Home » பாரதியார் » மக்களின் மனதில் நிற்பவர் யார்
மக்களின் மனதில் நிற்பவர் யார்

மக்களின் மனதில் நிற்பவர் யார்

இதோ ஒரு இனிமையான கவிதை! இந்தக் கவிதையை இளவயதில் பள்ளியில் படிக்காத குழந்தைகளே இருக்க முடியாது. என்ன கவிதை அது!
“”செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே
சக்தி பிறக்குது மூச்சினிலே
 
பாரதியார் எழுதிய இந்தப்பாடல், ஒரு காலத்தில் மூன்றாம் பரிசு தான் பெற்றது. “ஆச்சரியமாக இருக்கிறதே!’ என்பவர்கள் தொடருங்கள்.
சென்னையில் ஒரு இலக்கிய அமைப்பினர் கவிதைப்போட்டி அறிவித்தனர். முதல்பரிசு ரூ.300, இரண்டாம் பரிசு ரூ.200, மூன்றாம் பரிசு ரூ.100. பாரதியாரின் நண்பர்கள்,””பாரதி! நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டால், நீங்களே முதல் பரிசு பெறுவீர்கள். உங்கள் பாட்டுக்கு ஏது எதிர்பாட்டு?” என்று தூண்டினர்.
பாரதியாரும் நண்பர்களுக்காக ஒப்புக்கொண்டார். கவிதை அனுப்பப்பட்டது. அந்தக் கவிதை தான் மேற்கண்ட பாடல்.
இலக்கிய அமைப்பினர், பாரதியின் கவிதைக்கு மூன்றாம் பரிசு அறிவித்தனர்.
நண்பர்கள் கொதித்துப் போய் பாரதியிடம் வந்தார்கள்.
“”பார்த்தீர்களா! தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற கவிதைகளில் எந்தச் சுவையும் இல்லை. இருப்பினும், அவற்றை முதல் இரண்டு பரிசுகளுக்கு தேர்வு செய்துள்ளனர். உங்கள் பாட்டு உயர்வானதாய் இருந்தும் ஒதுக்கி விட்டார்களே!” என்றனர்.
பாரதி அமைதியாக,””அவர்கள் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் என முடிவு செய்திருந்தார்களோ, அவருக்கு அதைக் கொடுக்க கையாண்ட குறுக்கு வழியே இந்தப் போட்டி. இதை பெரிதுபடுத்தாதீர்கள்,” என பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டார்.
அன்று மூன்றாம் பரிசு பெற்ற பாடல், இன்று முதல்தரமாக மக்கள் நெஞ்சில் நிற்கிறது. மற்ற பாடல்களை எழுதியவர்கள் பற்றியோ, அந்தப் பாடல்கள் பற்றியோ இதுவரை சிறு தகவல் கூட இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top