நகரிலிருந்து சற்று தூரத்தில் நாலாப்புறமும் வனப்பகுதிகளால் சூழ்ந்த இயற்க்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம். அந்த கிராமத்தில் தினமும் காலைக்கதிரவன் வெளிவருமுன்பிருந்து மாலை வெயில் மறைந்து இரவு எட்டிப் பார்க்கும் வரை எந்நேரமும் சுற்றுப்புற நகரிலிருந்தும் கிராமங்களிலிருந்தும் வண்ண வண்ணக்கார்களும் ஆட்டோக்களும் சகிதமாக அந்த கிராமத்துக் குறுகிய சாலையை அடைத்துக் கொண்டு வந்துபோகும்வண்ணமாக இருக்கும். அக்கிராமமே அந்தப் பகல்ப்பொழுது முழுவதும் பரபரப்புடன் காணப்படும். .காரணம் அந்தக்கிராமத்தில் பேய், பிசாசு, செய்வினை, சூனியம் ஆகியவற்றை நீக்குவதாக தன்னை பிரபல்யப்படுத்திக் ... Read More »
Daily Archives: March 16, 2015
மிரட்ட வரும் பேய் – 9
March 16, 2015
பசுமை பரந்த வயல்வெளியாய்ப் பெற்று தென்னை, மா, பலா என்று பலவகை மரங்கள் ஒருபுறம் படை சூழ அழகிய இயற்க்கையமைப்பைக் கொண்ட அமைதிக்கு எடுத்துக்காட்டாய் ஒரு அழகிய சிறு கிராமம். விவசாயமே அந்த கிராம மக்களுக்கு பிராதானத் தொழிலாக இருந்தது..ஆதலால் இரவு வேளைகளில் வெளியில் செல்லும் விவசாயிகள் ஏதாவதொரு விளக்குத் துணையுடன் தான் சென்று வருவார்கள். கள்ளமில்லா உள்ளம் படைத்த இவர்களின் மனதில் காத்து,கருப்பு,பேய் என்று இந்த ஆவிகளின் மேல் அபார நம்பிக்கையும் இருந்து வந்தது. காரணம் ... Read More »
மிரட்ட வரும் பேய் – 8
March 16, 2015
அது நம் நாட்டின் பெருநகரங்களில் ஒன்றாகும். அங்கு பல மாநிலத்தவரும் வெளிநாட்ட வரும் வந்து போகும் வணிக மாநகரம். எந்நேரமும் வாகனங்களும் பொதுமக்களும் பரபரப்புடன் காணப்படும் அம்மாநகரின் ஒருபகுதியில் இரவு வேளைகளில் பேய் நடமாட்டம் உள்ளதாகவும் அடிக்கடி குழந்தைகள்,பெண்கள் காணாமல் போவதாகவும், தனியே செல்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுவதாகவும் தினசரி நாளிதழ்களிலும் டி வியிலும் தினமும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இது என்னவென்று தெரியாமல் பொதுமக்களையும் காவல் துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆகவே அந்தப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு ... Read More »
மிரட்ட வரும் பேய் – 7
March 16, 2015
அமைதியின் நிசப்தத்தில் அடங்கிக்கிடந்த அந்த இரவு வேளையில் எப்போதும் போல் வயலுக்கு வந்து மடையைதிறந்து தண்ணீர் விடுவதற்காக இரண்டு விவசாயிகள் அரிக்கன் விளக்கை கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார்கள். தூரத்தில் எங்கோ நாய்கள் பலமாக ஊளையிட்டுக் குரைக்கும் சப்தம் மட்டும் வந்து கொண்டு இருந்தன..அரிக்கன் விளக்கை சற்று உயர்த்திப் பிடித்துப் பார்த்தவர்கள் அதிர்ச்சியாகிப் போனார்கள்…இருட்டோடு இருட்டாக ஒரு கறுத்த உருவம் ஒன்று காற்றோடு பறந்து செல்வது போன்ற நடையில் மயானத்தை நோக்கிச் செல்வது கண்களுக்குத்தென்பட்டன….யா..யாரப்பா..அங்கெ போறது..யா..யாரு.. என்று பயத்தின் ... Read More »
மிரட்ட வரும் பேய் – 6
March 16, 2015
அமைதியும்,மரியாதையும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலும் நல்லுள்ளம் கொண்ட அந்த இளைஞன் கொஞ்சம் பயந்த சுபாவமுடையவன். ஊருக்கு ஒதுங்குப் புறமாக சற்றே வனப் பகுதியை தொடும் தூரத்தில் தனியாக அமைந்திருக்கும் ஒரு தொழிற்ச்சாலையில் ஹெல்ப்பராக வேலை செய்து வருகிறான். ப்ளஸ் டூ வரை படித்துவிட்டு மேற்ப்படிப்பு படிக்க வசதியில்லாமல் தான் இந்த தொழிற்ச்சாலையில் வேலைக்குச் சேர்ந்தான். அன்று தொழிற்ச்சாலையில் வேலை அதிகமாக இருந்ததால்…..தம்பிங்களா நாளக்கி டெலிவரி கொடுக்க வேண்டியது இருக்கு அதுனாலே இன்னக்கி எல்லாரும் ஓவர் டைம் பண்ணிட்டு ... Read More »
