இந்தியாவின் அஸ்ஸாம்[Assam] மாநிலத்தை சேர்ந்த ஜெடிங்கா [Jetinga] என்னும் கிராமத்தில்தான் தான் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நிகழ்கிறது . இந்த ஊரில் ஏறக்குறைய 2500 மக்கள் வசித்து வருகின்றனர் . இந்த கிராமம் பிரபலம் ஆனதற்கு காரணம் இந்த பறவைகள் தற்கொலைதான் !
உலகில் பல இடங்களில் இருந்து இடம் பெயர்ந்து இங்கு வரும் பறவைகள் பெரும்பாலும் திரும்ப செல்வதில்லை . இங்குள்ள வீதிகளில் செத்து விழும் . இது இன்று நேற்று நடப்பதில்லை ! நூற்றாண்டுக்கும் மேலாக இந்த சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது . இந்தியாவில் அறிவியலால் விளக்க முடியாமல் இருக்கும் பல நிகழ்வுகள் உண்டு , அதில் மிகவும் முக்கிய இடம் பெற்றது இந்த பறவைகள் தற்கொலை தான்.
மேலும் நமது புருவங்களை விரிய வைக்கும் காரணம் , இந்த பறவைகள் அனைத்தும் மாலை 6 முதல் 9.30 மணி அளவில் மட்டுமே இறந்து விழுகின்றது ! மேலும் இது நடப்பது அக்டோபர் மட்டும் செப்டம்பர் மாத அம்மாவாசை தினங்களில் மட்டுமே ! இந்த அமானுஷ்ய நிகழ்வு நடப்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே . இதன் அளவு ஒரு மைல் தூர நீட்டமும் , 600 அடி அகலமும் மட்டுமே !
இதற்கு பல வகை விளக்கங்கள் கூறப்படுகிறது .
*கிராமத்தில் உள்ள விளக்கு வெளிச்சங்கள் பறவைகளை குழம்பி விடுகின்றன என்று கூறுகின்றனர் சிலர் .
*அந்த குறிப்பிட்ட இடத்தில் பூமியின் காந்த சக்தி வெளிப்பாடு அதிகமாக உள்ளது எனவும் அதனால் தான் பறவைகள் இப்படி நடந்து கொள்கின்றது என்றும் ஒரு சிலர் கூறுகின்றனர்.
இந்த மாதிரி பல காரணங்கள் கூறப்பட்டாலும் , இது வரை இதை பற்றி தெளிவாக எதுவும் சொல்ல படவில்லை !