Home » 2015 » May » 15

Daily Archives: May 15, 2015

ஒரு நகரத்தின் கதை – 37

ஒரு நகரத்தின் கதை – 37

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ என்ற மாத இதழ் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அதன் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகர் என்னிடம் சிங்கப்பூர் தொடர்பாக ஏதாவது தொடர் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதும் சிங்கப்பூரில் இருக்கும் கட்டடங்களைப் பற்றி எழுதுகிறேன் என்று சற்றும் யோசிக்காமல் சொல்லி விட்டேன். சிங்கப்பூரின் கட்டுமானத் தொழில், சிங்கப்பூரில் இருக்கும் கட்டடங்களைப் பற்றிய பிரமிப்பு குறையாமல் இருந்தபடியால் அப்படிச் சொல்லிவிட்டேன். அவர் சற்றுத் தயங்கி சிங்கப்பூரில் இருக்கும் சாலைகளில் சில ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 36

ஒரு நகரத்தின் கதை – 36

சிங்கப்பூரை மலேயாவுடன் இணைப்பதில் மலேயாத் தலைவர்கள் உடன்படாமல் இருந்ததற்கு மக்கள் செயல் கட்சி இடது சாரி கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்தது என்று நினைத்தது மட்டும் காரணமல்ல. சிங்கப்பூரில் வாழ்ந்த மக்களில் 70% மேல் சீனர்கள். இந்த நிலையில் சிங்கப்பூரை மலேயாவைச் சேர்ந்த மாநிலங்ககளில் ஒன்றாகச் சேர்த்தால் சீன இனத்தவரைப் பெருவாரியாகக் கொண்ட மாநிலமாக அமையும். சீன இனத்தவரைப் பெரும் பான்மையினராகக் கொண்ட ஒரு மாநிலம் அமைவது மலேசியாவுக்குள் ஒரு கம்யூனிஸ மாநிலம் உருவாகலாம் என்ற அச்சம். 1961 ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 35

ஒரு நகரத்தின் கதை – 35

திரு.டேவிட் மார்ஷல் மாணவர்களுடனும்,தொழிலாளிகளுடனும் ஏற்பட்ட முரண்பாடுகளால் மட்டும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை. காலனி ஆட்சியாளர்களுடன் எப்போதும் முரண்பட்டு நின்றார். ஆங்கிலேய ஆளுநரால் தான் கட்டுப்பட்டு இருப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க முயன்றார். தன்னுடைய தனித்தன்மையால் சிறந்த ஆட்சியாளர் என்ற பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களைச் செயலாக்க முயன்றார். அப்போதைய ஆளுநர் சர் ராபர்ட் பிளாக், டேவிட்மார்ஷல் இன்னும் கூடுதலாக நான்கு உதவி அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தார். ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 34

ஒரு நகரத்தின் கதை – 34

ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி 1954 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பல புதிய கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கின. மிகவும் பரபரப்பாக நடைபெற்றத தேர்தலில்  எஸ். பி. பி. என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூர் ப்ரொக்ரெசிவ் கட்சி (சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி) படுதோல்வி அடைந்தது. இதற்கு முன்னால் 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில்  சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மூன்று இடங்களை வென்றது. மற்ற மூன்று இடங்களை சுயேச்சை வேட்பாளர்கள் ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 33

ஒரு நகரத்தின் கதை – 33

1953 ஆம் ஆண்டு காலனி அரசாங்கம், சர் ஜியார்ஜ் ரெண்டல் என்பவரைத் தலைவராகக் கொண்ட ஒரு ஆணைக்குழுவை உருவாக்கியது. இந்த குழு சிங்கப்பூரை முழுமையாக தன்னாட்சி பெறுவதற்கான வழிமுறைகளை உருவாக்க முனைந்தது. சிங்கப்பூர் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சட்டங்களை மறு பரிசீலனைச செய்தது. சிங்கப்பூர் தன்னிறைவு பெற்று தனித்து இயங்கக்கூடிய நிலையில் இருந்தால் மற்றும் சிங்கப்பூர் ஒரு பெரிய நாட்டுடன் இணைந்து செயல்படும் அளவிற்கு முழுமையாக வளர்ச்சியடைந்திருந்தால் அதற்குத் தன்னாட்சி வழங்கலாம். அது முழுமையான தன்னாட்சியாக இல்லாமல் ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 32

