Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » கடைசி பேட்டி – 15 ( மர்மத் தொடர் )

கடைசி பேட்டி – 15 ( மர்மத் தொடர் )

ராஜேஷ் மேலிருந்த வொயர்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அவன் அறையில் யாரும் இல்லை. அவன் யோசிக்கத் தொடங்கினான். இந்த வேலை எடுத்துக் கொண்ட நாள் முதல் ராஜகோபாலை பார்த்தது நந்தினி வீட்டுக்கு வந்தது அமைச்சர்கள் கொலையானது ராதிகா வந்தது போலீஸ் அவனை விசாரனை செய்தது அவன் அடிப்பட்டது என்று கோர்வையில்லாமல் அவன் மனதில் அனைத்தும் வந்து போயின. டக்கென்று ஒரு விளக்கு அடித்தது.

ஒரு அதிகாரி வந்து உங்களை பார்க்க உங்க கொலீக் நந்தினியும் உங்க வேலைக்காரன் ரங்கனும் வந்திருக்காங்க. ஆனா ஒவ்வொருத்தரா பார்க்க மட்டும் உங்களுக்கு அனுமதி இருக்க யாரை முதலில் அனுப்பட்டும்? என்று கேட்டார்.

ரங்கனை அனுப்புங்க என்றான்.

உள்ளே வந்ததும் தம்பி என்ன இப்படி ஆயிடுச்சு என்று அழுதான்.
பரவாயில்லை ரங்கா பத்திரிகை தொழில்ல இதெல்லாம் சகஜம். பயப்படாதீங்க என்று ஆசுவாசப்படுத்தினான்.

என் கையை கட்டியிருக்காங்க. அம்மாவுக்கு ஒரு லெட்டர் எழுதனும் தயவு செய்து அந்த பேப்பர் பேனா எடுத்து நான் சொல்றதை எழுதுங்க என்றான்.

அன்புள்ள அம்மாவுக்கு

நலம். நான்கு நாட்களாக உடம்பு சரியில்லை. நானும் உங்களுக்கு எப்போதுமே போன் செய்ய நினைக்கிறேன். எங்க நேரம் எனக்கு நீங்களே சொல்லுங்கள். அமைச்சர் இரண்டு பேரை கொலை செய்ததால் தமிழகம் அரண்டுவிட்டது. நான் ஒருவன் தான் அதை டிவியில் கவர் செய்கிறேன். கரி. நீலவாணன் கரிகாலவளவன் இரண்டு பேர். நீங்கள் எனக்கு பெண் பார்த்தால நான் சந்திக்கத்தயார்.

அன்புடன்

ராஜேஷ்

ரங்கா அந்த லெட்டரை என் பாக்கெட்டில் வை. நான் கொஞ்ச
நேரத்தில ஆபீஸ் போயிடுவேன் அங்கேர்ந்து கொரியர் செய்திடுவேன் என்றான்.

அதுக்குள்ள உங்களை விட்டுடுவாங்களா தம்பி என்று வாஞ்சையுடன் கேட்டான்.

ரங்கா என்னை உள்ளப்போட ஒரு ஜெயிலும் இல்லை. நான் யாரையும் கொலைப் பண்ணலை. அதனால எனக்குப் பயம் இல்லை.

நீ போயி நந்தினியை அனுப்பு. ஒரு 5 நிமிஷம் கழிச்சு என்றான்.

அவன் வெளியே போனதும் கை கட்டியிருந்தது போல பாவனை செய்துக் கொண்டிருந்தவன் சட்டென்று கைகளை விடுவித்து தன் பர்ஸுக்குள் இருந்த அமைச்சர் எழுதிய சிலிப்பின் போட்டோ காப்பியை எடுத்த ரங்கன் எழுதிய கடித்தின் வார்த்தைகளில் வட்டம் இட துவங்கினான்.

அந்த நான்கு அமைச்சரில் நானும் ஒருவன். சந்திக்கத்தயார். எப்போது எங்கே என்று சொல் – அமைச்சர் கரி. நீலவாணன்.

அன்புள்ள அம்மாவுக்கு

நலம். நான்கு நாட்களாக உடம்பு சரியில்லை. நானும் உங்களுக்கு எப்போதுமே போன் செய்ய நினைக்கிறேன். எங்கே நேரம் எனக்கு நீங்களே சொல்லுங்கள். அமைச்சர் இரண்டு பேரை கொலை செய்ததால் தமிழகம் அரண்டுவிட்டது. நான் ஒருவன் தான் அதை டிவியில் கவர் செய்கிறேன். கரி. நீலவாணன் கரிகாலவளவன் இரண்டு பேர். நீங்கள் எனக்கு பெண் பார்த்தால நான் சந்திக்கத்தயார்.

