Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கடைசி பேட்டி – 20 ( மர்மத் தொடர் )

கடைசி பேட்டி – 20 ( மர்மத் தொடர் )

அமைச்சர் ரமணி ஆனந்தனின் வீடு. வீட்டிற்கு ஏதிராக வண்டியை நிறத்தினான். தூரத்தில் பின்னாடி ஒரு ஜீப் வந்து நின்றதை கவனித்தான். விக்ரமனாக இருக்கும்.

வெளியே இருந்த காவலாளி வண்டியை நன்றாக சோதனைப் போட்டான். பிறகு வெடிகுண்டு கண்டுபிடிக்கும் இயந்திரத்தை வண்டிக்கு கீழ் உள்ளே விட்டு இழுத்தான்.

வெளியே நிறைய கட்சிக்காரர்கள். இவனுக்கு அவர்கள் போலீஸ் என்று தெரியும். உள்ளே நுழையும் முன்பே இவனை தனியாகவும் அவளை தனியாகவும் சோதனை செய்தனர். நிருபர்களிடம் பேனாவும் பேப்பரையும் தவிர்த்து என்ன இருக்கும். பேனாவால் கொலைசெய்ய முடியுமா? ஆனால் அதையும் எடுத்துக்கொண்டார்கள்.

முதல் தளத்திற்கு அழைத்துச் சென்று ஒரு பெரிய அறையில் அமரவிட்டார்கள்.

5 நிமிடம் கழித்து அமைச்சர் வந்தார். வணக்கம் தம்பி. வணக்கம் அம்மா. நல்லா இருக்கீங்களா?

நல்லா இருக்கோம் சார். நீங்களே கூப்பிட்டு இன்டர்வ்யூ கொடுக்கறது ஆச்சரியமாய் இருக்கு என்றான்.

நேரம் வந்திடுத்து தம்பி அதுக்கு. நீங்க ஒவ்வொரு அமைச்சராய் குறி வெச்சிக் கொலை பண்ணறீங்களாமே. அதனால நானே கூப்பிட்டு என்னால உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டுடலாம்ன்னு தான் கூப்பிட்டேன்.

சார் நீங்க எங்களை தப்பா புரிஞ்சிகிட்டிங்க. நாங்க யாரையும் கொலை செய்யலை. யாரு உங்களுக்கு சொன்னது?

போன் வந்தது தம்பி. நீங்கள் நம்பர் எழுதற பழக்கம் உள்ளவராம். நாலுன்னு எழுதினீங்களாம். மந்திரி பட்டியலை தயார் பண்ணீங்களாம். அதுல இரண்டு பேரை முடிச்சிட்டீங்களாம். மூனாவதா என் பேரு இருக்காம் என்று ஒப்பித்தார்.

யாரோ கூட இருந்து குழி பறிக்கிறார்களா? சே நம்ம கம்பெனியில் யாரும் இருக்க வாய்ப்பில்லை. திரும்பி ராதிகாவைப் பார்த்தான். கொலையெல்லாம் இவள் வருவதிற்கு முன்பே! போலீஸ் சைட்லேர்ந்து லீக் ஆக வாய்ப்பு இருக்கு.

இப்படி அவன் நினைவுகள் ஓடிக்கொண்டிருக்கும் போதே அவர் இவனுடைய பட்டியலின் போட்டோ காப்பியை எடுத்துக் காண்பித்தார்.

சரிதான். போலீஸ் தான் என்று முடிவுக்கு வந்தான்.

சார் நீங்க நினைக்கிறது தப்பு. யாரோ உங்களை குழப்பியிருக்காங்க. நான் கொலையாளியா இருந்தா போலீஸ் என்னை சும்மாவிட்டிருக்குமா?

தம்பி அதைப்பற்றி எனக்குத் தெரியாது.

