Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 22)

Category Archives: அமானுஷ்யம்

விடமாட்டேன் உன்னை – 9

விடமாட்டேன் உன்னை – 9

அதே நேரம் நான்கு தெரு தள்ளி இருக்கும் குமணன் தெருவில் உள்ளவர்களில் சிலர் வெளியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் கார்த்தியும் ஒருவன். அவனுக்கு வயது 17 இருக்கும். சங்கருக்கு ஒரு வகையில் தூரத்து உறவினன் ஆவான். அவன் வீட்டு வாசலில் கட்டில் போட்டு,  அதில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவனை வெள்ளையாய் ஒரு உருவம் தட்டி எழுப்பியது. அரை தூக்கத்தில் இருப்பவனை எழுப்பியது போல், தூக்க கலக்கத்தினூடே கண்விழித்துப் பார்த்தான் கார்த்திக். அந்த உருவம் ... Read More »

விடமாட்டேன் உன்னை – 8

விடமாட்டேன் உன்னை – 8

பஷீர் பாயின் குரலைக் கேட்டதும், சங்கரை சுற்றி நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். அவரவர் முகத்தில் ஆயிரம் டன் அதிர்ச்சி அப்பிக் கொண்டது. சங்கரின் மேல் அந்த ஆவி மறுபடியும் வந்து அமர்ந்து கொண்டதும், அவனுடைய முகம் பழையபடி இறுக்கமாக மாறிவிட்டது. அவனுடைய முகம் மறுபடியும் இருண்டு போனது. ஆவியைப் பார்த்து பஷீர் ஆவேசமாய் கத்த ஆரம்பித்தார் “சரிடா… நீயா… இல்ல இந்த பஷீரான்னு பார்த்துடறேன், யாருகிட்ட விளையாடுற” என்றபடியே, தன்னிடமுள்ள தாயத்தை எடுத்து, வாயினருகே ... Read More »

விடமாட்டேன் உன்னை – 7

விடமாட்டேன் உன்னை – 7

நவநீதன் பாய் வீட்டின் அருகே இருந்த சந்து வழியாக கடையை நோக்கி நடந்தான். அவன் மனதில் அடுக்கடுக்காய் கேள்விக் கணைகள் துளைத்துக் கொண்டே இருந்தது. ‘பேயே இல்லங்கறவனாச்சே நான்… என்னை அது என்ன பண்ண முடியும். இதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல… ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் கண்ணாலயே பார்த்தேனே..? இது ஒரு பக்கம் இருந்தாலும், நம்ம கூட வந்த தடியனுங்க ஏன் கடைக்கு வர்றதுக்கு கூட பயப்படறானுங்க..? பேய் பிடிச்சிடும்னா பயப்படறானுங்க… ... Read More »

விடமாட்டேன் உன்னை – 6

விடமாட்டேன் உன்னை – 6

“பஷீர் கிட்டயே விளையாடறியா..?” என்றவர் தனது மனதிற்குள் மேலும் சில மந்திரங்களை உதிர்த்தபடி மற்றொரு பத்திகுச்சி கத்தையை எடுத்தார். சங்கரின் பின்புறம் உட்கார்ந்திருந்த வேதாசலமும் அவரது மனைவி கமலம்மாளும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்கள். நவநீதன் இடது பக்கம் சற்று தள்ளி அமர்ந்திருந்தான். சங்கரின் வலதுபுறம் அவனுடைய சித்தி அலமேலு நின்று கொண்டிருந்தார். சங்கரின் மாமாவான ராமுவும், வெள்ளியங்கிரியும் சற்று தூரமாக நின்றபடி, நடப்பதை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பக்கத்தில் ஆட்டோ டிரைவர் கிலியுடன் நின்று கொண்டிருந்தார். சங்கர் ... Read More »

விடமாட்டேன் உன்னை – 5

விடமாட்டேன் உன்னை – 5

அப்போது…. வேகமாய் போய்க்கொண்டிருந்த ஆட்டோ திடீரென்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு ஊமையானது. விகாரமாய் சிரிக்கத் தொடங்கிய வேதாசலம், திடீரென்று கர்ண கடுரமாய் கத்த ஆரம்பித்தார். “டேய்… எம்புள்ளைய காப்பாத்த கருப்பசாமி இருக்கான்… எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான்…” என்றபடியே பல்லை நற நறவென்று கடித்தார். ஆட்டோ திடீரென்று நின்றதால் கூட அரண்டு போகாத ஆட்டோ டிரைவர், வேதாசலத்தின் திடீர் குரலால் சற்று அரண்டு போனான். ஆட்டோவின் இயக்கம் நின்றுபோனதால் வண்டியை ஓரம் கட்டி நிறுத்தினான். ‘போன சவாரிக்கு ... Read More »

