Home » 2015 » April (page 4)

Monthly Archives: April 2015

கறுப்பு வரலாறு – 6

களபிறர்கள் ராட்சதர்கள். நீதி நேர்மை என்ற வார்த்தைகளே அவங்க அகராதியில் இல்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று அட்டூழியங்கள் செய்தனர். ஒரு ராஜா ஒரு மந்திரி என்றெல்லாம் இல்லை. கூட்டமிருந்தால் வாள் இருந்தால் ராஜா தான். கொள்ளையடிக்கிறதும் குகைகளில் மறைந்து போவதும் தீவுகளில் அந்த வேட்டைகளை புதைத்து வைப்பது என்று ஒரே கூத்து தான். இன்றைய தமிழ் நாட்டின் உள்ளேயும் கடல் பிரதேசத்திலும் நிறைய தீவுகள் இருந்ததா சொல்றாங்க. அதுவெல்லாம் இவங்க கட்டுப்பாட்டில தான் இருந்துதாம். வழிப்பறி ... Read More »

கறுப்பு வரலாறு – 5

ரகுவின் வீட்டிலும் ரவியின் வீட்டிலும் அதிகம் பிரச்சனை இருக்கவில்லை. ரகுவின் வீட்டில் அவனுக்கு மூன்று மாதத்திற்கு தேவையான உணவு வகைகளை எடுத்து அடுக்க ஆரம்பித்துவிட்டனர். படுக்கை ஹோல்டார்கள், காம்பிங் பொருட்கள், துணி மணி, குறிப்பு புத்தகங்கள், விளக்குகள், மருந்து மாத்திரை, சமைக்கும் பொருட்கள் என்று ஆராய்ச்சிக்கு செல்லும் போது தேவையான விஷயங்கள் என்று ஒரு பட்டியலிட்டு தந்திருந்தார் சந்திரசேகர். எங்கெல்லாம் செல்லவேண்டும் எந்த விஷயங்கள் விட்டுப்போயிருக்கின்றன, யாரை சந்தித்தால் என்ன தகவல் கிடைக்கும் என்று அணைத்தையும் விளக்கியிருந்தார் ... Read More »

கறுப்பு வரலாறு – 4

சவிதா வீட்டில் எந்த சமாதானமும் செல்லவில்லை. நீலவேணி வந்து பேசினாள். ஒன்றும் தேராமல் போகவே பழனியப்பன் வந்தார். சவிதாவின் அண்ணனை பார்த்து, சந்துரு, நீ சொல்றது சரிதான் பா. அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வை சவிதாவுக்கு. ஆனா ஒன்னு நினைச்சிப் பாரு. உன் தங்கச்சி இந்த ஆராய்ச்சியில வேலை செய்தா பிரபலமாயிடுவா. அந்த பெருமை நாளைக்கு அவனை கட்டிக்கப்போறவனுக்கும் தானே. உனக்கும் மாப்பிள்ளை பாக்கறுது சுலபமாயிடும் இல்லையா. சார் நீங்க சொல்றது சரி. ஆனா கல்யாண ... Read More »

கறுப்பு வரலாறு – 3

நல்லா பேசனே பழனி. கரிகாலன் வந்து சொன்னார். யாராவது மசிஞ்சாங்களா என்று கேட்டார் சந்திரசேகர். வரலாற்றுக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர். பல புத்தகங்கள் எழுதியவர். வேலையில் இத்தனை கவனம் கொண்டு வீடு மனைவி மக்களை துறந்துவிட்டு தனியாக வாழ்பவர். அந்த ஓட்டு வீட்டில் வெறும் புத்தகங்களும் பழைய ஓலைகளும், கல் வெட்டின் பெரிய புகைப்படங்களும் பூதக்கண்ணாடிகளும் வவ்வால் நாற்றமும் நிறைந்துக் கிடந்தன. ஆமாம் சார். உணர்ச்சிப் பூர்வமா பேசியிருக்கேன். இந்த வருஷம் யாரும் இந்த தலைப்பை ... Read More »

கறுப்பு வரலாறு – 2

சவிதா தான் இந்த ஐவரணி வரலாறு பாடம் எடுக்க காரணம். அவள் இந்த கல்லூரியை தேர்ந்தேடுத்த காரணம் வீட்டை விட்டு அதிக தூரத்தில் இருந்ததால். அப்பா அம்மா அண்ணன் தொந்திரவு இல்லாமல் ஒரு நாள் முழுக்க இருக்கலாம். ரவி சவிதாவுடன் ஒட்டிக் கொண்டான். 8வது வகுப்பில் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு உனக்கு என்னை பிடிச்சிருக்கா என்று எழுதி விஞ்ஞானப் புத்தகத்தில் வைத்து சவிதாவிடம் கொடுத்தான். அவள் ஒரு வருடத்திற்கு பிறகு 9வது வகுப்பில் ஆம் என்று எழுதி ... Read More »