அறையில் மௌனம். ராதிகாவுக்கு போராக இருந்தது. அமைச்சரின் தமிழ் அவளுக்கு எரிச்சல் மூட்டியது. அறையை சுற்றிப் பார்த்தாள். தனி டாய்லெட். அமைச்சருக்காக மட்டும் இருக்கலாம். உள்ளே போனால் 10 நிமிஷம் ஓட்டலாம். விடுவாரா? கேட்டுப் பார்க்கலாம்.

�சார் உங்க டாய்லெட்டை யூஸ் பண்ணிக்கலாமா? நீங்க தப்பா நினைக்கலேன்னா?�

தாராளமாக. இதில தப்பா நினைக்க என்ன இருக்கு என்று கை காட்டினார். தாய்குலம் எது கேட்டாலும் செய்ய வேண்டும் என்பது மேலிடத்தின் உத்தரவு.

அவள் எக்ஸ்க்யூஸ் மீ என்று விட்டு நளினமாக நடந்து சென்றாள்.

தம்பி என் மேல ஏதாவது பகையின்னா நாம பேசி தீர்த்துப் போம் என்றார் பொறுமையாக.

கதவு திறக்கும் சத்தம் வந்தது. எல்லாப்பக்கமும் கொலையாளிகள் இருப்பதால் சற்று பயந்து பார்த்தார். அவருடைய ஐந்து வயது பேரன் தாத்தா என்று ஓடிவந்து அவர் மடியில் உட்கார்ந்துக் கொண்டான்.

என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது சார் என்று ஆறுதல் கூறினான்.

டாய்லெட்டிலிருந்து வெளியே வந்தாள் ராதிகா. முகம் சற்று மாறியிருந்ததை கவனித்தான் ராஜேஷ்.

போகலாமா என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் அவள் தன்னுடைய கைப்பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அமைச்சரை நோக்கி சுடத்தொடங்கினாள். குழந்தை இருக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் 2 கொலைகள். இல்லை 1.30 கொலைகள். இதுவரை மொத்தம் 3.30 கொலைகள். 3.30 எழுதியதின் அர்த்தம் அவனுக்கு புரிந்தது.

என்ன செய்யறே ராதிகா என்று கத்திக் கொண்டே அவளுருகில் வந்தான்.

கிட்ட வராதீங்க ராஜேஷ் உங்களையும் சுடவேண்டியது வரும் என்று எச்சரித்தப் படியே பின்னால் சென்றாள்.

எதற்கும் தயாராக இருந்த போலீஸ் தடதடவென்று உள்ளே நுழைந்தனர்.

அவர்களில் முதலாக நுழைந்தது துணிச்சலுக்கு பெயர் எடுத்த விக்ரமன்.

அவர் எல்லா காவலாளிகளிடமும் ராஜேஷ்அப்பாவி என்று கூறியிருந்தார். இப்போது அவர்களின் முயற்சி அவனைக் காப்பாற்றவே. ஏனென்றால் அந்த ஒன்றரை ஜீவன்கள் தரையில் உடல் பரப்பி ரத்த வெள்ளத்தில் எப்போதோ மிதந்துக் கொண்டிருந்தன.

ராதிகா சரணடைஞ்சிருங்க. இங்கேர்ந்து நீங்க உயிரோட தப்பிக்க வழியில்லை என்றார் விக்ரமன்.

அது என்னாட கவலை இன்ஸ்பெக்டர். என்னோட வேலை முடிஞ்சிருச்சு அனாவசியமா தலையிட்டீங்கன்னா இன்னொரு உயிர் போகவேண்டியதிருக்கும்.

துப்பாக்கியால் அவன் கழுத்தின் பின் பக்கத்தை நெம்பிய படியே படிக்கட்டில் கீழே இறங்கினாள்.

கேட்டைத்தாண்டி வெளியே வந்தாள். கண் இமைக்கும் பொழுதில் ஒரு வேன் வந்து இருவரையும் உள் இழுத்துக் கொண்டு விரைந்தது. உள்ளே வந்ததும் பாட்டில் ஒன்று அவன் தலையை பதம் பார்த்தது. மயங்கி விழுந்தான்.

 தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top