Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் (page 21)

Category Archives: அமானுஷ்யம்

அதே மோதிரம் – 6

அவள் தான் யாதவி…..,மோதிரத்தின் சொந்தக்காரி. நான் ஆனந்தன். முழு பெயர் நித்தி ஆனந்தன். வழக்கமான ஆளாகத்தான் நானும் இருந்தேன். இருந்தேன் என்பது இறந்தகாலம்தானே. ஆனால் அந்த ஒவ்வொரு மாற்றமும் என் நினைவில் உயிராய். ஆங்கில படங்களில் மின்னல் பட்டு சக்தி பெறுவது, சிலந்தி கடித்து சக்தி பெறுவது, மோதிரம் அணிந்து சக்தி பெறவது போல இப்படித்தான் இதுதான் இதலால்தான் என என் சக்தியை நான் சொல்ல முடியாது. ஏனெனில் இந்த சக்தி எனக்குள் இருப்பது அல்ல; என்னுடன் ... Read More »

அதே மோதிரம் – 5

உடைந்த கைபேசியில் இருந்து இப்படியொரு குறுஞ்செய்தி வருவது சாத்தியமா..? வந்திருக்கிறதே! எப்படி..? மணியின் கைபேசி கோளாறை எப்படி சொல்வது. அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் சில சமயம் இதைவிட தாமதமாகவும் கிடைத்திருக்கிறது.  பல முறை பொம்மி சொல்லியும் தன் கைபேசியை மணி மாற்ற விரும்பவில்லை. வழக்கம் போலவே எழுந்தவன் அலுவலகம் சென்றான். வழக்கத்திற்கு மாறாக மணியின் முகம் வேறுமாதிரி இருந்தது. யார் கவனித்தார்களோ இல்லையோ மணியின் மேலதிகாரி கவனித்திருக்க வேண்டும். மணி, முதலாளி அறைக்கு அழைக்கப்பட்டான். மதிய உணவு நேரம். ... Read More »

அதே மோதிரம் – 4

மணியின் கையில் இருக்கும் மோதிரம் மணியின் நிச்சயதார்த்த மோதிரம். தனது புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டியவனுக்கு வந்த முதல் பொருள். அந்த மோதிரம், காதலி தனக்கு நிச்சயிக்கப்பட்ட விரலில் அணிவித்த அதே மோதிரம்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என மணியின் ஆழ்மனதின் குரல் காதில் கேட்கத் தொடங்கியது. குழப்பம் மேலும் சூழலை குழப்பியது. மோதிரம், காதலி, சாலை குழி, மஞ்சல் முகம், விடுமுறையில் இருக்கும் மாறன், திடீரென்ற ஆனந்தனுடன் சந்திப்பு, கண்ணாடி பின்னால் நடந்த யாரோ, எல்லாவற்றுக்கும் மேலாக கழட்டிய ... Read More »

அதே மோதிரம் – 3

அந்த தலையில்லாத உருவம் அங்கு இல்லை. மணி அதிர்ச்சியானது நண்பன் ஆனந்தனைப் பார்த்து. இந்த நண்பன் மணியின் பக்கத்துவீடு. நினைவு இருக்கின்றதா..? தொடக்கத்தில் கீழே விழுந்தும் பின்னால் வாந்த கனரக வாகனம் மோதம் சென்றதே. ஆம் ‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கடவுளுக்கு என் மீது அதிகம் நம்பிக்கை இருக்கிறது’ . இந்த வாசகம் ஒட்டியிருக்கும் மேஜைக்கு சொந்தக்கார். பக்கத்து வீடுதான் என்றாலும் மணியும் ஆனந்தனும் இப்படி முகத்துக்கு முகம் சந்திப்பது இப்போதுதான். அதுவரை ... Read More »

அதே மோதிரம் – 2

அதே மோதிரம் – 2

காதலியில் அழுகுரல் கேட்டவுடன் அதுவரை அடங்கியிருந்த கண்ணீர் வெளிவந்தது. மாற்றி மாற்றி இருவரும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். இனி அவர்கள் பேசுவதை கேட்போம். “நீங்க போனை என்ன செஞ்சிங்க..” “ஒன்னிமில்ல விடு; மன்னிச்சுடு….” “சொல்லுங்க என்ன செஞ்சிங்க.. தூக்கி எறிஞ்சிங்கதானே….?” “ம்….விடுவிடு தப்பு என் மேலதான்…. அவசரப்பட்டுட்டேன்…” “நீங்க என்ன செய்விங்க…. உங்க நிலமை தெரியாம நான் தான் அதிகம் பேசிட்டேன்… மன்னிச்சிடுங்க….இனி இப்படி பேச மாட்டேன்….” “இல்ல…தப்பு என் மேலதான்…” “இல்ல இல்ல என்மேலதான்… சரி ... Read More »

