அறிவியல் அறிவு வளர வளர, விண்வெளி பற்றியும் இப்புவியின் பல்வேறு பகுதிகளில் நடப்பவை பற்றியும் அறியும் ஆவல் மனிதனுக்கு அதிகரித்தது. இதன் விளைவாகத் தோன்றியதுதான் செயற்கைத் துணைக்கோள்கள் ஆகும். செயற்கைத் துணைக்கோள்கள் உண்மையில் மனிதரால் உருவாக்கப்பட்ட எந்திர சாதனங்களே. ராக்கெட்கள் எனப்படும் ஏவூர்திகளின் உதவியால் இத்துணைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன. செயற்கைத் துணைக்கோள்கள் இப்புவியைச் சுற்றிக் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் (orbit) செல்லும்; அப்போது அவை பதிவு செய்த, திரட்டிய தகவல்களை அனுப்பி வைக்கும். இந்தத் துணைக்கோள்களின் உதவியுடன் புவியின் ... Read More »