கறுப்பு வரலாறு – 1

களப்பிறர் ஆட்சியைப் பற்றி இதுவரை யாராலும் சரியாக ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. நம்மிடம் உள்ள நூல்களையும் கல்வெட்டுகளையும் பழம் பெரும் கோவில்களில் கிடைத்த செய்திகளையும் பிராம்மி கல்வெட்டுகளையும் பழைய ஓலைகளையும் ஆராய்ந்து பார்த்ததில் தமிழக வரலாற்றைப் பற்றி பல அரும் பெறும் விஷயங்களை சேகரித்து விட்டோம். ஆனால் இந்த களப்பிறர் ஆட்சியைப் பற்றி யாராலேயும் நிறைவாக ஒன்றும் எழுத முடியவில்லை. இதைப் பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் ஒரு திறந்த ஆய்வுக் கட்டுரை நிறைவு பெறாமலேயே இருக்கிறது. ... Read More »

கடைசி பேட்டி – 22 ( மர்மத் தொடர் )

கண்விழித்துப் பார்த்தான். மயக்கம் வருவதற்கு முன் கை கட்டுடன் தான் எழுந்திரிக்கப்போறேன் என்று நினைத்துக்கொண்டு தான் மயங்கினான். அதிசயமாக கையில் கட்டு இல்லை. தலையில் பத்துப் பேர் உட்கார்ந்திருந்தது போல கனத்தது. சட்டையில் ரத்தம். ஒழுகி கசிந்து ஒரு துர்நாற்றத்தை கொடுத்தது. பசித்தது. ரத்தத்தை தொட்டு நாற்காலியில் 8.30 என்று எழுதினான். இரண்டாவது முறையாக முழு எண் இல்லை. இருட்டான ஒரு அறை. பெரிய பங்களாவின் ஹாலாக இருக்கும். ஒரு டிவி. ரெயின் டிவி ஓடிக்கொண்டிருந்தது. ரவி ... Read More »

கடைசி பேட்டி – 21 ( மர்மத் தொடர் )

ரெயின்போ டிவிக்கு யோகம். சூப்பர் டிவி நிருபர்கள் மூன்று அமைச்சர்களையும் ஒரு அமைச்சரின் பேரனையும் கொன்று விட்டு ஓடிவிட்டார்கள். பகிரங்கமாகவே சூப்பர் டிவி குற்றவாளிகள் என்று தலைப்பிட்டு செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இவர்களே சில நேயர்களை செட்டப் செய்து இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க அவர்களும் சொல்லிக் கொடுத்தப் படி ஒப்பித்தார்கள். இவங்களை தூக்கில மாட்டனும். பொறுப்பான பொதுவாழ்வில் இருக்கிறவங்களை இப்படி சட்டத்தை கையிலெடுத்துகிட்டு சூப்பர் டிவி நிருபர்கள் செய்தது கொடுமை சூப்பர் ... Read More »

கடைசி பேட்டி – 20 ( மர்மத் தொடர் )

அமைச்சர் ரமணி ஆனந்தனின் வீடு. வீட்டிற்கு ஏதிராக வண்டியை நிறத்தினான். தூரத்தில் பின்னாடி ஒரு ஜீப் வந்து நின்றதை கவனித்தான். விக்ரமனாக இருக்கும். வெளியே இருந்த காவலாளி வண்டியை நன்றாக சோதனைப் போட்டான். பிறகு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் இயந்திரத்தை வண்டிக்கு கீழ் உள்ளே விட்டு இழுத்தான். வெளியே நிறைய கட்சிக்காரர்கள். இவனுக்கு அவர்கள் போலீஸ் என்று தெரியும். உள்ளே நுழையும் முன்பே இவனை தனியாகவும் அவளை தனியாகவும் சோதனை செய்தனர். நிருபர்களிடம் பேனாவும் பேப்பரையும் தவிர்த்து என்ன ... Read More »

கடைசி பேட்டி – 19 ( மர்மத் தொடர் )

ராதிகாவை மெதுவாக முன்னே போகவிட்டு நந்தினியிடம் வந்தான். அவள் கைகளைத் தொட்டுத் திருப்பி ஒரு போஸ்ட் இட்டை ஒட்டிச் சென்றான். அவன் லிப்டுக்குள் சென்றான். அவனுக்கு அக்பர் மீது கோபமில்லை என்று காட்ட அவன் எடுத்து வந்த பேனாவை கழுத்துப் பட்டையுடன் அணிந்திருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தான். அவன் லிப்டுக்குள் சென்றதும் ஆவலாய் அதை திருப்பி பார்த்தாள். அதிர்ச்சியடைந்தாள். சாவு என்னை துரத்துகிறது. அதனால் நீ என்னைத் துரத்துவதை நிறுத்தி விடு. என்ன பைத்தியக்காரத்தனம் இது. அப்படி ... Read More »

Scroll To Top