Home » சிறுகதைகள் » புத்தர் போட்ட முடிச்சுகள்!!!
புத்தர் போட்ட முடிச்சுகள்!!!

புத்தர் போட்ட முடிச்சுகள்!!!

ஒரு நாள் புத்தர் காலை நேரத்தில் தம் சீடர்கள் முன்னால், கையில் சிறு துணியுடன் வந்தார். கைக்குட்டையைவிடப் சற்றுப் பெரிதாக இருந்தது அந்தத் துணி.
வந்து மேடையில் அமர்ந்து எதுவும் பேசாமல் அத்துணியில் முடிச்சுகளைப் போட்டுக்கொண்டிருந்தார்.
சீடர்கள் புத்தரின் வழக்கத்துக்கு மாறான செயலைக் கண்டு திகைத்து நின்றனர்.
ஐந்து முடிச்சுகள் போட்டபின்னர் தலை நிமிர்ந்து பேசினார் புத்தர்..
“நான் ஐந்து முடிச்சுகள் போட்டேன். இதை அவிழ்க்கப்போகிறேன். அதற்குமுன் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்போகிறேன்.“1. இந்த முடிச்சுகள் விழுந்துள்ள துணி, முன்பிருந்த துணிதானா? இல்லை வேறு துணியா?

ஆனந்தன் எழுந்தான்..  பெருமானே.. ஒருவகையில் எல்லாம் ஒன்றுதான்.முன்பு இருந்ததும் இப்போது இருப்பதும் ஒன்றுதான்.

முடிச்சுகள் மட்டுமே வேறுபாடு. ஒரு சிறு மாற்றம்ஏற்பட்டுள்ளது.அவ்வளவுதான்.
முன்பு இருந்த துணி சுதந்திரமானது. முடிச்சுகள் விழுந்ததும் இதன் சுதந்திரம் போய்விட்டது. இப்போதுள்ள துணி அடிமைப்பட்டுக் கிடக்கிறது. என்றான்.
அதற்குப் புத்தர்… “ஆம் ஆனந்தா. நீ சொன்னது சரிதான். ஒரு வகையில் ஒரே துணிதான்.மற்றொரு வகையில் வேறுபட்டுள்ளது.
எல்லோரும் இயல்பில் கடவுள்தான்! முடிச்சுப் போட்டுக்கொண்டு சிக்கலில் சிக்கி அடிமைப்பட்டு விடுகின்றனர்.
அதனால் தனித்தனி உலகங்களாக மாறிப்போய்விடுகின்றர். சரி எனது அடுத்த கேள்வி…

2.
இந்த முடிச்சுகளை அவிழ்க்க என்ன செய்யவேண்டும்?
சாரிபுத்தன் எழுந்து…“குருவே அவற்றை அவிழ்க்க நான் அருகில் வர அனுமதிக்கவேண்டும். முடிச்சுகள் எவ்வாறு போடப்பட்டுள்ளன என்று அறியாதவரை, அவற்றை அவிழ்க்கவும் வழியில்லை.

முடிச்சுப் போடப்பட்டதற்கான முறையை அறிந்தால் அவிழ்க்க எளிதாக இருக்கும். நெருங்கிப் பார்த்தறியாமல் எதுவும் செய்ய இயலாது.
நினைவோடு செய்தால் முடிச்சுகள் எளிமையாக விழும். நினைவின்றி விழும் முடிச்சுகள் மிகவும் சிக்கலானவை.சில நேரம் அவிழ்க்கவே முடியாமல் போய்விடும் என்றான்.
அதற்கு புத்தர்..சாரிபுத்தா, நீ மிகவும் சரியாகச் சொன்னாய். அதுதான் வாழ்க்கை. அதுதான் வாழ்க்கையின் சிக்கல்.“ என்றார் புத்தர்.

நம்முடைய வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்குக் காரணம் நாம்தான். நம்மை அறியாமல் நினைவின்றி நாம் இடும் முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் தடுமாறுகிறோம்.

இப்போது சொல்லுங்கள் நாமெல்லாம் முடிச்சவிக்கிகளா? இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top