விடமாட்டேன் உன்னை – 4

விடமாட்டேன் உன்னை – 4

நாயின் ஊளை சத்தத்தைக் கேட்ட மறு வினாடி சங்கரும் மெலிதாக ஊளையிட ஆரம்பித்தான். அதைக் பார்த்த வேதாசலம் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்படியே சிலை போல் ஸ்தம்பித்து நின்றார்கள். ராமனாதன் போட்ட ஊசியும், மருந்தும் வேலை செய்யவே சற்று நேரத்திற்கெல்லாம் அப்படியே தூங்கிப்போனான் சங்கர். அதிர்ச்சியில் இருந்தவர்களின் ஒவ்வொருவர் முகத்திலும் கவலை அப்பிக் கொண்டது. அவர்களை வேதாசலத்தின் குரல் நிமிர வைத்தது “போங்க… எல்லோரும் போய் படுங்க… மணி இப்பவே மூணாகுது… எல்லாம் காலைல பேசிக்கலாம்… ... Read More »

விடமாட்டேன் உன்னை – 3

விடமாட்டேன் உன்னை – 3

அந்த இடத்துல…” என்று சொல்லத் துவங்கிய வேதாசலத்தின் நினைவுகள் பின்னோக்கி பயணித்தன. வேதாசலத்தின் மாமன் மகன் கண்ணன். அவனுக்கு முப்பதைத் தாண்டிய வயது. திடகாத்திரமான ஆள். வேதாசலத்தின் வலது கரம் என்று சொல்லாம். அன்று ஒருநாள் அவனது நண்பனின் பிள்ளைகளுக்கு காதணி விழா மங்களபுரத்தில் நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்வதற்காக அவனது மற்றொரு நண்பனுடன் அந்த ஊருக்கு சென்றான். நண்பன் வீட்டு விழா என்பதால் அங்கு வந்த அவனது நண்பர்களுடன் கண்ணனுக்கு தண்ணியடிக்க வசதியாகப் போய்விட்டது. ... Read More »

விடமாட்டேன் உன்னை – 2

விடமாட்டேன் உன்னை – 2

குன்றத்தூரின் கடைசிப் பகுதியில் இருந்தது கணேஷ் நகர். இதன் கடைசித் தெருவில், கடைசி வீடாக இருக்கும் மாடி வீடுதான் வேதாசலத்தில் வீடு. அந்த அர்த்த ராத்திரியிலும் உள்ளே லைட் எரிந்து கொண்டிருக்க, பேச்சுக் குரல் கேட்டது. “ஏங்க… உங்ககிட்ட எத்தனை முறை சொல்லியிருக்கேன். நேரங்கெட்ட நேரத்தில பையனை வசூலுக்கு அனுப்பாதீங்கன்னு… இப்ப பார்த்தீங்களா மணி 12.40 ஆகுது. என் பையன இன்னும் காணோம்” என்ற கமலம்மாளுக்கு வயது 42 இருக்கும். கனத்த உடம்பு. பார்ப்பதற்கு நடிகை காந்திமதியை ... Read More »

விடமாட்டேன் உன்னை – 1

விடமாட்டேன் உன்னை – 1

விடமாட்டேன் உன்னை..! – திகில் தொடர்கதை (உண்மைச் சம்பவம்) சங்கரும் ராமுவும் ஒரே சீராக டிவிஎஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நேரம் இரவு பனிரெண்டு மணியை நெருங்கிக் கொண்டிருந்த்து. அன்று அமாவாசையானதால் ஊரெங்கும் இருளடித்திருந்தது. பியூஸ் போனதால் தெருவிளக்குகள் தேமே என்று நின்று கொண்டிருந்தன. டிவிஎஸ் வண்டி தெருவை விட்டு சாலையில் திரும்பியது. அந்த சாலையில் இவர்களது வாகனத்தைத் தவிர வேறு எந்த வாகனமும் தென்படவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒரு வெளிச்சப் புள்ளிகூட கண்ணில் படவில்லை. ... Read More »

பிறவி மர்மங்கள் – 28

கேத்தரின் அவளுக்கிருந்த பிரச்சனைகளிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டாள். பிரச்சனைகள் எதுவும் மீண்டும் தலைகாட்டுவதில்லை. நான் என்னுடைய நோயாளிகளுக்கு இத்தகைய சிகிச்சையை கொடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். பழைய முற்பிறவி நினைவுகளைத் தூண்டும் சிகிச்சையை நான் கீழ்கண்ட நோயாளிகளுக்கே பரிந்துரைக்கிறேன் – நோயாளிகளுக்கு பிறசிகிச்சைகள் அளிக்கும் பலன்கள், அவர்களின் நோயின் அறிகுறி, சிகிச்சைக்கு நோயாளிகளுடைய ஒப்புதல், எளிதில் ஹிப்னாடிஸத்தில் சமாதி நிலையை அவர்கள் அடையும் தன்மை, மற்றும் என்னுடைய உள்ளுணர்வின் தாக்கம் முதலியவற்றைக் கண்டு ஆராய்ந்த பிறகே, நோயாளிகளுக்கு இத்தகைய ... Read More »

Scroll To Top