சொல்லுங்க எதுக்காக பிரேக்-இன் பண்ணீங்க.
அவரு எங்கள் நாட்டிலேர்ந்து பழங்காலத்து சிலைகளை கடத்தறாரு.
அப்படியா. அதுக்கு ஆதாரம் இருக்கா உங்க கிட்டே.
இருக்கு.
உங்க ஊரில் இருப்பவர்களை விட்டு இவரோட அலுவலகத்தில் அத்துமீறி நுழையறது சரியா.
நான் இந்தியாவின் மத்திய உளவுத்துறை அதிகாரி.
இருக்கட்டும். முறையாக சர்வதேச காவலின் மூலம் அனுமதி பெற்றீர்களா.
இல்லை.
நீங்கள் செய்தது எங்கள் நாட்டு சட்டப்படி குற்றம் தெரியுமா.
ஆம்.
உங்கள் மேல் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சரியா.
சரி.
என்ன சரியா.
ஆமாம். வேறென்ன எதிர்பார்க்கிறீர்கள்.
இல்லை உங்களுடயை விளக்கம் இவ்வளவு தானா.
ஆமாம். உங்களிடம் நான் அத்துமீறி நுழைந்ததற்காக புகைப்படங்கள் இருக்கு. ஜான் ஸ்டுவர்ட் புகார் கொடுத்திருக்காரு. என்னை கையும் களவுமா பிடிச்சிருங்கீங்க. நான் சொல்றதையா கேட்கப்போறீங்க.
அவர் முதன் முதலாக சிரி்த்தார்.
ரமேஷ், உங்கள் நாடு மிகப்பெரியது. உங்கள் ஜனத்தொகை அதிகம். அதில் மிகத் தேர்ச்சியாக சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது மிகவும் கடினம் தான். உள்நாட்டு விவகாரம், வெளி நாட்டு சதி, தீவிரவாதம் என்று பல விஷயங்களை சமாளிக்கிறது இந்திய காவல் துறையும் உளவுத்துறையும். நாங்கள் வியப்படைவதுண்டு. ஆனால், நீங்கள் இதுபோல ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று எங்களிடம் சொன்னால் இந்த பிரச்சனையை தவிர்த்திருக்கலாம். சர்வதேச விதிகளை மதித்தே எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும்.
நீங்கள் யாரையும் காயப்படுத்தவில்லை. ஆனால் நீங்கள் செய்தது சட்ட விரோதமான செயல். என்ன செய்யலாம்.
நீங்கள் சொல்வது சரிதான் என்றான் ரமேஷ். பிறகு மெதுவாக, கொஞ்சம் காபி வரவழையுங்கள் என்று சொல்லிவிட்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஹாயாக உட்கார்ந்தான்.
அவனை வியப்புடன் பார்த்த அதிகாரி ஒரு காபி வரவழைக்க சொன்னார்.
காபி குடித்து விட்டு, மிஸ்டர் நான் இன்னும் 15 எண்ணுவதற்குள் இங்கிருந்த போய்விடுவேன். பார்க்கிறீர்களா என்றான்.
அப்படியா, பார்க்கலாமே என்றார் அந்த ஆங்கிலேய அதிகாரி, ஆச்சர்யத்துடன்.
1, 2, 3, தொலபேசிகள் ஒலித்தன. 4, 5, 6, அவனுடன் பேசின அதிகாரி வெளியே சென்றார், 7, 8, 9, 10, 11, 12, வாங்க ரமேஷ், நீங்க போகலாம் 13, 14, நன்றி 15.
ஓட்டலை அடைந்த கதவை திறந்தவுடன் கட்டி அணைத்துக் கொண்டாள் ஜெயா. ஊருக்கு போக தயாரானார்கள் இருவரும்.
தொடரும்…