மிரட்ட வரும் பேய் – 5
March 16, 2015
அது ஒரு நேசனல் ஹைவே ரோடு மாநிலம் விட்டு மாநிலம் போகும் பலகனரக வாகனங்களும்,பேரூந்துகளும் சற்று இடைப்பட்ட நேரமாக சீறிப் பாய்ந்தபடி மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தன. அன்றைய தினம் வானத்து நட்சதத்திரகங்கள் படை சூழ உச்சியிலிருந்த நிலா வெளிச்சம் சற்று அதிகப் பிரகாசத்துடன் காணப்பட்டன.அந்த நிலா வெளிச்சத்தில் சாலையின் இருபக்கமும் மலைகளும் சிறிய சிறிய அளவிலான காடுகளும் வாகனம் போகும் வேகத்தில் எதிர்திசையைநோக்கி ஓடுவது போலத் தெரிந்தன. மரக்கிளைகளின் நிழகள் அவ்வப்போது வண்டிமுன் பகுதியில் வந்து ... Read More »
மிரட்ட வரும் பேய் – 4
March 16, 2015
அது ஒரு அழகிய தென்னந்தோப்பின் நடுவில் அமைதியை மொத்தமாக விலை கொடுத்து வாங்கியது போல அமைந்திருக்கும் குக்கிராமம். அந்த கிராமத்திலேயே கொஞ்சம் வசதி படைத்த குடும்பம் அது. அவள் புருஷன் வெளிநாட்டில் வேலை செய்கிறான்.வெளிநாட்டில் சம்பாரித்த பணத்தில் ஊர் எல்லையில் மனை விற்ற புரோக்கரிடம் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டி குடிபுகுந்திருக்கிறார்கள். அந்தப்பகுதிக்கு புதிதாக குடிவந்த இரண்டு மூன்று வீடு மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்தது. இரண்டு பிள்ளைகளுடன் அந்த புதிய வீட்டில் அவள் தனியாக ... Read More »
மிரட்ட வரும் பேய் – 3
March 16, 2015
நமதூர் பகுதிகளில் பெரும்பாலான இளைஞர்கள்களின் தகப்பனார், அண்ணன்மார்கள், தம்பிமார்கள் மாமன் மச்சானென்று துபாய், சவூதி, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்று கஷ்டப்பட்டு சம்பாரித்து பணம் அனுப்பி வைக்கிறார்கள். பணத்தின் அருமை தெரியாத ஒரு சில இளைஞர்கள் சுய உழைப்பில்லாமல் ஊரைச் சுற்றிக்கொண்டு ஜாலியாக வீண்செலவு செய்துகொண்டு பொறுப்பில்லாமல் ஊதாரித்தனமாகத் திரிகிறார்கள். இதனால் தீய நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கவழக்கங்கள் ஏற்ப்பட்டு இவர்களின் வாழ்க்கை திசைமாறிப் போய் விடுகிறது. இதில் ஒரு ... Read More »
மிரட்ட வரும் பேய் – 2
March 16, 2015
அது ஒரு மாலை நேரம்… பள்ளியில் படிக்கும் நண்பர்கள் இருவர்கள் சேர்ந்து கால்நடையாக பொழுது போக்கிற்காக அந்த கடற்கரைச் சாலையை நோக்கி நடந்து செல்கிறார்கள். இருவரும் வகுப்பில் நடந்த பல சுவராஸ்யமான நிகழ்வுகளையும், படிப்பைப் பற்றியும் பள்ளியில் அடித்த அரட்டையைப் பற்றியும் பேசிக் கொண்டு போனதில் நேரம் போனதே தெரியாமல் கடல்க் கரையின் ஓரத்தை வந்தடைந்து விட்டார்கள். மாலைக் கதிரவன் மறைந்து இருட்டத் தொடங்கிய நேரம் அது. ஆள் ஆரவாரமற்ற அந்த இடத்தில் இந்த இருவர் மட்டுமே ... Read More »
மிரட்ட வரும் பேய் – 1
March 16, 2015
இது மூடநம்பிக்கைக்கு மூட்டைகட்டும் கற்பனைப் திகில் தொடர்! மனிதமனம் உருவாக்கும் பேய் தான் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இந்தக் கற்பனையான பேயை விரட்டுவதாகச் சொல்லி பிழைப்பு நடத்து கின்றவர்கள். சமூகத்தில் இவற்றை போலியான பிரம்மையை ஏற்படுத்தி பிறரை பயமுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சரியான சாட்டையடி கொடுக்கும் நோக்கில் மக்களிடயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கில் இந்த தொடர் வெளிவர உள்ளது. தொடராக வெளிவர உள்ள இவற்றை தைரியமாக நீங்கள் வாசிக்கலாம். நடுநிசி இரவு 12.30 மணி சிறுநீர் கழிக்க ... Read More »