விஞ்ஞான பேய்

மச்சி . நா பேய பாக்கனும்டா .

என்ற ஹரியை அதிசயித்துப்பார்த்தான் ராம் .

என்னடா திடீர்னு ? பைத்தியம் பிடிச்சிடுச்சா ?

இல்ல மச்சி . கண்டிப்பா நா பார்த்தே ஆகனும் .

இனி ஹரியிடம் வாதம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது ராமுக்குத்தெரியும் .

அப்படினா உனக்கு ஏத்த சரியான ஆளு பேயடிச்சாமி தான்டா . அந்தாளபோயி பாரு . அவரு உனக்கு எல்லாம் தெளிவா சொல்லுவாரு .

என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுச்சென்றான் ராம் . ஹரிக்கு இந்த எண்ணம் கடந்த 3 நாட்களாகத்தான் இருந்தது .பேயைப்பார்க்க அவன் எதற்கு விரும்பினான் என்று அவனுக்கேத்தெரியவில்லை . ஆனால் பேய் எப்படி இருக்கும் என்று பார்த்தேயாகவேண்டும் .ராம் சொன்ன பேயடிச்சாமியைப்பார்க்க கிளம்பினான் .எங்கும் வனம் . இருட்டு வேறு பயமுறுத்தியது . எங்கோ தூரத்தில் ஒரு கொடூரமான மிருகத்தின் உறுமலோ இறுமலோ இவனை மேலும் திகிலாக்கியது .

மச்சி , அவர சாய்ங்காலத்துலதான் பாக்க முடியும் .எல்லையோரத்துல இருக்க காட்டுல தான் அவரோட இடம் இருக்குது . பகல்ல அவரு வேற எங்கயோ போயிடுவாருனு சொல்லிருக்காங்க .

எங்க போவாரு மச்சி ?

இருட்டு என்றால் பயமென்பதால் அவனுக்குள்அந்த கேள்வி எழுந்தது . ஒருவேளை அவர் பகலில் எங்கே இருப்பார் எனத்தெரிந்தால் அங்கேயே சென்று பார்த்துவிட்டு வந்துவிடலாம் .

பகல்ல நரகத்துக்கு போவாராம் மச்சி  என்றான் ரகசியமாக .

இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு . அப்படியே பகல்ல நரகத்துக்கு போறாருனா , இவரு ஏற்கனவே செத்தவராத்தான் இருக்கனும் மச்சி .

அப்படியும் சொல்றாங்கடா  என்றான் ஆச்சரியமாய் .

நாம் முதலில் பேயைப்பார்க்கிறோமோ இல்லையோ , இந்த பேயடிச்சாமியைப்பார்த்துவிடவேண்டும் என்று தீர்மானத்தை மனதுக்குள் எடுத்தான் . பகல்வேளை என்பதால் எளிதாக இருந்த தீர்மானம் இரா வேளையில் இராமல் போய்விட்டது .இருந்தாலும் வந்தது வந்தோம் . அவரையும் பார்த்துவிட்டுச்செல்லலாம் என்று தைரியப்படுத்தி அந்த காட்டினுள் நுழைந்தான் .

மச்சி . உனக்குத்தெரியுமா ? அவங்கவங்களுக்குனு ஒரு நேரம் வரும்போது பேயப்பாப்பாங்களாமாம் .என்று 3 நாட்களுக்குமுன் ராம் தான் ஹரியிடம் கூறியிருந்தான் .

அப்படியா ? என்று அசிரத்தையுடன் கேட்டுவிட்டு அமைதியானன் ஹரி .

மச்சி . பேய்ங்களுக்கு கால் இருக்குமாம்டா  என்று மீண்டும் ஹரியிடம் கொஞ்சநேரம் கழித்துச்சொல்லுவான் . எப்படிப்பேசினாலும் ராமின் வாதம் மட்டும் பேய் என்ற தலைபிலேயே வந்து முடியும் .

அந்த அடர்ந்த காட்டினுள் ஓரிடத்தில் மாத்திரம் ஒளி தெரிந்தது .அதைநோக்கிச்சென்றவனுக்கு ஒருமுனிவர் மாதிரியான ஒருவர் தவக்கோலத்தில் இருந்தார் .மெல்ல புலிபோல் பதுங்கி அவரின் அருகில் சென்று பவ்யமாக நின்றான் .

என்ன வேணும் ?என்ற கணீர் குரலில் அந்த முனிவர் கண் திறக்காமலே கேட்டார் .

