மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டரைத் தாண்டி ஊட்டியை நோக்கி மலையேறத் துவங்கியிருந்தது ஆனந்தும், ஷ்ரவ்யாவும் பயணித்த கார். நீண்டு வளர்ந்த பாக்கு மற்றும் யூகலிப்டஸ் மரங்கள், கிளைகள் பரப்பித் தாறுமாறாக வளர்ந்திருந்த காட்டுப் பலா, தேக்கு மரங்களின் நிழலில் கோடை வெயில் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்றுக் கொண்டு வந்தது. அடிக்கடி குறுக்கிட்ட கொண்டை ஊசி வளைவுகள் வழியாக பயணித்த போதெல்லாம் கரு மேகங்களை எளிதில் தொட்டு விடலாம் போலிருந்தது. ஆங்காங்கே மரங்களில் அமர்ந்து கொண்டு சேட்டைகளில் ஈடுபட்டிருந்த ... Read More »
Category Archives: நாவல்கள்
இரண்டாம் தேனிலவு – 10
April 1, 2015
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது திருநெல்வேலி புதிய பஸ் நிலையம். கோவை செல்லும் தனியார் சொகுசுப் பேருந்தில் குணசீலனும், அமுதாவும் அமர்ந்திருந்தனர். “மாப்ள திடுதிப்புன்னு ரெண்டு பேரும் ஊட்டிக்குப் போறீங்க. அங்கே எங்கே தங்குவீங்க? ரெண்டு பேரும் தனியா இருக்குறதுனால எந்த பயமும் இல்லீயே…” பஸ் புறப்படுவதற்கு முன்னர் தனது சந்தேகத்தை கேட்டாள் பாக்கியம். “பயப்படாதீங்க அத்த. இந்த ஹனிமூன் டிரிப் என்னோட மெட்ராஸ் ப்ரெண்ட்ஸ்ங்க அரேஞ் பண்ணினது. என்னோட மேரேஜிக்கு கிப்ட்டா, ஊட்டியில் உள்ள ஸ்டார் ஓட்டல் ... Read More »
இரண்டாம் தேனிலவு – 9
April 1, 2015
முந்தைய நாள் இரவை, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள நண்பன் அண்ணாதுரையில் வீட்டில் ஷ்ரவ்யாவுடன் கழித்த ஆனந்த், ஊட்டி புறப்படுவதற்கு தயாரானான். “ஆனந்த்… இப்போ நீங்க ரெண்டு பேரும் நேரா கோவை புது பஸ் ஸ்டாண்டுக்குப் போங்க. அங்கிருந்து 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் இருக்கும். இப்போ சீசன் நேரம் என்பதால் டூரிஸ்ட் நிறையபேர் வருவாங்க. அதனால கூடுதலா பஸ் விட்டிருப்பாங்க. பஸ்ல போகப் பிடிக்கலன்னா, பிரைவேட்டா கார்ல கூட்டிட்டுப் போவாங்க. எப்படியும் ஐந்து ஆறுபேர் ஏறுவாங்க. ... Read More »
இரண்டாம் தேனிலவு – 8
April 1, 2015
மே 2ஆம் தேதி திங்கட்கிழமை. அமுதாவின் கண்கள் தூக்கத்தை தொலைத்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. குணசீலனும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இருந்தான். அமுதாவின் சொந்த ஊரில் இருந்தே, நேராகத் திருநெல்வேலி சென்று, அங்கிருந்து ஊட்டி செல்வது என்பது குணசீலனின் பிளான். ஊட்டிக்குப் போய்ச் சேர்வதற்குள் 12 மணி நேரத்திற்கும் மேலாகிவிடும் என்பதால் புளியோதரைச் சாப்பாட்டைத் தயார் செய்யப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் அமுதாவின் அம்மா பாக்கியம். அவளை நெருங்கி வந்தான் குணசீலன். “அத்த… மதியச் சாப்பாடு எல்லாம் ரெடி ... Read More »
இரண்டாம் தேனிலவு – 7
April 1, 2015
ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக ஈரோட்டில் நடந்த திடீர் களேபரத்திற்குப் பிறகு ஆனந்த், ஷ்ரவ்யா இருவரும் அதிகம் பேசாமல் மவுனமாகவே கோவை எக்ஸ்பிரஸில் பயணித்தனர். மணி இரவு பத்தைக் கடந்த சிறிது நேரத்தில் கோவை நகருக்குள் பயணித்தது ரெயில். “ஷ்ரவ்யா…” அதுவரை அமைதியாய் ஏதோ சிந்தனையில் மூழ்கிப்போய் இருந்த ஷ்ரவ்யாவை தனது குரலால் எழுப்பினான் ஆனந்த். “கூப்பிட்டீங்களா?” ஷ்ரவ்யா கேட்டாள். “ஆமா… நாம கோவை வந்துட்டோம். இன்னும் கொஞ்ச நேரத்துல ரெயில்ல இருந்து இறங்கணும். அதான் கூப்பிட்டேன்.” ... Read More »
இரண்டாம் தேனிலவு – 6
