Home » படித்ததில் பிடித்தது » ஒளவையாரின் நக்கல்!!!
ஒளவையாரின் நக்கல்!!!

ஒளவையாரின் நக்கல்!!!

ஒளவையாரின் நக்கல்:-

ஒரு முறை தமிழ் பாட்டியான அவ்வையை ஒரு புலவர் ‘கிழவி’ என்று கேலி செய்தார். உடனே அவ்வையார் ஒரு பாட்டிலே வசை பாடினார். எந்த அளவுக்கு கிழிச்சி எடுத்தாருனு இத படிச்சி தெரிஞ்சுக்குங்க.

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே,
மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேல்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே,
ஆரையடா சொன்னாயடா!

இதில் முதல் வரியில் வரும்“ எட்டேகால்“என்பதை எட்டு + கால் அதாவது 8 + 1/4 என்று பிரித்து படிக்க வேண்டும்.

அப்படி படித்தால் 8 என்பதற்கு உரிய தமிழ் எண் “ அ“ அதே போல் கால் 1/4 என்னும் பின்னத்துக்கு
உரிய தமிழ் எண் “ வ “ . எட்டேகால் = எட்டு + கால் அதாவது அ + வ = அவ
அந்த பாடலின் முதல் வரியை படியுங்கள். ‘அவ‘ லட்சணமே என்று பொருள் வருகிறதா?

அடுத்த வரி, எமனேறும் பரியே – எருமை மாடே
3-வது வரி ‘மட்டில் பெரியம்மை வாகனமே’ மூத்த தேவி என்னும் மூதேவியின் வாகனமான கழுதையே
‘முட்டமேல் கூரையில்லா வீடே’மேல் கூரையில்லா வீடு அதாவது குட்டிச்சுவரே

‘குலராமன் தூதுவனே’- ராமன் தூதுவனே – அதாவது குரங்கே
கடைசி சொல்லான‘ஆரையடா சொன்னாயடா ‘என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் வரும்.

“ நீ ஆரைக் கீரையைத்தான் சொன்னாய் அடா! “ என்பது ஒரு பொருள்.

இதில் இப்போது ‘சொன்னாய்‘ என்பதை மட்டும் பிரித்தால்
‘சொன்னாய்‘ = சொன்ன + நாய் என்று நாயயையும் குறிக்கும்
அல்லது

யாரை பார்த்து சொன்னாய் என்று கேட்பது போலவும் குறிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top