சாமி . நா பேய பாக்கனும்

அதைக்கேட்டதும் தன் கண்ணைத்திறந்து அவனைப்பார்த்தார் அம்முனிவர் .

அது உனக்கு ஆபத்து . வேண்டாம் சென்றுவிடு .

வேண்டாம் என்று சொன்னால்தான் வேண்டும் என்று மனிதமனம் அடம்பிடிக்கும் . சிகரெட் அடிப்பது தப்பு என்றால் , அதைத்தான் செய்வோம் என்று சொல்வார்கள் மனிதர்கள் .

என்ன ஆபத்தா இருந்தாலும் பாத்துக்கரேன் சாமி .

பொறுமையாக யோசித்தவர் ,

உன் விதி . நாளை இரவு 10.30 – க்குவடக்கே இருக்கும் நாலுகால் மண்டபத்துக்குச்செல் . அங்கே உன்னால் பேயைத்தரிசிக்க முடியும் .

வந்த காரியம் வெற்றிபெற்ற சந்தோஷத்தில் ஹரி இருந்தான் . ஆனால் அவனுக்கு ஒரு குழப்பம் வந்தது .

சாமி . பேய்னா என்ன ?

மீண்டும் அவனை ஏற இறங்க பார்த்த முனிவர் தொடர்ந்தார் .

இவ்வுலகம் மூன்று பரிமாணங்களை உடையது . ஒரு பரிமாணத்தில் உள்ளவர்களுக்கு மற்றொரு பரிமாணத்தில் உள்ளவர்கள் பேய்கள் . அவ்வளவே

தொடர்ந்தாற்போல அவனுக்கு இன்னொரு சந்தேகமும் வந்தது .

சாமி .பகல்ல நீங்க நரகத்துக்கு போய்ட்டு வறிங்கலாமே ? உண்மையா ?

இம்முறை அவரது முகத்தில் ஆத்திரத்திற்கான அறிகுறி தென்பட்டது . இருந்தாலும் பொறுத்துக்கொண்டு அவனிடம் விடையளித்தார் .

ஆம் .

எதுக்கு சாமி போறிங்க ?

டேய் . போறியா இல்ல உன்ன போட்டுத்தள்ளவா ?கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்க . பொத்திகிட்டுப்போடா  என்றார் ஆவேசமாக .

கிழட்டுசாமி . ஒரே அடியில மயங்கிவிழுந்துடுவான் . இவன் நம்மளத்திட்டுறான் என்று மனதினுள் நினைத்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் .

தம்பி என்று மீண்டும் அந்த சாமியார் அழைத்தார் .

என்ன என்பதுப்போலே தெனாவெட்டாகத்திரும்பிப்பார்த்தான் ஹரி .

அங்கபோறது உனக்கு ஆபத்துப்பா  என்றார் .

அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம் . நீங்க சாத்திகிட்டு உங்க வேலையப்பாருங்க  என்று திமிராக கூறிவிட்டு கிளம்பினான் .

அடுத்தநாள் இரவு வந்தது . ராமிடம் ஏற்கனவே ஹரி கூறியிருந்தான் .ராம் பயத்தில் நடுங்க ஆரம்பித்திருந்தான் .ஹரியிடம் போகவேண்டாம் என்றுகெஞ்சிப்பார்த்தான் . திட்டவும் செய்தான் . ஆனால் ஹரியோ நான் போயேத்தான் தீருவேன் என்றான் . சொன்னமாதிரியே கிளம்பி அந்த மண்டபத்திற்குப்போனான் . பேயடிச்சாமி சொல்லிய நேரத்திற்கு 5 நிமிடம் முன்னரே அங்கு நுழைந்து ஒருமூலையில் நின்றான் .

திடீரென்று அந்த மண்டபம் மாறத்துவங்கியது .தலைக்குமேல் இருந்த சிலந்திவலைப்போய் ஒரு மின்விளக்கு எரிந்தது , மேலும் அவ்விடத்தில் தூண்கள் எல்லாம் எழும்பியது . திடிரென நின்றிருந்த இடத்தில் கம்பிகள் வேறு வந்தன . என்ன நடக்கிறது என்று யோசிப்பதற்குள் அவன் வேறிடத்தில் இருந்தான் .அந்த சாமியும் ராமும் அவ்வளோ கெஞ்சுனாங்களே ! அவங்க பேச்சக்கேட்டுருக்கலாமோ என்று பயம் வரஆரம்பித்தது .யாரோ ஒரு பெண் சத்தம் கேட்டது . அதைக்கேட்டதும்கம்பிக்கு பக்கத்தில் இருந்த தரையில் மறைவாக ஒளிந்துகொண்டான் .