April 1, 2015
வெள்ளைச் சுவற்றில் நின்று கொண்டே ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் அமுதா. மணி, இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்நேரம் பெட்ரூம் முழுக்க பூக்களை கொட்டி பஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்திருப்பாளே அம்மா… அப்படியொரு சம்பவத்தை நடக்க விடக்கூடாதே… என்று மனதிற்குள் பரபரப்பானாள் அமுதா. ஒருவேளை குணசீலன் தன்னை கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது என்ற அச்சமும் அவளது முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது. தனக்கு ஏற்பட்ட இப்படியொரு நிலை, காதலித்துக் கொண்டிருக்கும் வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்றும் தன் ... Read More »
இரண்டாம் தேனிலவு – 5
April 1, 2015
“பயப்படாதீங்க ஆனந்த். அவரு எங்கிட்டதானே பேசனும்னு சொல்றாரு. மொபைலை குடுங்க…” ஆனந்திடம் இருந்து மொபைலை வாங்கிவிட்டாலும் ஷ்ரவ்யாவின் முகத்தில் லேசான கலவரம் தெரிந்தது. ஆனால், அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.எதிர்முனையில் ஷ்ரவ்யாவிடம் பேச பிரகாஷ் ஆர்வமாக காத்திருந்தான். ‘நான்தான் இந்த பார்ட்டியை உனக்காக ஸ்பெஷலா ஏற்பாடு செய்து கொடுத்தேன். பணத்தைத் தாராளமா செலவு செய்யக்கூடிய பார்ட்டிதான். அவன் உனக்காகத் தந்த பணத்தில் எனக்கும் கொஞ்சம் தந்து விடு’ என்று, தன் மனதிற்குள் உள்ள விஷயத்தை சொல்லத் தயாராக ... Read More »
இரண்டாம் தேனிலவு – 4
April 1, 2015
பகல் முழுக்க வானில் நடந்து நடந்து களைத்துப் போன சூரியன், தூக்கம் கொள்ளத் தயாராகிக் கொண்டிருந்தான். அதற்கு முன்னதாக அவன் மஞ்சள் தேய்த்துக் குளித்தானோ என்னவோ, அவன் அன்று கடைசியாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மேற்கு வானத்தில் மஞ்சள் நிற மேகங்களின் சிதறல்கள் அழகான இயற்கை ஓவியத்தை வரைந்து விட்டிருந்தது.இப்படி, இயற்கை வீட்டிற்கு வெளியே வர்ணஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருக்க… வீட்டிற்கு முன்பு வந்து நின்ற டாடா இன்டிகா காரின் ஹாரன் சப்தம் கேட்டு வேகமாக வந்தாள் பாக்கியம். ... Read More »
இரண்டாம் தேனிலவு – 3
April 1, 2015
திருவள்ளூரைக் கடந்து அரக்கோணம் நோக்கி வேகமாக பயணித்துக் கொண்டிருந்தது சென்னை – கோவை எக்ஸ்பிரஸ். சேலையில் ஊட்டி ரோஜாவாய் மலர்ந்திருந்த ஷ்ரவ்யாவை வாயாரப் புகழ்ந்து கொண்டே வந்தான் ஆனந்த். “ஷ்ரவ்யா… இந்த ரோஸ் கலர் சாரியில் நீங்க ரொம்பவும் அழகா இருக்கீங்க.” “உண்மையாத்தான் சொல்றீங்களா? இல்ல… ஏதாவது பேசணுமேங்றதுக்காக இப்படிச் சொல்றீங்களா?” “அப்படியெல்லாம் இல்லீங்க. என் மனசுல பட்டதத்தான் பேசுறேன்.” “மனசுல இருந்து பேசுறேன்னு சொல்றீங்க. அப்போ நான் உலக அழகியாகத்தான் இருக்க முடியும்.” “என்னங்க… நீங்க ... Read More »
இரண்டாம் தேனிலவு – 2
April 1, 2015
மவுனமாக இருந்தாள் அமுதா. அவளுக்கு கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால், அந்த கல்யாணக்களை மட்டும் ஏனோ மிஸ்ஸிங். “அம்மாடி… இப்படியே இங்கேயே பொறந்த வீட்டோட இருந்தரலாம்னு முடிவே பண்ணிட்டீயா?” அமுதாவின் ஒரு வார மவுன விரதத்தைத் தானே முடித்து விடுவது போல் பேசினாள் அவளது அம்மா பாக்கியம். அமுதாவிடம் இருந்து மவுனமே பதிலாக வந்தது. “ஆயிரத்தெட்டு பிரச்சனைங்க, மனஸ்தாபங்க இருந்தாலும் அதையெல்லாம் சமாளிச்சுதான் வாழணும். ஒருத்தனுக்கு வாக்கப்பட்ட பிறகு இப்படி குத்துக் கல்லாட்டம் பொறந்த ... Read More »