Home » உடல் நலக் குறிப்புகள் (page 51)

Category Archives: உடல் நலக் குறிப்புகள்

பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-

பேரீச்சையின் மருத்துவ பயன்பாடு :-

உலகின் பழமையான நாகரீகமான மெசபடோமியாவில் தான் பேரீச்சம்பழம் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.எகிப்திய பிரமிடுகளிலும்,கிரேக்க, ரோமானிய, பாலஸ்தீனிய வரலாற்றுக் குறிப்புகளிலும்இடம்பெற்றுள்ள பேரீச்சம் பழம், கடந்த 300 ஆண்டுகளாக உலகெங்கிலும் சத்துப்பழமாக உலக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. பேரீச்சம்பழத்தின் மருத்துவக் குண பெருமைகள்… * ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாகச் ... Read More »

தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்

* வெயிட் போடலியா? வெயிட் போடலேன்னு, கேக், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களை இளம் வயதினர் சாப்பிடுவதுண்டு. இது பின்னாளில் கெடுதலாக அமையும். வயதுக்கு ஏற்ற எடை இல்லாவிட்டால், தானாக காட்டிக்கொடுத்துவிடும். அப்போது பசியெடுக்காது; சோர்வு வரும். அப்போது டாக்டரிடம் போய் “செக் அப்’ செய்வது தான் நல்லது. மற்றபடி, பாலாடைக்கட்டி, இனிப்பு தயிர், பருப்பு வகைகள், கடலைகள், பேரீச்சை வாழை, ஆப்பிள் போன்றவை சாப்பிட்டு வரலாம். அதுவே போதுமானது. * பசியெடுக்கலியே… சிலர் நன்றாக ... Read More »

மனஅழுத்தம்!!!

மனஅழுத்தம்!!!

மனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்… வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு ... Read More »

மணத்தக்காளி

மணத்தக்காளி

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை. இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும். மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. Read More »

வாழைப் பூ

வாழைப் பூ

வாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால், சுவையிருக்காது என்று நினைத்து அதனுடைய சத்தையெல்லாம் சாக்கடைக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதை அறிய வேண்டும். ‘ வாழைப் பூவின் சத்தை வீணடிக்காமல் சாப்பிட்டால் லநோயில் உதிரம் ... Read More »

வாழைத் தண்டு

வாழைத் தண்டு

வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது ன்று அவின்சு வீதம் தினம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால், வாய் ஓயாமல் இருமும் இருமல் நீங்கும். கோழைக் கட்டையும் ... Read More »

உடல் நலக் குறிப்புகள்

இவை எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். ஆனாலும் ஒரு முறை ஞாபகப்படுத்துகிறோம். தினமும் குடிக்கும் டீயின் அளவை கட்டுப்பாட்டில் வையுங்கள். காலையில் அதிகமான நீரை பருகுங்கள். இரவில் குறைவாக அருந்துங்கள். தினமும் இரண்டு வேலை காபி குடிப்பதை தவிருங்கள். இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்குள் எழுவதே சிறந்தது. மாலை 5 மணிக்குப் பிறகு அளவுக்கு அதிகமான உணவை உண்ணாதீர்கள். மாத்திரைகளை குளிர்ந்த நீருடன் பருக வேண்டாம். மாத்திரை சாப்பிட்டதும் உடனடியாக படுக்கச் செல்ல ... Read More »

Scroll To Top