பெண்களே
நீங்கள் தினசரி அணியும் ஆபரணங்களின்
பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்
பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம்
மெஸ்மரிசம் செய்ய முடியாது.
தோடு :
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.
கண்பார்வை திறன் கூடும் .
நெற்றிச்சுட்டி :
நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.
செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும்
இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .
வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள்
அல்லது கயிறுகள் அணியும் போது உடலில் ரத்த ஓட்டம்
சீராகி பதற்றம்,படபடப்பு ,பயம் குறைகிறது .
மார்பக புற்று நோய் வருவது தவிர்க்கப் படுவதாக ஆய்விலே
உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது .
லம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.
காரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓட்டம் சீராக வைத்திருக்க உதவுகிறது.
வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.
முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யப்படுகிறது.
இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.
ஒட்டியாணம் :
ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின்
சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம்
கூடும்.
வயிற்று பகுதிகள் வலு வடையும்.
மூக்குத்தி :
மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சம்பந்தமான நோய்கள் குணமாகும் .
மூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் சிக்கல்
சரியாகி வருவதை உணரலாம் .
கொலுசு :
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.
கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .
மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .
செக்ஸுவல் ஹார்மோன்கள் தூண்டும்.
பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில்
அணியும் ஒரு அணிகலன் இது அணியும் போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும்.