தியானத்தினால் நீங்கள் அன்பு மயமாய் மாறி விடுவீர்கள்.
புற உலகம் உங்கள் பரு உடலை மட்டுமே பார்த்தாலும்…
உங்களுக்குள் நீங்கள் சக்தி நிலையிலிருந்து (சூக்கும உடல்) இயங்கத் தொடங்குவீர்கள்.
24 மணி நேரமும் எதையாவது telecast செய்துகொண்டு இருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களைப் போல…
24 மணி நேரமும் உங்கள் சக்திநிலையிலிருந்து நிபந்தனையற்ற அன்பு அலைகள் வெளியேறிக்கொண்டேயிருக்கும்.
அங்கு நீங்கள் தொலைந்துபோய் இருப்பீர்கள். வெறுமனே அன்பை “வெளி”யில் பரப்பிக்கொண்டிருக்கும் (Radiating love in the cosmic) ஒரு Antenna மட்டுமே இருக்கும்.
இதைத் தவிர நீங்கள் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என புரிந்து உங்கள் மற்ற செயல்கள் எல்லாம் தானாய் நின்றுவிட்டிருக்கும்.
உங்களிடம் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு நபரும் தங்களை ஆசிர்வதிக்கப்பட்டவராய் உணரத் தொடங்குவர்.
உங்களுக்கு எது தேவையோ அதை பிரபஞ்ச சக்தி தேவையான நேரத்தில் வழங்கும்.
ஆனால் இவற்றையெல்லாம் அடையும் நோக்கம் கொண்டு தியானம் செய்தால்….
தியானத்தின் முதல்படியைக்கூட நீங்கள் தாண்ட முடியாது.
இவை வெகு இயல்பாய் நிகழும் தியானத்தின் உப விளைவுகளே.
துன்பத்தில் உள்ளவர்களுக்கு உங்களால் உதவ முடியாவிட்டால் ஒரு தவறுமில்லை.
அன்புருவாய் மாறி, அவர் துன்பம் நீங்கி நல்வாழ்வு பெற வேண்டும் என உயிரின் ஆழத்திலிருந்து எண்ணி…
அந்த அலைகளை பிரபஞ்சமெங்கும் அழுத்தமாக பரவவிடுங்கள். அங்கு பிரார்த்தனை இருக்கவேண்டுமேயொழிய நீங்கள் இருக்கக்கூடாது.
பின்பு அதைப் பற்றி மறந்து விடுங்கள்.
அது தானாகவே செயல்படத்தொடங்கும்.