ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு, “உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது. மூவருக்கும் ஆச்சரியம்! உடனே கேஷியர் முந்திக்கொண்டு, “நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார். பூதமும் “அவ்வாறே ... Read More »
Category Archives: சிறுகதைகள்
விதியின்படிதான் நடக்கும்!!!
August 1, 2016
ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் : “மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ” மனிதன் :!!!!ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !! எமதர்மன் சொன்னான் : ” நல்லது,இன்று உன்னுடைய பெயர்தான் பட்டியலின் முதலில் உள்ளது …..” மனிதன்: ” சரி,நீங்கள் இருக்கையில் உட்காருங்கள் ,நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம் ” எமதர்மன் : சரி,அப்படியே செய்யலாம் ! அந்த ... Read More »
அக்பர் சக்கரவர்த்தி போட்ட புதிர்!!!
July 30, 2016
ஒரு நாள் அக்பர் சக்கரவர்த்தி பீர்பலிடம் ஒரு புதிர் போட்டார். “மேலே மூடி கிழே மூடி நடுவே மெழுகுத் திரி எரிந்து அணைகிறது இது என்ன?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டார். பீர்பலுக்கு இந்தப் புதிருக்கான விடை தெரியவில்லை. “அரசே, எனக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். யோசித்து வந்து சொல்கிறேன்” என்றார் பீர்பல். மறுநாள் பீர்பல் ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்று கொண்டிருந்தார். அவருக்குத் தாகம் எடுத்தது. தம் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளத் தண்ணீர் கேட்பதற்காக, ... Read More »
குதிரையை விற்றுப் பணம்!!!
July 29, 2016
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் “பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் ... Read More »
தர்மத்தின் கொள்கைகள்!!!
July 28, 2016
ரதத்தின் சக்கரம் பூமிக்குள் புதைந்தது சக்கரத்தை வெளியில் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்த கர்ணனைக் கொல்லும்படி கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கட்டளையிட்டார். அர்ஜுனா, என்னைத் தாக்க வேண்டாம் ரதத்தில் இல்லாத என்னைத் தாக்குவது தர்மம் அல்ல . சில நிமிடங்கள் பொறுத்துக்கொள், போரைத் தொடங்கலாம். போரின் விதிமுறைகளையும் தர்மத்தையும் நினைத்துப் பார்,” என்று அர்ஜுனனை நோக்கி கர்ணன் குரல் எழுப்பினான். அப்போது கர்ணனிடம் ஸ்ரீ கிருஷ்ணர் கர்ணா, உனக்குக்கூட தர்மத்தின் கொள்கைகள் நினைவிற்கு வருகின்றதோ! துன்பத்தில் இருப்பவன் எப்போதும் ... Read More »
நேர்முக தேர்வுக்கு போகிறவர்கள்!!!
July 27, 2016
வேலைக்கு ஆள் எடுக்கும் தேர்வு.சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் நிர்வாக அதிகாரி மூன்று இளைஞர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்துத் தேர்வாகினர்.தகுதிகளும் சரிசமம்! மூவரில் ஒருவரை எப்படித் தேர்ந்தெடுப்பது என விழிபிதுங்கினார். இறுதியாக மூன்று பேருக்கும் ஐந்து கூடைகள் நிறைய ரோஜாவை எண்ணும் பணி கொடுக்கப்பட்டது. ஏன் இந்தப் பணி எனத் தெரியாமலேயே மூவரும் செவ்வனே எண்ணி முடித்தனர்.அவரவர் நண்பர்களை அவர்களிடம் பேசவிட்டு உன்னிப்பாய் ம்றைந்து கவனிக்கலானார் நிர்வாக அதிகாரி . “டேய்,இந்த வேலைக்கு இந்தப்பூவையெல்லாம் எண்ணித் தொலைக்கணும்னு என்தலையெழுத்தைப் பாருடா”-இது முதலாமவன். “வேற வேலை கிடைக்கற வரைக்கும்இந்தக் கோமாளித்தனத்தை செஞ்சுதானே ஆகணும் வயித்துப்பாட்டுக்கு”-இது இரண்டாமவன். ... Read More »
நிஜத்தில் ஜெயித்தது!!!