அவளின் கால் கொலுசு சத்தம் அவனை நோக்கி வர ஆரம்பித்தது . ஜிங் ஜிங் ஜிங் என்ற அந்த சத்தத்தில் , இவன் ரத்தம் ஜிவ் ஜிவ்வென ஓடுவதைப்போல் உணர்ந்தான் . நம் வாழ்க்கை இன்றோடு முடிந்துவிட்டது என்று பயத்தில் தன்னையும் மீறி அழ ஆரம்பித்திருந்தான் .

அ ங் க யா ரோ இ ரு க் கா ங் க என்ற அந்த பெண்ணின் குரல் ஸ்லோமோஷனில் ஒலித்தது .அதைக்கேட்டதும் இவனுக்குத்தொண்டைத்தண்ணீர் வற்ற ஆரம்பித்தது . நாவெல்லாம் வறண்டு போக ஆரம்பித்தது . திடீரென தடால் தடால்  என்ற சத்தம் கேட்டது .

கண்விழித்துப்பார்த்தவனுக்கு எல்லாம் மங்கலாகத்தெரிந்தது . யாரோ இருவர் இவனைத்தூக்கிக்கொண்டு பறந்துகொண்டிருந்தார்கள் .தான் இருக்குமிடம் எதுவென்று நன்றாக கண்ணைத்திறந்து பார்த்தான் .மில்க்கிவே கேலக்ஸியைத்தாண்டி பல பேரண்டங்களுக்கு நடுவில் பறந்துகொண்டிருந்தான் .

அவன் அருகில் இருவர் . அவர்களுக்கு மூக்கு , கண் , காது என்று எது எங்கெங்கு இருக்கவேண்டுமோ அதற்கு நேரெதிராக இருந்தது . சிறிது நேரத்தில் ஒரு கோளினை அடைந்தான் .அந்த கோள் கிட்டத்தட்ட சூரியனைப்போல நெருப்பைக்கக்கிக் கொண்டிருந்தது . அந்த கோளினுள் சிலர் வீடுகட்டும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் .

அவர்களில் ஒருவன் தன் கையால் நெருப்புக்குழம்பை எடுத்து , இன்னொருவனைப்படுக்கவைத்து அவன்மேல் பூசினான் .அதேபோல் பலரைப்படுக்கவைத்து சிலர் அவர்கள் மேல் நெருப்பைப்பூசிக்கொண்டிருந்தார்கள் .

நெருப்பை அள்ளுபவர்கள் ஒவ்வொருமுறை நெருப்பைப்பூசும்போதும் நெருப்போடு அவர்களின் கை அப்படியே துண்டாகி விடுவதையும் அதைத்தொடர்ந்து மீண்டும் அவர்களுக்குப்புதுக்கை கிடைப்பதையும் பார்த்துக்கொண்டிருந்தான் .

இன்னொருபுறம் விவசாயம் செய்ய சிலர் ஏதேதோ கருவிகளைவைத்து முயற்சித்துக்கொண்டிருந்தார் . அவர்களின் விவசாயம் என்னவென்றால் தண்ணீர் . ஒரு சொட்டுத்தண்ணீருக்கு கிட்டத்தட்ட 100டபேர் நெருப்புக்குழம்புகளுக்கு நடுவே கதிறிக்கொண்டே உற்பத்திச்செய்துகொண்டிருந்தார்கள் .அவன் புரிந்துகொண்டான் . இது நரகம் .

அவன் நினைத்தது போல அந்த கிரகமே நெருப்புக்குழம்பால் ஆனதல்ல . வெறும் அரையடி ஆழம் மட்டுமே நெருப்புக்குழம்புஇருந்தது . அதன்கீழே சாதாரண மண் தான் . ஆனால் ஒரு அதிசயம் என்னவெனில் ஒவ்வொரு முறை நெருப்பில் கால் வைக்கும்போதும் அவன் கால் வெந்துபோகிறது. அந்த வலியால் துடிதுடிக்கிறான் .

ஆனால் அவன் காலுக்கு எதுவுமே ஆகவில்லை .அவனை ஓரிடத்தில்கொண்டுவந்து நிறுத்திவிட்டு அனைவரும் கிளம்பிவிடுகிறார்கள் .திடீரென வெண்ணிற ஒளி ஒன்று அவன்முன்னால் தோன்றியது .

