அந்த தனி பங்களாவில் ஒரு பெரிய பென்ஸ் கார் வந்து நின்றது. தமிழ் நாட்டில சில பேரிடம் மட்டும் தான் அந்த மாதிரி வண்டி இருக்கும் போல. அந்த பங்களாவின் பெரிய கதவுகள் திறந்து வழி விட்டது.
நேராக உள்ளே சென்ற சந்திரசேகரை அவர் மனைவி வரவேற்றார். என்னங்க இத்தனை நாளா காணோம்.
அதான் இப்ப வந்திட்டேன்ல அப்புறம் என்ன.
பேசாம நாங்களும் சென்னைக்கே வந்திடறோம்.
ஆமா, சென்னைக்கு வந்த அந்த குடிசையில தங்கு என்னோட. உனக்கும் பிள்ளைகளுக்கும் தான் இத்தனை கஷ்டப்படறேன். படகு மாதிரி காரு, பங்களா, நீச்சல் குளம், நகை நட்டு அப்படின்னு.
அது சரிங்க. உங்களை தனியா விட்டுட்டு நாங்க மட்டும் இதையெல்லாம் அனுபவிச்ச எப்படிங்க.
அதான் நான் அடிக்கடி வந்துட்டுப் போறேன்ல என்றார் காட்டமாக.
நேராக பின்புறம் சென்று நீச்சல் குளத்தின் அருகே இருந்த பெரிய சாய்வு நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார். அவருடைய மனைவி அந்த உயர்ந்த ரக மதுபானத்தையும் அதனுடயை இதர பொருட்களையும் தாங்கி வந்தார்.
அந்த சிறிய கண்ணாடி குடுவையில் அந்த மென் நிற திரவத்தை நிரப்பி பனிக்கட்டி துண்டுகளை போட்டு கையில் எடுத்துக் கொண்டார்.
கரிகாலன் கிட்டேயிருந்து போன் வந்துதா.
இல்லையே. அவர் இங்க போனே பண்றதில்லை.
எங்க போய் தொலைஞ்சான்னு தெரியலை. அவன் மொபைல்ல போன் போட்டா பதிலும் இல்லை. லைப்ரரிகாரனும் லைப்பரரிக்கு அவன் வரலைன்னு சொல்றாங்க. எதாவது பிரச்சனையில மாட்டிக்கிட்டான்னு தெரியலை.
ஐயோ என்னங்க சொல்றீங்க. உங்களுக்கு போலீஸால ஏதாவது பிரச்சனை வருமா.
ஏய் என்ன உள்ர்ற. நான் என்ன கொலை பண்றேனா. எல்லாம் சட்டப்படி தான் பண்ணிக்கிட்டு வரேன். நமக்கு வர்ற பணம் எல்லாம் ஆராய்ச்சிக்காக முறைப்படி வர்ற வெள்ளைப்பணம். இந்த நிலம் உங்க அப்பாவோடது.
அது சரிங்க. ஆனா அரசாங்க சம்பளத்தில் இந்த சொத்தெல்லாம் எப்படி வந்ததுன்னு கேட்டா.
அந்த கவலை உனக்கு எதுக்கு. அவன் அவன் கோடிகோடியா சம்பாதிச்சிகிட்டு உலாத்திக்கினு இருக்கான். நீ சும்மா பெனாத்திக்கினு இருக்கே. உள்ள போ.
அவள் உள்ளே சென்றதும், மது கோப்பையை எடுத்து மதுவருந்த தொடங்கினார். அவருடைய செல் பேசி ஒலித்தது.
ஆங்கிலத்தில் பேசி வேண்டிய போன் கால். சிறிது நேரம் பேசிவிட்டு வைத்தார். முகம் வெளிறியிருந்தது.
மடக் கென்று குடித்துவிட்டு மூன்று ஐந்தில் ஒன்றை எடுத்து பற்றவைத்தார்.
தொடரும்…