Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கடைசி பேட்டி – 21 ( மர்மத் தொடர் )

கடைசி பேட்டி – 21 ( மர்மத் தொடர் )

ரெயின்போ டிவிக்கு யோகம். சூப்பர் டிவி நிருபர்கள் மூன்று அமைச்சர்களையும் ஒரு அமைச்சரின் பேரனையும் கொன்று விட்டு ஓடிவிட்டார்கள்.

பகிரங்கமாகவே சூப்பர் டிவி குற்றவாளிகள் என்று தலைப்பிட்டு செய்திகள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தது.

இவர்களே சில நேயர்களை செட்டப் செய்து இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்க அவர்களும் சொல்லிக் கொடுத்தப் படி ஒப்பித்தார்கள்.

இவங்களை தூக்கில மாட்டனும். பொறுப்பான பொதுவாழ்வில் இருக்கிறவங்களை இப்படி சட்டத்தை கையிலெடுத்துகிட்டு சூப்பர் டிவி நிருபர்கள் செய்தது கொடுமை

சூப்பர் டிவி சீப் பப்ளிசிட்டிக்காக இப்படி பண்ணியிருக்கக்கூடாது என்று நாக்கு மீது நரம்பில்லாமல் பேசிக் கொண்டிருந்தனர்.

செய்தியாளர் நேராக ராஜேஷின் தந்தைக்கு போன் செய்து உங்க மகன் கொலை செஞ்சிருக்கிறதை பத்தி என்ன நினைக்கிறீங்க என்று கேட்க அவர் அதிர்ந்து போனார். அவன் தாயிடமோ சின்ன வயசிலேர்ந்தே உங்க பையன் கொலைகளை செய்வாரா? என்று கேனைத்தனமாக கேள்வி கேட்க அவர் அழுதுக்கொண்டே அவன் அப்படி செய்யமாட்டாங்க. அவன் நல்ல பிள்ளை என்று சொன்னார்.

அவரு அமெரிக்காவுக்கு ஓடி வந்தால் நீங்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பீர்களா இல்லை மறைத்துவிடுவீர்களா என்று செந்தமிழில் இன்னொரு பிதற்றல்.

இல்லை. அவன் தப்பு செஞ்சிருந்தா அவன் தண்டனையை அனுபவிக்கனும். ஆனால் அவன் தப்பு செய்யமாட்டான். அவன் இங்கே வந்தா கட்டாயம் போலீஸ்சுக்கு சொல்லுவோம் என்று விட்டு அழுதுக் கொண்டே இணைப்பை துண்டித்தார்.

டிவி பார்த்துக்கொண்டிருந்த நந்தினிக்கு ஒரே அதிர்ச்சி. என் செல்லக் குட்டியின் பெயரை இப்படி அசிங்கப் படுத்துகிறார்களே என்று. அழுது அழுது அவள் கன்னம் வீங்கி கண் சிவந்திருந்தது. பெண்கள் அழுதால் நன்றாக இருப்பதில்லை. அதுவும் நந்தினி போன்ற அழகு பதுமைகளின் புன்னகையால் உலகை அடக்கலாம்.

அவள் தந்தை தாய் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். சமயோசிதமாக அவள் தந்தை ராஜேஷின் தந்தைக்கு போன் செய்து நான் ராஜேஷோட நண்பன். நீங்க ஏதுக்கும் பயப்படவேண்டாம். நீங்க அவசரமாக இந்தியா வரவேண்டாம். உங்கப் பையன் எந்த தப்பும் செய்திருக்கமாட்டாரு. நாங்க எல்லாத்தையும் பாத்துக்குறோம் என்று ஆறுதல் அளித்தார்.

இந்த காரியம் செய்ததற்காக அப்பாவை கட்டி அணைத்து முத்தம் இட்டாள்.

ஐ லவ் யு என்று அன்போடு அவள் உச்சந்தலையில் முத்தமிட்டார்.

என் செல்ல தேவதைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேனடா என்று மகளை அணைத்தார்.

உருகிப்போனார் ராஜேஷின் தந்தை. உங்க போனுக்கும் நீங்க செய்யற உதவிக்கும் ரொம்ப நன்றி என்றார்.

ரெயின் டிவி புழுதி மேல் புழுதி வாரி இறைத்துக் கொண்டிருந்தது.

சூப்பர் டிவியில் ப்ளாஷ செய்தியாக வதந்திகளை நம்ப வேண்டாம். நாங்கள் பொறுப்பான சமூக சிந்தனையுடன் செயல்படும் ஒரு தொலைக்காட்சி. கடைசியான தகவல் காவல் துறையிடம் இருந்து வரும் வரை எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

நந்தினி தன் அறைக்குச் சென்றாள். அவன் கொடுத்த போஸ்ட் இட்களை படித்தாள். அவன் தந்த ரோஜாவை முத்தம் இட்டாள். சீக்கிரம் வந்துற்ரா என்று அதனிடம் பேசினாள்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top