அதே மோதிரம் – 1

அதே மோதிரம் – 1

‘எனக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ; கடவுளுக்கு என் மீது அதிகம் நம்பிக்கை இருக்கிறது’ . இந்த வாசகம் ஒட்டியிருப்பது நம் நாயகனின் மேஜை மீதுதான். அதன் காரணம் சுவாரஸ்யமானதாக இருப்பதால் இங்கு சொல்வதில் தவறில்லை. கடந்த ஆண்டு நடந்த சம்பவம் அது. வேலைக்கு செல்லும் சமயம் வழக்கம் போல அம்மாவிடம் சொல்லியவனை அம்மா; ‘ஐயா, இன்னிக்காவது வெளியில் இருக்கும் சாமியைக் கூம்பிட்டிட்டு போப்பா…’ என்றார். வீட்டிலிருந்து வெளிவந்தால் இடது புறத்தில் சின்னதாய் ஒரு கோவில் ... Read More »

கொள்ளிக்கட்டைப் பேய் நகரும் 2ஆம் நம்பர் தோட்டம்

வெளி பரந்து விரிந்து கொண்டு எவ்வளவு தூரம்தான் போய்க் கொண்டிருக்கும்? வீட்டிற்கு முன் தாத்தா வந்து நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை ஏற்பட்டதும் திடீர் விழிப்பு. எழுந்து உட்கார வேண்டும். இல்லையேல் வெளியைப் பற்றிய ஞாபகம் பிசகிவிடும் என்பது போல் இருந்தது. சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து கொள்வதே பெரிய சிரமமாகப் பழகிப் போயிருந்தது. மீண்டும் ஜன்னலை நோக்கிப் பார்வையை நகர்த்தினேன். ஜன்னல் கதவு இலேசாகத் திறந்திருந்தது. வெளி சிறிய இடைவெளியில்தான் தெரிந்து கொண்டிருந்தது. வெளி முழுக்க இலேசான ... Read More »

சாந்தி அடையாத ஆவி கதை

சாந்தி அடையாத ஆவி கதை

முப்பது வருடங்களுக்கு முன்பு, சுக்கம்பட்டி என்னும் ஊரில் இருந்தது அந்த ‘முருகன் திரையரங்கம்’. சுற்றி உள்ள ஊர்களின் மக்கள் அனைவருக்கும் பொழுதுபோக்கிற்காக உள்ள ஒரே ஒரு திரையரங்கம் அதுதான். அவர்கள் சாதி மத பாகுபாடில்லாமல் ஒற்றுமையோடு வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் பகலில் கூலி வேலைக்குச் சென்றுவிடுவதால் இரண்டு இரவுக்காட்சிகள் மட்டுமே திரையிடப்படும். வாரம் முழுவதும் ஒரு படம் போடுவார்கள். வெள்ளிக்கிழமையானால் புதிய படம் மாற்றிவிடுவார்கள். அன்று வெள்ளிக்கிழமை. ‘குமரிப்பெண்’ படத்தின் இரண்டாவது காட்சியைப் பார்த்துவிட்டு ரங்கன் ... Read More »

ஏம் பாஸு இந்த ஆவி,பேய்,பிசாசு இதெல்லாம் உண்மையில் இருக்கா?

ஏம் பாஸு இந்த ஆவி,பேய்,பிசாசு இதெல்லாம் உண்மையில் இருக்கா?

“ஏம் பாஸு இந்த ஆவி,பேய்,பிசாசு இதெல்லாம் உண்மையில் இருக்கா?”,சூர்யா தான் கேட்டான். வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு தினாவின் அறையில் கூடியிருந்தார்கள். சூர்யா இப்படி ஏதாவது குண்டக்க மண்டக்க கேட்டு ஆரம்பிச்சு வைப்பான். பாண்டியும், தினாவும் பதில் சொல்லுவாங்க. அவர்கள் பதில்களை ஒட்டியும் வெட்டியும் அடுத்தடுத்துக் கேள்விகளைக் கேட்டு அந்தப் பகல் பொழுதை சுவாரசியமாக்குவான். அவன் வயசு அப்படி .26 வயசு.கல்யாணம் ஆகாத மொட்டப் பையன். அவங்கவங்க ஊருக்குப் போயிருந்தா கோழியடிச்சோ,கறியெடுத்தோ குடும்பத்தோட விருந்து ... Read More »

விடமாட்டேன் உன்னை -10

விடமாட்டேன் உன்னை -10

பெரியசாமி சொல்ல ஆரம்பித்தான் ”அண்ணே… நம்ம சங்கர்… நம்ம சங்கர் செத்துப் போயிட்டாண்ணே… அவனை பேய் அடிச்சு கொன்னுடுச்சி… நம்ம பசங்க எல்லாம் பயந்து போய் இருக்கானுங்கண்ணே… சங்கர் செத்துப் போன தகவலை சொல்லிட்டு வர சொன்னாங்க. அதான் வேகமாக போயிட்டிருக்கேன்…” என்று திக்கித் திணறி சொல்லி விட்டு, மூச்சிரைக்க நின்றான் பெரியசாமி. இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நவநீதனுக்கு, அதிலிருந்து மீள்வதற்கு சில மணித்துளிகள் பிடித்தது. பெரியசாமி சொன்னதைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்த கார்த்திக்கை நவநீதன் தட்டி எழுப்பினான். ... Read More »

Scroll To Top