மகாபாரதமும் நிஜமே!

மகாபாரதமும் நிஜமே!

மகாபாரதமும் நிஜமே! ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அந்தபுத்தகத்தின் பெயர் The ... Read More »

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்?

ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்? புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன. ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது,போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது. ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 7

மரணம் நிகழும்பொழுது உடலில் வேதனை எதுவுமே தெரிவதில்லை. ஆழ்ந்த துயில் மெதுமெதுவாக நம்மை அரவணைப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டவர்கள் கூட இறக்கும்பொழுது வேதனையற்ற நிலையிலேயே உயிர் விடுகிறார்கள். இதை இறந்தவுடன் சடலத்தின் முகத்தில் ஏற்படும் அமைதியான, சுகமான பாவத்தை நாம் அவதானிப்பதன் மூலம் உணரலாம். பிராணன் உடலைவிட்டு வெளியேறியவுடன் ஸ்தூல சரீரத்துக்கும் ஆவி வடிவத்துக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடுகிறது. இரண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காந்தக் கயிறு (Magnetic Cord) அறுந்து, ... Read More »

வருகிறார்கள் வேற்றுக்ககிரக வாசிகள்..!

வருகிறார்கள் வேற்றுக்ககிரக வாசிகள்..! மனிதர்களை விஞ்சிய சக்திகள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறதா என்ற ஆய்வுப் பணிகள், தொடர்ந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த ஆய்வுக்கு எப்போதுமே ஒரு முடிவு கிடையாது. நாடுகளும் கண்டங்களும்தான் மாறுபடுமே தவிர தேடுதல்களும், ஆய்வுகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். 1938ஆம் ஆண்டு. சீனாவையும் திபெத்தையும் பிரிக்கும் எல்லைப் பகுதி அது. இமயமலையில் ஒரு சிறிய பகுதியான பேயான் காரா உலா என்ற மலைச் சிகரம். சீ பு டீ என்ற ... Read More »

இராட்சத கடல் உயிரினத்தின் மர்மம் ??!!

இராட்சத கடல் உயிரினத்தின் மர்மம் ??!!

நியூசிலாந்தில் கரை ஒதுங்கிய இராட்சத கடல் உயிரினத்தின் மர்மம் தொடர்கிறது..! 3நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதன் உடலின் பெரும் பகுதி அழுகிய நிலையில் காணப்படுகின்றது. இம் மர்ம உயிரினம் தொடர்பில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்கியுள்ளனர். திமிங்கிலம் அல்லது உவர் நீர் முதலை என பல விலங்குகளுடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர் விஞ்ஞானிகள். சிலர் இது ஆழ் கடல் உயிரினமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். முதலில் ... Read More »

மனிதனை பற்றிய சில உண்மைகள்! ! ! !

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர். * ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்துஉரு வாகின்றன. * கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன. * ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன. * கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் ... Read More »

ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்..!

ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்..!

ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்..! (Baobab) வடக்கு ட்ரான்ஸ்வால் பிரதேசத்தில் மெஸ்ஸினா நகருக்குப் போனால், அங்கு பூதம் போல ஊதிய ஒரு மரத்தைப் பார்க்கலாம். இந்தப்பக்கம் வந்த டேவிட் லிவிங்ஸ்டன் இதனை ‘தலைகீழாக நடப்பட்ட கேரட் ‘ என்று சொன்னார். இது ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம் – பாவோபாப் என்று அழைக்கப்படும் அடன்ஸோனியா டிஜிடாடா (ADANSONIA DIGITATA) இதனை பலர் தாவர உலகின் பிசாசு என்று கூறி வந்திருக்கிறார்கள். பாவோபாப் மரங்கள் மிக உறுதியானவை, சட்டென்று ... Read More »

அருங்காட்சியகத்தில் கலிலியோவின் விரல்.!

இன்றைய அறிவியல் புரட்சிக்கு 15ம் நூற்றாண்டிலேயே வித்திட்ட மேதை கலிலியோ கலிலி. இவர் நவீன வானியலின் தந்தை எனக் குறிப்பிடப்படுகின்றார். இத்தாலியில் பிறந்து, சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளை உலகுக்கு உணர்த்தியவர். கலிலியோ பற்றிய சுவாரசியமான தகவல்கள் பல உள்ளன. பெண்டுலம் கடிகாரத்தை உருவாக்க பெரும்பாடுபட்டார் கலிலியோ. ஆனால் அந்த ஆராய்ச்சியில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. ஆயினும் அவரது ஆய்வுக் குறிப்புகள் தான் பின்னாளில் வந்த இயற்பியல் விஞ்ஞானிகளுக்கு வேத பாடமாகியது. இத்தாலியிலுள்ள பைசா நகர ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 6

மனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள். மரணம் சம்பவிப்பதற்கு இவை மட்டம் தான் காரணங்கள் அல்ல. இதயம் ... Read More »

Scroll To Top