பழங்களும் அதன் பலன்களும் எனும்
தலைப்பில் இன்று
மாதுளம் பழம்
*****************
எல்லாப் பழங்களும் உடலுக்கு
உகர்ந்தவை என்றாலும் மாதுளம் பழம்
மிக சிறப்பான ஒரு பழம்!!
அண்மைக் காலமாக பல ஆராட்சிகளின்
முடிவில் மாதுளம் பழத்தை பயன் படுத்தி
பழச்சாறுகளை தயாரிப்பதும்
சருமத்திற்கு பூசக் கூடிய பல வகையான
களிம்புகளை(கிறீம்) யும் தயாரித்து வருகின்றனர்.
அத்தோடு உணவுகளோடு
சேர்த்து உண்ணக் கூடிய (சலாட்)
வகையாகவும் பயன்படுத்தி பலர் பயன்களை பெறுகின்றனர்……..
மாதுளம் பழத்தில் இரும்பு சர்க்கரை தாது உப்புக்கள் விற்றமின்கள் நிறையவே அடங்கியிருக்கிறது…
இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவைகளையும் கொண்டிருக்கிறது…..
செரிமான திறன் குறைந்தவர்கள் வறட்சியான இருமல் இருப்பவர்கள்
மூக்கால் இரத்தம் கொட்டுபவர்கள்
மாதுளம் பழ தோலை மை போல அரைத்து எலுமிச்சம் சாறு கலந்து
உண்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும் ….
வயிற்றுப் போக்கையும் விரைவில் கட்டுப் படுத்தும்.
மாதுளங்கோதை அவித்து குடித்தால்
வயிற்று வலி நீங்கும்.
மாதுளம் பழத்தை ஆண்மையின் அடையாளமாகவும் பேரறிவின் குறியீடாகவும் கருதப்படுகிறது .
யூதர்கள் பொதுவாக ஒரு பழத்தில் 630 முத்துக்கள் என்றும் ஒவ்வொரு முத்துக்களும் ஆசிர்வதிக்கப்பட்டது எனவும் கருதுகிறார்கள் …
திருக்குரானில் சொர்க்கத்தின் பழம் எனவும் வர்ணிக்கப்படுகின்றது……!!
இந்துக்கள் வழிபாட்டுக்கும் அபிஷேகம் பண்ணவும் மாதுளம் பழம்
பயன்படுகிறது….
அபிராமி அந்தாதியிலே “ஒரு பாடலில் இடை வரியாக மாதுளம் பூ நிறத்தாளை” என அம்மனை வர்ணிக்கப்படுகிறது …..
இப்படியாக மாதுளம் பழத்தோடு
அரிய தகவல்கள் ஏராளமாகஇருக்கின்றன ..
இளமையோடும் அழகோடும் இருக்க மாதுளம் பழம் சாப்பிடுங்க…..!!
குடம் நிறைய முத்து அது எது?
சின்ன வயதிலே இந்த விடுகதையை
கேட்டு யோசித்ததும் ஞாபகத்துக்கு
வருகிறது…..!!
செம் பவள முத்துக்களை இன்று
உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்…