அன்புடன்

ராஜேஷ்

புன்னகைத்தான். தன் புத்திசாலித்தனத்தை தானே மெச்சிக்கொண்டான்.

நந்தினி உள்ளே வரும் சத்தம் கேட்டு சட்டென்று காகிதங்களை உள்ளே வைத்துக்கொண்டான்.

மெதுவாக புன்னகைத்தான்.

அவன் தலை கலைந்திருந்தது. வேர்த்து ஒழுகி இருந்தது. உடம்பில பல வொயர்கள் இன்னும் இருந்தன. முகம் வாடியிருந்தது. கண்கள் சிவந்திருந்தது. மொத்தத்தில் இந்த கோர உருவத்தில் அவன் வாழ்க்கையில் என்றுமே இருந்தததில்லை. இருந்திருந்தாலும் நந்தினி அதை பார்த்ததில்லை. துடிதுடித்துப்போனாள். அவனை அடியுடன் பார்க்ச்சென்றதை விட பலமடங்கு. கண்கள் தேங்கி நின்று கண்ணீர் எப்போது வேண்டுமானாலும் கரைகடந்து ஓட தயாராக இருந்தது. ஆனால் அவள் இங்கு அழுது அவள் காதலை சொல்ல வரவில்லை. உனக்கு நான் இருக்கிறேன் பலமாக என்று ஆறுதல் கூற வந்திருக்கிறாள். அவனக்கு பக்கத்துணையாக ஒரு பலமாக இருக்க வந்திருக்கிறாள்.

15 நிமிடம் என்று நேரம் குறித்திருந்தார்கள் காவல் அதிகாரிகள்.
மெதுவாக அவன் மீதிருந்த வொயர்களை கழற்றினாள். அவன் தலையை சரி செய்தாள். தன் கைக்குட்டையால் அவன் முகத்தை துடைத்துவிட்டாள். பக்கத்து மேசையின் மேல் இருந்த தண்ணீர் டம்பளாரால் அவனுக்கு தண்ணீர் கொடுத்தாள். இயற்கையின் விந்தை. அவள் அவனுக்கு அவ்வளவு நெருக்கத்தில். அவளுடைய உடையின் மணம் அவனை கிறங்க வைத்தது. அவள் கை படும் போது அவன் உள் பல மாற்றங்கள் கிளர்ச்சிகள். அவள் தலையை கோதிவிட்ட போது அன்னையின் அற்புத அரவணைப்பை ஞாபகப்படுத்திக் கொண்டான். பல மணி நேர விசாரணை கொடுமைக்கு பிறகு இந்த குளிர்ச்சி தேவைப்பட்டது.

அவனருகில் அமர்ந்தாள். தன் கையை அவன் கைகளில் வைத்தாள். இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

என்ன நந்தினி எமோஷ்னல் ஆயிட்டீங்க? ஸாரி ஆயிட்டே. சிரித்தான்.

இந்த நேரத்திலும் இவனால் எப்படி சிரிக்க முடிகிறது. அந்த கள்ளமில்லா சிரிப்பில் லயித்துப்போனாள். இருவரையும் குற்றவாளி என்று சொல்லி ஒரே சிறையில் போட்டுவிட்டால் காலம் முழுவதும் இவனுடன் சிறையில் கழித்துவிடுவேன் என்று எண்ணிக்கொண்டாள்.
அவன் கைகளின் வெப்பம் அவளை ஆறுதல் படுத்தியது. நான் அவனுக்கு ஆறுதல் சொல்ல வந்தேனா இல்லை அவன் ஆறுதல் சொல்கிறானா என்று கேட்டுக் கொண்டாள் தன்னைத்தானே. முதன் முறையாக அவன் ஸ்பரிசம்.

நீ என்ன பண்ற இங்க நந்தினி? நந்தினி என்ற வார்ததை அவனிடத்திலிருந்து தடையில்லாமல் வரத் தொடங்கியிருந்தது. நல்ல அறிகுறிதான்.

பாஸ் நீங்க போன் எடுக்கலைன்னதும் வீட்டுக்குப் போய் பார்த்துட்டு வரச் சொன்னார்.

உன்னையா?

