Home » 2014 » December (page 6)

Monthly Archives: December 2014

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 5

இறந்தவர்கள் சஞ்சரிக்கும் உலகத்தை சூட்சும உலகம் என்று கூறுவது மிகவும் பொருத்தமாயிருக்கும். சூட்சும உலகம் என்பது எமது சட உலகத்தின் செறிமானத்தை (Density) விட பலமடங்கு குறைந்த செறிமானத்தையுடைய நுண்பொருளால் (Astral Matter) உருப்பெற்ற தளம் எனக் கூறலாம். சட உலகத்தின் ஸ்தூல வடிவமாக இருக்கும் சகல பொருட்களையும் நமது கண்களால் பார்க்க முடிகிறது. திண்மமாக, திரவமாக, வாயு வடிவமாக இருப்பவைகளை நாம் காண்கிறோம் அல்லது உணர்கிறோம். சூட்சுமமாக இருக்கும் காற்றும், மின்சாரமும், காந்தப் புலமும் நமது ... Read More »

தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.

உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 1 . அருந்துதல் — மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது. 2 . உண்ணல் — பசி தீர சாப்பிடுவது. 3 . உறிஞ்சுதல் — நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல். 4 . குடித்தல் — நீரான உணவை பசி ... Read More »

மெட்ராஸ் ஐ

கண்நோய்க்கு மெட்ராஸ் ஐ என பெயர் வந்தது எப்படி? இந்த நோய் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சென்னையில்தான். 1918-ல் சென்னையில் ஒரு புதுவிதமான கண்நோய் வேகமாகப் பரவியது. அந்த நோய்க்கான காரணத்தை சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆராய்ந்து, அதற்கு மூல காரணமாக ‘அடிநோ’ வைரஸ் என்ற கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னையில் முதலில் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது. Read More »

கூன்முதுகு கொண்ட புதிய வகை டால்பின்

வடக்கு ஆஸ்திரேலியா கடலில் கூன்முதுகு கொண்ட புதிய வகை டால்பின் கண்டுபிடிப்பு வடக்கு ஆஸ்திரேலியா கடலில் புதிய வகையான கூன்முதுகு கொண்ட டால்பின் மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த டால்பின் மீன் இனத்துக்கு அதிகாரபூர்வமான பெயர் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை. பசிபிக் மற்றும் இந்திய சமுத்திரங்களில் வாழும் நூற்றுக்கணக்கான கூன்முதுகு மீன் இனங்களையும் மீன்களின் மண்டையோடுகள் மற்றும் திசுக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்துவருகின்றனர். இந்த ஆய்வுகளின் முடிவிலேயே இந்த டால்பின் மீன் இனத்துக்கு பெயர்வைக்க விஞ்ஞானிகள் எண்ணியுள்ளனர். ... Read More »

ஆவி உலக ஆராய்ச்சிகள்…

ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்: ”ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். ... Read More »

இறந்த பின் எங்கு செல்கிறோம்? – 4

இந்தியாவின் முன்னணி விடுதலைத் தலைவரும். முன்னாள் உணவு அமைச்சருமாகிய கே.எம்.முன்ஷி ஆவி உலகத் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். “பவான் ஜேர்னல்” என்ற சஞ்சிகையில் (13-7-69) அவர் எழுதிய கட்டுரையில், தான் 1903-ம் ஆண்டு இறந்த தனது தந்தையுடனும், 1821-ல் இறந்த நெப்போலியனுடனும், இன்னும் சேர் ஒலிவர் லொட்ஸ், மீராபாய், மோதிலால் நேரு ஆகியோருடனும் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார். 1930-ம் ஆண்டு தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு முன்னர், திரு.முன்ஷி காஷ்மீருக்குத் தனது குடும்பத்தினருடன் போய் வரத் திட்டமிட்டார். ... Read More »

டிராகன் குகை மர்மம் !

டிராகன் குகை மர்மம் !

அமெரிக்காவின் அர்கன்சாஸ் நகரத்தின் பூனே கவுன்டியில் உள்ள ஒரு குகையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகள் தங்களின் கயிறுகளை உள்ளே போட்ட உடன் மிகப்பெரிய உறுமல் சத்தம் கேட்டது எனவும் அது கேட்பதற்கு ஒரு ராட்சச மிருகத்தின் உறுமல் போல இருந்ததாகவும் கூறி இருந்தனர்! அது இது வரை முழுமையாக ஆராயப்படாத ஒரு குகை . எனவே அதனுள் இருந்த வந்த சத்தம் எந்த மிருகத்தினுடையது என்பது தெரிய வில்லை! இது நாள் வரை அந்த குகையை ... Read More »

தபால் துறை உருவான வரலாறு !!!

தபால் துறை உருவான வரலாறு !!! புராதன இந்தியாவில் கி.மு. 322 இல் சந்திர குப்த மௌரியர் காலத்தில் செய்திகளைப் பரிமாற சிறந்தவொரு அரசு அமைப்பு இருந்ததாக குறிப்புகள் உள்ளன. 1672 இல் மன்னர் சிக்கதேவராயர் காலத்தில் மைசூரில் சிறந்த ஒரு தபால் அமைப்பு நடைமுறையில் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனி தமது தேவைகளுக்காக 1988இல் மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் தபால் அலுவலகங்களை உருவாக்கினார்கள். பிற்பாடு 1774 இல் வங்காள கவர்னர் ஜெனரல் வார்ன்ஹேஸ்டிங் தபால் வசதியை ... Read More »

அறிந்துகொள்வோம்!!!

அறிந்துகொள்வோம்!!!

விரல் அளவில் இருக்கும் இந்த குரங்கின் பெயர் பைக்மி மர்மோசெட்(PygmyMarmoset). உலகிலேயே மிகச் சிறிய குரங்கு இதுதான்! Read More »

தெரிந்து கொள்வோம் சில கண்டிபிடிப்புகள் உருவான கதை !!

தெரிந்து கொள்வோம் சில கண்டிபிடிப்புகள் உருவான கதை !!

காலணிகள், பேக்குகள் போன்றவற்றில் உள்ள ‘வல்க்ரோ’ என்ற ஒட்டும் பட்டையைப் பார்த்திருப்பீர்கள். அது எப்படி உருவானது தெரியுமா? ஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப் பகுதியில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தனது சாக்ஸில் காட்டுத் தாவரங்களின் விதைகளும், முட்களும் ஒட்டிக்கொள்வதைக் கவனித்தார். ஓர் உருப்பெருக்கியை எடுத்துக்கொண்டார். தாவரத்தின் பகுதிகளால் எப்படி இப்படி ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று ஆராய்ந்தார். அப்போது, துணியில் ஒட்டிக்கொள்ளும் வகையில் அவற்றில் சிறிய முட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதே யோசனையைக் கொண்டு, ஒட்டும் ... Read More »

Scroll To Top