Home » பொது » வானவன்சேரி அலகுமலை திருக்கோயில்!!!
வானவன்சேரி அலகுமலை திருக்கோயில்!!!

வானவன்சேரி அலகுமலை திருக்கோயில்!!!

மூலவர்                : முத்துக்குமார பாலதண்டாயுதபாணி

அம்மன்/தாயார்: வள்ளி, தெய்வானை

தல விருட்சம்     : வில்வம்

பழமை                 : 500-1000 வருடங்களுக்கு முன்

ஊர்                        : அலகுமலை

புராண பெயர்    : வானவன்சேரி

மாவட்டம்           : திருப்பூர்

 

திருவிழா      :

தைப்பூசத் தேர்த்திருவிழா, சித்திரைத் திருவிழா(தமிழ் வருடப் பிறப்பு), கார்த்திகை தீபத்திருவிழா, மற்றும் பவுர்ணமி கிரிவலம்.

 தல சிறப்பு   : 

ராமதூதன் ஆஞ்சனேயர் சிவபுத்திரன் திருத்தலத்தில் குடிகொண்டிருப்பது.

திறக்கும் நேரம் :

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.

முகவரி       : 

அலகுமலை அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், அலகுமலை கிராமம், அலகுமலை அஞ்சல், திருப்பூர் தாலுகா, திருப்பூர் மாவட்டம்- 6416665

பொது தகவல் : 

கொங்குநாட்டின் புகழ்பெற்ற முருகன் திருதலங்களில் ஒன்று. திருப்பூரிலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 300 படிக்கடுகளுடன் இம்மலைக்கோவில் அமைந்துள்ளது.

பிரார்த்தனை : 

கோவையில் புகழ்பெற்ற கேஜி குழும நிறுவனர் கோவிந்தசாமி நாயுடு அவர்கள் முதல் முறை இகோவிலுக்கு வந்தபோது அவரால் நடந்து மேலே செல்ல முடியவில்லை.

ஆனாலும் இக்கோவிலுக்கு பல திருப்பணிகளை செய்த அவர் பின்னர் பலமுறை வந்தபோது நடந்தே மேலே சென்றார்.

நேர்த்திக்கடன் : 

இப்பகுதியில் வாழும் பலர் தங்கள் குடும்பத்தின் முதல் ஆண் குழந்தைக்கு முத்துக்குமார் என்று பெயர் சூட்டி முடி காணிக்கை செலுத்துவது வழக்கம்.

தலபெருமை : 

இராம பக்த ஹனுமன் ஒரு முருகக் கடவுளின் சிவத்தலத்தில் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. இத்திருத்தலத்தின் பெருமைகள் அலகுமலைக் குறவஞ்சி எனும் நூலில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top