July 27, 2016
ஒரு நாட்டில் பொருளாதார நிபுணர் ஒருவர் இருந்தார். அந்த நாட்டு மன்னர் எந்த பெரிய காரியமாக இருந்தாலும் அந்த நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்ட பிறகே எதையும் செய்வார். அந்த நாட்டு மன்னர் மட்டுமல்லாமல் அண்டை நாட்டு மக்களுக்கும் பொருளாதார நிபுணரின் தனித் திறன் பற்றிய செய்தி பரவியது. அந்த நாட்டு மன்னர்களும் பொருளாதார நிபுணரை அழைத்து ஆலோசனைக் கேட்க ஆரம்பித்தனர். ஒரு நாள் பொருளாதார நிபுணரை அவர் வசிக்கும் ஊரின் தலைவர் அழைத்துப் பேசினார். அவருடன் ... Read More »
பழி வாங்கும் போது நமக்கு துன்பம் வரும்!!!
July 26, 2016
ஒரு மிகப் பெரிய செல்வந்தன் இருந்தான் ஏராளமான தொழில் செய்பவன்..! ஊருக்கு வெளியே ஒரு ஜவுளித் துணி குடோனும் அதனருகில் ஒரு கோழிப்பண்ணையும் வைத்திருந்தான்..அருகில் உள்ள காட்டில் ஒரு ஓநாய் இருந்தது..! அது தினமும் அந்த பண்ணைக்கு வந்து 4 கோழிகளை பிடித்து சாப்பிட்டு ஓடிவிடும்..அதனால் செல்வந்தனுக்கு மிகப்பெரிய நஷ்டம்..ஓநாயின் இந்த அட்டகாசத்தை ஒழிக்க ஆட்களை ஏற்பாடு செய்து அதை பிடிக்க முடிவு செய்தான்.. அதன் படி ஆட்களையும் நியமித்தான்..! அந்த பொல்லாத ஓநாய் பிடிக்க வந்தவர்களை ... Read More »
ஆடி அமாவாசை!!!
July 26, 2016
அமாவாசை அன்று காலையில் எழுந்து, அருகில் இருக் கும் ஆற்றிலோ, குளத்திலோ ஸ்நானம் செய்து விட்டு, இறந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். முறைப்படி தர்ப்பணம் செய்து வைக்கும் அந்தணர்கள், ஆற்றின் கரையோரங்களில், குளக்கரைகளில், கடற்கரையோரங்களில் இருப்பார்கள். அவர்கள் மூலம் தர்ப்பணம் செய்யலாம். அதன்பின்னர், முதியவர்களுக்கு பெரிய அளவில் இல்லாவிட்டாலும், சிலருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். அமாவாசை அன்று வீட்டில் பெண்கள் குளித்து காலை உணவு உண்ணாமல் இறந்த முன்னோர்களுக்குப் பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்வார்கள். அன்றைய ... Read More »
நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது!!!
July 23, 2016
நான் பயந்ததாக யாரும் நினைக்கக் கூடாது – மாவீரன் நெப்போலியன் ! தன் அசாத்திய துணிச்சலால் ஐரோப்பிய கண்டத்தில் தன் பேரரசை நிறுவிய மாவீரன் நெப்போலியன் பயம் என்றால் என்னவென்றே தெரியாதவர். அதற்கு அவருடைய சிறு வயதில் நடந்த ஒரு சம்பத்தையே உதாரணமாகக் கூறலாம். நெப்போலியன் பிரான்சில் உள்ள ராணுவப் பள்ளியில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது விடுதியில் தங்கியிருந்த சக மாணவனின் அழகிய பை ஒன்று காணாமல் போய்விட்டது. உயர் அதிகாரியிடம் அந்த மாணவன் புகார் தெரிவித்தான். ... Read More »