Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கடைசி பேட்டி – 16 ( மர்மத் தொடர் )

கடைசி பேட்டி – 16 ( மர்மத் தொடர் )

பக்கத்து அறையில் அவனிடம் கேட்ட கேள்விகளுக்கும் அவனுடைய பதில்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பொய் கண்டுபிடிக்கும் கருவியின் கருத்தையும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்.

உங்கள் பெயர்?

ராஜேஷ் – உண்மை

உங்கள் அப்பா அம்மா எங்க இருக்காங்க?

அமெரிக்காவில். – உண்மை

நீங்க எத்தனை வருஷமா சூப்பர் டிவியில் வேலை செஞ்சிகிட்டுஇருக்கீங்க?

6 வருஷமா – உண்மை

நீங்க இதுவரைக்கும் யாரையாவது கொலை பண்ணியிருக்கீங்களா?

இல்லை. – உண்மை

அமைச்சர் நீலவாணனை நீங்க கொலை பண்ணிங்களா?

இல்லை – உண்மை

அமைச்சர் கரிகாலவளவனை கொலை பண்ணிங்களா?

இல்லை. – உண்மை.

நீலவாணன் கொலை நடந்த அன்னிக்கு காலையில எங்கிருந்தீங்க?

மகாபலிபுரம் ரோட்டில் – உண்மை

ஏதுக்காக மினிஸ்டர் லிஸ்ட் தயார் பண்ணிங்க?

பேட்டி எடுக்க. – பொய்

இந்த நாலு பேரை ஏன் தேர்ந்தெடுத்தீங்க?

எப்படின்னு சொல்லத்தெரியவில்லை.

இந்த பதிலுக்கு இயந்திரம் தடுமாறியிருந்தது. உண்மை பொய் என்று ஏதுவுமே சொல்லவில்லை.

நேற்று இரவு நீங்க அமைச்சர் வீடுகிட்ட ஒரு பெண்ணோடு பேசிகிட்டு இருந்தீங்களா? அந்த பெண்ணை உங்களுக்கு தெரியுமா?

தெரியாது. – பொய்.

யார் உங்களை அங்க வரச்சொன்னது?

நானாக வந்தேன். – பொய்

ஏதுக்காக வந்திங்க?

நோட்டம் பார்க்க. – பொய்

கொலை செய்ய வந்திங்களா?

இல்லை. – உண்மை.

கொலையாளிக்கு உதவி செய்ய வந்திங்களா?

இல்லை. – உண்மை

உங்களோட ரகசிய ப்ராஜெக்ட் பத்தி சொல்ல முடியுமா?

சொல்ல முடியாது.

இயந்திரம் திணறியிருந்தது.

அதனால யாருக்காவது நஷ்டம் ஏற்படுமா?

மக்களுக்கு நல்லது ஏற்படும்.

யாருடைய உயிர் சேதம் ஏற்படுமா?

இதுக்கு பதில் சொல்லத்தெரியலை.

இந்த பதில்களில் இருந்த ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. எந்திரங்கள எல்லாம் செய்துவிட்டால் மண்ணில் மனிதனுக்கு இடம் ஏது?

தட்ஸ் ஆல்.

விக்ரமன் அனைவரையும் பார்த்துவிட்டு இந்த எக்ஸாமினேஷன் எங்கேயும் நம்பள கொண்டு போகவில்லை. நாம வேற ஆங்கிள்ல முயற்சி பண்ணனும் என்று முடித்தார்.

விக்ரமன் ராஜேஷை வந்து பார்த்தார்.

ஸாரி ராஜேஷ் உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். இது எங்களோட தொழில். உங்க ஒத்துழைப்பு வேண்டும் எங்களுக்கு.

சார் நான் சம்பந்தபட்டதனால மட்டும் சொல்லல எப்பவுமே காவல் துறைக்கு சூப்பர் டிவியின் ஒத்துழைப்பு இருக்கும் என்றான்.

நீங்க போறதுக்கு முன்னாடி சில சந்தேகங்களை தீர்த்து வைக்க முடியுமா?

பெரிதாக சிரித்துவிட்டு இப்ப என் வேலைக்காரனுடன் பேசியதும் என் கொலீக்குடன் பேசியதும் வீடியோ பிடிச்சிட்டீங்களா? என்றான்.

ஆமா. ப்ளீஸ்.

சரி. விக்ரமன் உங்களை பத்தி நல்லா தெரிஞ்சதால சொல்றேன். அது மட்டும் இல்லாம இந்த கொலைகளையும் தடுக்கனும்னு நல்ல எண்ண்த்தில சொல்றேன். நான் இப்போ ரொம்ப டயர்டா இருக்கேன். வீட்டுக்கு போயிட்டு குளிச்சிட்டு ரெடியா இருக்கேன். லஞ்சில நல்ல ஹோட்டல்ல மீட் பண்ணலாம். சாதாரண உடையில் வாங்க என்று விட்ட வெளியே நடந்தான்.

அவனுடைய தன்நம்பிக்கையும் தைரியமும் இரண்டு கொலையில் மாட்டியிருந்தாலும் குறையாத அந்த முகத்தின் களையும் அவரை வெகுவாக ஈர்த்தது. எனக்கொரு தங்கச்சி இருந்தா இவனையே மாப்பிள்ளை ஆக்கிடுவேன். இது விக்ரமன் எனும் மனிதர்.ஆனா இவன் கொலை செய்யலேன்றது உறுதியாகனும். இது விக்ரமன் எனும் போலீஸ்.

போகறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி?

நீங்க நந்தினியை காதலிக்கிறீங்களா?

அழகாக சிரித்துவிட்டு கண்ணடித்துக் கொண்டே அவள் என்னை காதலிக்கிறாள் என்று சொல்லிவிட்ட வெளியே வந்தான்.

கான்ஸ்டபிள் ஸ்ரீரங்கம் அவனுடைய பைக்கை தயாராக எடுத்து வந்தார். ஹெல்மெட்டும் தான்.

நன்றி என்று கூறிவிட்டு பீச்சுக்காற்றை சுவாசித்துக் கொண்டு பறந்தான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top