.

ஆனால், தாவரங்கள், விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியவற்றுக்கும் பொதுவாக நமது ஆன்மீகம் இருக்கிறது. நாம் வந்த பாதை நீண்ட நெடியது. உயிரற்ற பொருள்களிலிருந்து ஆரம்பித்து கிளைத்துள்ள உயிரென்னும் மாபெரும் மரத்தின் ஒவ்வொரு இலைகளிலும் தழைத்திருக்கும் இந்த மாபெரும் கூட்டமைப்பு நம்மை உலகத்திலும் இன்னும் இந்த உலகுக்கு வெளியே இன்னோர் சூரியர்களின் கிரகத்தில் வாழும் உயிர்களுக்கும் சகோதரர்களாக ஆக்குகிறது. இந்த பேருண்மையே பெரும் ஆன்மீக உணர்வாக நமக்கு நம் பார்வையை விரிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top