ஒரு நகரத்தின் கதை – 32

சிங்கப்பூரில் மிகப்பெரிய இனக்கலவரம் நடப்பதற்குக் காரணமான பெண் மரியா என்ற நதிரா இந்தக் கலவரங்கள் நடந்தபோது எங்குஇருந்தாள்? என்ன ஆனாள்? கலவரங்கள் தொடங்கியவுடன் பெரிய கூட்டம் மரியா இருந்த கன்யாஸ்திரிகள் மடத்திற்குள் நுழைய முயற்சித்தது. ஆனால் காவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளே நுழைய விடவில்லை. யார்க்ஹில்லில் இருந்த பெண்கள் காப்பகத்திற்கு மரியாவை அனுப்ப முயற்சித்தனர். அதுவும் நடக்காமல் சிங்கப்பூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்த செயிண்ட் ஜான்ஸ்தீவுக்கு அனுப்பினர். பின்னர் மறுநாளே அடிலைனுடன் மரியா நெதர்லாண்ட்ஸுக்கு ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 31

ஒரு நகரத்தின் கதை – 31

நாதிரா என்பது மரியாவுக்கு அமீனா வைத்தபெயர். அடிலைன் ஹெர்டோக் ஜப்பானியப் படைகளால் பிடிக்கப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது தன் குழந்தைகளையும் தன்னுடன் அனுப்பும்படி அம்மாவிடம் சொன்னாள். அவள் அம்மா மற்ற எல்லாக் குழந்தைகளையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள். ஆனால் மரியா அமீனாவுடன் இன்னும் சிறிது நாள்கள் இருந்து விட்டு வருவாள் என்று சொன்னதை நம்பினாள். ஆனால் அவள் அதன் பிறகு விடுதலை ஆகி வெளியே வரும் வரை மரியா வரவில்லை. விடுதலை ஆகி வெளியே வந்ததும் ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 30

ஒரு நகரத்தின் கதை – 30

மரியாவும், அமீனாவும் மரியாவின் கணவன் மன்சூர் மூவரும் விசாரணைக்காகக் காத்திருந்தனர். மரியா முஸ்லிம்கள் நல சங்கத் தலைவர் எம்.ஏ.மஜீத் வீட்டில் தங்கியிருந்தாள். வெளியே சென்றால் பொதுமக்கள் அவளை அதிக ஆர்வத்தோடு கவனித்தனர். இது மரியாவுக்கு அதிக சங்கடத்தை ஏற்படுத்தியது. இந்த அளவுக்கதிமான கவனிப்பால் மரியா வெளியே செல்வதைக் கூடியமட்டும் தவிர்த்து வீட்டிலேயே இருந்தாள். சிங்கப்பூரில் மட்டுமல்லாது உலகஅளவில் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருந்த மக்களும் கவனிக்கத் தொடங்கினர். பாகிஸ்தான் முஸ்லிம் சங்கங்கள் மரியாவுக்குத் தேவையான நிதியுதவி செய்வதாகக் ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 29

ஒரு நகரத்தின் கதை – 29

இரண்டாம் உலகப்போரின் இறுதிகட்டங்கள் உலக அரசியலிலும், ஆட்சிகளிலும் பலமாற்றங்களைக் கொண்டு வந்தன. போர் முடியும் வரை போர் எப்போது முடியும்? இயல்பு வாழ்க்கைக்கு எப்போது திரும்ப முடியும் என்று காத்திருந்தார்கள். ஆனால் போர் முடிந்த பிறகு திரும்பும் வாழ்க்கை எப்படிப்பட்ட வாழ்க்கையாக இருக்க முடியும்? தொடர்ந்த இரு உலகப்போர்களால் நிலைகுலைந்த பல ஐரோப்பியநாடுகள் தாங்கள் காலனி அமைத்தநாடுகளில் தங்கள் ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த முடியாத சூழல் உருவானது. இந்திய விடுதலைப் போரின் உச்சகட்டமாக இரண்டாம் உலகப்போரின் முடிவில் ... Read More »

ஒரு நகரத்தின் கதை – 28

ஒரு நகரத்தின் கதை – 28

ஷோனன்தோ நகர வாழ்க்கை அங்கு வாழ்ந்த மக்களுக்கு எப்படியிருந்தது? தொடர்ந்து பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த உலகப் போரினால் உலகமே பொருளாதாரச் சீர் கேட்டினால் நிலை குலைந்து போயிருந்தது. போரை நேரிடையாக சந்தித்து தோல்வி அடைந்து எதிரிகளின் வசம் பிடிபட்ட நாடு எப்படிப்பட்ட வறுமையில் வாடியிருக்கும்? உணவுப் பற்றாக்குறையினால் பட்டினிச் சாவுகள்! உணவுப் பங்கீட்டு முறையில் வழங்கப்பட்ட அரிசி, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் எந்தக் குடும்பத்திற்கும் போதுமான அளவு கொடுக்கப்படவில்லை. மரவள்ளிக் கிழங்கை சுட்டுத் தின்றனர். ... Read More »

Scroll To Top