தவறை ஏற்றுக்கொள்கிறாயா ?என்றது அக்குரல் . அதில் ஒரு கடுமை வேறு மிகுந்திருந்தது .

என்ன தப்புபண்ணேன் ?என்றான் . வார்த்தைகளில் நடுக்கமும் , நாக்கில் குழறலும் தெள்ளத்தெளிவாக அவனது பயத்தை எடுத்துரைத்தது .உடனே அந்த ஒளி மறைந்தது .இருவர் வந்து அவனைப்பிடித்து இழுத்துச்சென்றார்கள் .அவர்களுடனே பயணித்த அவன் ஒரு கோட்டையை அடைந்தான் . அங்கு உருவமல்லாமல் வெண்ணிற ஒளி , பொண்ணிற ஒளி, செந்நிற ஒளி என்று சில ஒளிக்கற்றைகள் மட்டுமே இருந்தன .

நீ உன் நண்பனைக்கொலை செய்துவிட்டாய் .என்று வெண்ணிற ஒளி கூறியது .

இல்ல இல்ல . சத்தியமா இல்ல .என்று அவன் பதட்டப்படலானான் . அந்நேரம் அந்தஒளிக்கற்றைகள் அனைத்தும் இணைந்து ஒரு பெரியத் திரையாக அவன்முன் விரிந்தது . அதில் சில காட்சிகள் ஓடியது .
நோ . இதுக்கெல்லாம் அவன்தான் காரணம் . நா உன்ன கொல்லாம விடமாட்டேன்டா என்று ஹரி கோபாவேசத்தில் அலறினான் .அவனை இரு உருவங்கள் இழுத்துச்செல்ல எதிரே பேயடிச்சாமி அவனைக்கண்டும் காணாமல் ஒளிகளை நோக்கிச்சென்றுகொண்டிருந்தார் .
அதேநேரம் ராம் , அவளை மடியில் கிடத்திக்கொண்டிருந்தான் .அவள் மெல்ல கண்விழித்துப்பார்த்தாள் .

ராம் .டைம் என்ன ? ரொம்ப நேரம் தூங்கிட்டனா ?வா சீக்கிரம் கிளம்பலாம் என்று அவள் பேசிக்கொண்டே எழுந்தாள் .

ஜமுனா . இனிமேல் நீ உங்க வீட்டுக்குப்போக தேவையில்ல

ஏன்டா ? இப்படியே எங்கயாச்சும் ஓடிடலாம்னு சொல்றியா ?
இனிமேல் எங்கயும் ஓடவேண்டியதில்ல ஜமுனா .நம்ம வாழ்க்கைய இங்கயே ஸ்டார்ட் பண்ணிக்கலாம் . புதுசா ஒரு வாழ்க்க .

என்னடா சொல்ற ?

ஒரு வாரம் பொறு . உனக்கே எல்லாம் ஞாபகம் வரும் .என்று அவன் எளிமையாகத்தான் கூறினான் . அவளுக்கோ ஒருவாரம் முழுவதும் குழப்பத்துடனும் பயத்துடனும் இருந்தாள் .

ஒருவாரத்திற்குப்பின் அவளுக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது .அவளும் ராமும் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்தது , ராமின் நண்பன் ஹரிஜமுனாவை ஒருதலையாக காதலித்து ராமைக்கொலைசெய்தது , ஜெயிலில் இருந்து பரோலில் வந்த ஹரியைஇவள் விஷம் கொடுத்துக்கொன்றது , பின் இவள் ஜெயிலுக்குச்சென்றது , ஜெயிலில் யாரோ இவளைத்தாக்கியது என அனைத்தும் ஞாபகம் வந்தது .

அதெல்லாம் சரி . இறந்துபோன ஹரி எங்க ?
அவனுக்கு நரகத்துல தண்டனை கிடைச்சிருக்கும் .

ஏன் ?

ஏன்னா உன்ன கொலை செஞ்சதுக்கு .
அப்போ நானும் தானே கொல செஞ்சேன் .எனக்கு ?
உனக்குத்தான் உலகத்துலயே தண்டன கெடச்சிடுச்சே .

அப்போ இது என்ன இடம் ?

பூமிக்கும் நரகத்துக்கும் இடைப்பட்ட ப்ளேஸ் . இங்கயும் தப்புசெஞ்சா தான் நரகத்துக்கு கொண்டுபோவாங்க என்றவாறே அவளை அணைத்துக்கொண்டான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top