என்னையில்லை. அக்பரத்தான். ஆனா நான் தான் உங்களை பார்க்கனும்னு வந்தேன்.

எதுக்கு?

தெரியாதாடா முட்டாள். உன்மேல் நான் பைத்தியமாய் இருக்கிறேன் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.

ஆன். உங்களை தினமும் பார்கறதா பிரார்த்தனை என்றாள் கிண்டலாக.

பதிலுக்கு அதே உணர்ச்சிகளை தூண்டிவிடும் அந்த மாயகள்வனின் சிரிப்பு.

உங்க வீட்டுக்கு போனேன். ரங்கனைப் பார்த்தேன். அவன் தான் உங்களை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போயிட்டதா சொன்னான். வர வழியிலை என் கால்ல விழுந்து அழ ஆரம்பிச்சிட்டான். இவன் என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா? என்று கோபத்துடன் கூறினாள்.

கண்களால் காமிராவைக்காட்டி ஒன்னும் சொல்ல வேண்டாம் என்று சைகை செய்தான். எனக்கு எல்லாம் தெரியும் என்று கண்களால் காட்டினான்.

இப்பத்தான் அம்மாவுக்கு ரங்கனை விட்டு லெட்டர் எழுதச்
சொன்னேன் என்றான்.

அவள் புரிந்துக் கொண்டாள். என் மாயக்கள்வனின் மூளையைப்பற்றி எனக்குத் தெரியாதா? பூரித்துப் போனாள்.

வேறு ஏதுவும் பேசுவதற்கு இல்லை.

பாஸ்சுக்கு ஏன் சொல்லலை? என்று கேட்டாள். நேரம் கடத்தினால் தானே அவன் கூட இருக்க முடியும்.

வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்தில என்னை விட்டுடுவாங்க.
எப்படி அவ்வளவு நம்பிக்கையா சொல்றீங்க என்றாள்.

பதிலுக்கு சிரிப்பு. இனிமேல் சிரித்தால் உனக்கு அடிதான் என்று சொல்லத்தோன்றியது.

கைகளை எடுத்தாள். ஆனால் மீண்டும் அவன் கை மீது வைத்துக் கொண்டாள். முதல் முறையாக அவன் கைகளும் இவன் கையை வேண்டியதை உணர்ந்தாள்.

அடுத்த 10 நிமிடம் யாரும் ஏதுவும் பேசவும் இல்லை. செய்யவும் இல்லை. அமைதியான அந்த அறையில் சில நேரம் கண்கள் சந்தித்தன. பல நேரம் அவன் கண்கள் அவளை அங்குல அங்குலமாக பார்த்துக் கொண்டிருந்தன. இவள் எனக்கு பொருத்தமானவளா? ராதிகாவிடம் இருக்கும் ஏதோவென்று இவளிடம் இல்லை? எது? அந்த ஆணவ அலட்ச்சியமா? அந்த அசட்டுச்தைரியமா? இல்லை அந்த செக்ஸி லுக்கா?

அவனால் சொல்ல முடியவில்லை. ஆனால் நந்தினியின் கைகள் அவன் உடலில் பாதிப்பை ஏற்படுத்த துவங்கி விட்டிருந்தது. அதை சுகமா உணர்ந்தான். 1000 வருடங்கள் அப்படி இருந்ததாக அவளுக்கு நினைப்பு. ஒரு அதிகாரி வந்து கூப்பிடும் வரை. கைகளை விடுவித்துக் கொண்டாள்.

நான் உன்னை உயிரையும் மேலாக காதலிக்கிறேன் என்று சொல்ல நினைத்தாள். ஆனால் அது தேவையில்லை. அவன் என்னைக் காதலிக்கிறான். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது அவனே சொல்வான். என்னைவிட யாரும் அவனை காதலிக்க முடியாது என்ற சொல்லிக் கொண்டாள். காதலுக்கு கண்ணில்லை. கண்களால் விடை பெற்றுச் சென்றாள். அவனும் கண்களால் கவலை வேண்டாம் என்று சொன்னான். பல நேரங்களில் வார்த்தைகளை விட மௌனம் அதிகாமான விஷயங்களை கூறிவிடும். அதை விட கண்கள் ஆயிரம் விஷயங்களை அரை நோடியில் அறிவித்து விடும்.

இவர்கள் கண்களால் பேசிக் கொண்டார்கள். எந்த டேப்ரிக்கார்டரும் காமிராவும் இதை பதிவு செய்ய முடியாது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top