Home » சிறுகதைகள் » திராட்சை இனிப்பாக இருக்கிறது
திராட்சை இனிப்பாக இருக்கிறது

திராட்சை இனிப்பாக இருக்கிறது

ஜென்…
 ஜென் தத்துவங்களை கடைபிடிக்க எண்ணி பல முறை தோற்றிருக்கிறேன். அதை யாராலும் கடைபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஜென் தத்துவம் உன் வாழ்க்கையை இப்போது இந்த நொடி இந்த விநாடி வாழ்ந்து பார் என்பது அப்படியென்றால் சாப்பிடும் போது சாப்பிடு, படிக்கும் போது படி. சாப்பிடும் போது படிக்காதே என்பது தானே. The Zen And The Art Of Motorcycle Reparing என்று ஜென் தத்துவத்தை விளக்கும் ஒரு புத்தகம் கிடைத்தால் படித்து பாருங்கள்.
ஜென் என்ற ஒரு விஷயத்திற்க்கும் வெற்றிக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஜென் சித்தாந்தம் விளக்க ஒரு சின்ன கதை.
ஒரு ஜென் குரு இருந்தார் அவர் இறக்கும் சமயம் வந்தது. அவர் ஒரு பிரசித்தி பெற்ற குரு என்பதால் நிறைய சிஷ்யர்கள் அவருக்கு இருந்தனர். சுற்றியிருந்த சிஷ்யர்கள் ஆர்வத்துடன் நின்று கொண்டிருந்தனர், அவர் சாவதற்காக அல்ல, கடைசி நேரத்தில் ஏதாவது முக்கியமான செய்தி சொல்லமாட்டாரா என்றுதான். அவர் ஒன்றும் சொல்லவில்லை நேரம் சென்று கொண்டுருந்தது ஆனால் உயிர் பிரியவில்லை.
வெளியூர் சென்றிறுந்த பிரியமான மாணவன் ஒருவன் குருவின் உயிர் பிரிவதை ஞானதிருஷ்டியால் பார்த்துவிட்டு குருவிற்கு பிடித்த திராட்சை பழத்தை வாங்கிகொண்டு விரைந்து வந்தானாம்.
வந்த சிஷ்யன் குருவை வணங்கிவிட்டு அவருக்கு பழத்தை கொடுத்தானாம். குருவும் அதை வாங்கி சுவைத்து சாப்பிட ஆரம்பித்தார்.
குழமியிருந்த சிஷ்யர்களுக்கு பொறுமையில்லை, குரு கடைசியாக செய்தியேதும் சொல்லாமல் போய்விடுவாரோ என்பதால்.ஒரு சிஷ்யன் தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டே விட்டான்.
“குருவே, கடைசியாக நீங்கள் எங்களுக்கு ஏதேனும் சொல்லவீர்களா..”
குரு சொன்னாராம்:” திராட்சை இனிப்பாக இருக்கிறது..”
இதுதான் கதை. என்ன தலையும் புரியலை வாலும் புரியலை என்கிறீர்களா. சிந்தித்து பாருங்கள் அதுதான் ஜென்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top