Home » அதிசயம் ஆனால் உண்மை » நாவல்கள் (page 4)

Category Archives: நாவல்கள்

இரண்டாம் தேனிலவு – 21

இரண்டாம் தேனிலவு – 21

ஊட்டி தாவரவியல் பூங்காவின் அழகை அணுஅணுவாக ரசித்துக் கொண்டிருந்தாள் ஷ்ரவ்யா. விதவிதமான வண்ண மலர்கள்… நீண்டு வளர்ந்த மரங்கள்… பஞ்சு மெத்தைப் புல்வெளிகள், ஜில்லென்ற குளிர்ந்த காற்று… என்று, ரம்மியமாக அமைந்திருந்த அந்தப் பூங்கா அவளை இன்னும் உற்சாகமாக்கியது. ஆனந்தின் இடது கையைத் தனது வலது கைக்குகள் சிறைப்பிடித்துக் கொண்டு அந்தப் பூங்காவை வலம் வந்தாள். “ஆனந்த் இந்தப் பூங்கா ரொம்ப அழகா இருக்குல்ல?” “ஊட்டின்னாலே அழகுதான். அங்குள்ள பூங்காவின் அழகு பத்திச் சொல்ல வேணுமா என்ன?” ... Read More »

இரண்டாம் தேனிலவு – 20

இரண்டாம் தேனிலவு – 20

நள்ளிரவுதான் ஊட்டிக்கு வந்திறங்கியதால், அமுதா காலையில் கண் விழித்த போது மணி ஒன்பதை தொட்டிருந்தது. முந்தையநாள் அதிகாலை முதல் தொடர்ந்த பஸ் பயணமும், அதைத் தொடர்ந்து செய்த கார் பயணமும் அவளை மிகுந்த களைப்பிற்கு உள்ளாக்கி இருந்தது. தனக்கு அருகில் படுத்திருந்த குணசீலனைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை. “அவரு எங்கே போய் இருப்பாரு?” என்று அவள் கண்களால் வேகமாக தேடிய போது, குளித்து முடித்துவிட்டு ஃப்ரெஸ் ஆக வெளிப்பட்டான் குணசீலன். “முழிச்சிட்டீயா அமுதா? அடிச்சிப்போட்ட மாதிரி தூங்கிட்டு ... Read More »

இரண்டாம் தேனிலவு – 19

இரண்டாம் தேனிலவு – 19

மே 3ஆம் தேதி, காலை 8 மணி. ஊட்டியின் கடும் குளிருக்குப் பயந்து உல்லன் பெட் ஷீட்டுக்குள் அடைக்கலம் புகுந்திருந்த ஷ்ரவ்யா கண் விழிக்க வெகு நேரமாகியிருந்தது. தொடர் பயணம் தந்த களைப்பை வடிகட்டி, அவளை ஃப்ரெஸ் ஆக அனுப்பியிருந்தது முந்தையநாள் இரவுத் தூக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு இரவுப் பொழுதை அணுஅணுவாய் ரசித்து அனுபவித்த பூரிப்பும் அவளது முகத்தில் தெரிந்தது. தனக்கு அருகில் சற்று விலகிப் படுத்திருந்த ஆனந்த் எங்கே என்று தேடினாள். அவனைக் ... Read More »

இரண்டாம் தேனிலவு – 18

இரண்டாம் தேனிலவு – 18

அமுதாவும் குணசீலனும் இன்டிகா காரில் மேட்டுப்பாளையம் கடந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கியபோது நன்றாக இருட்டியிருந்தது. அமுதாவின் முகத்தில் ஓடிக் கொண்டிருந்த குழப்ப ரேகைகள் குணசீலன் முகத்தில் லேசான அதிர்ச்சியை வரவழைத்திருந்தது. “அமுதா… உன் மவுனமும் கோபமும் எனக்கு இன்னும் புரியாத புதிராவே இருக்கு. கல்யாணம் ஆன புதுசுல ஒரு பொண்ணுக்கு தன்னோட கணவனை முழுசாப் புரிஞ்சிக்கறதுங்றது முடியாத ஒண்ணுதான். ஆனா… உன்னோட நடவடிக்கையப் பார்த்தா, நான்தான் இன்னும் உன்னை நல்லாப் புரிஞ்சிக்கலையோன்னு தோணுது.” குணசீலன் கேள்விக்கு அமுதாவிடம் ... Read More »

இரண்டாம் தேனிலவு – 17

இரண்டாம் தேனிலவு – 17

மாலை 5.30 மணிக்கெல்லாம் நன்றாக இருட்டத் துவங்கியிருந்தது . இயற்கை தீட்டிய பச்சை வண்ணங்களுக்கு மத்தியில் எழுந்திருந்த கட்டிடங்கள் மீது மோதிக் கொண்டு நின்றிருந்த மேகக்கூட்டங்கள்… யூகலிப்டஸ் இலைகளை இறுக்கித் தழுவி, அதன் வாசனையை அள்ளிக் கொண்டு வந்த குளிர்ந்த காற்று… மேற்கு சிவக்காத வானம்… என்று ஊட்டியின் அன்றைய க்ளைமேட் ஆனந்தையும் ஷ்ரவ்யாவையும் உற்சாகம் கொள்ளச் செய்தது. பயணம் தந்த களைப்பை மறந்து அந்த உற்சாகத்தில் திளைத்திருந்தனர் அவர்கள். அப்போதுதான் ஆனந்துக்கு அந்த ஞாபகம் வந்தது. ... Read More »

இரண்டாம் தேனிலவு – 16

இரண்டாம் தேனிலவு – 16

அன்று குற்றாலத்தில் சீசன் அருமையாக இருந்தது. தனது குடும்பத்தினருடன் அமுதாவையும் அங்கே அழைத்து வந்திருந்த அசோக், அவளிடம் எப்படியாவது தனது காதலை நேரடியாகச் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தான். ஏற்கனவே தொலைபேசி வழியாக அமுதாவிடம் காதலை மறைமுகமாகச் சொல்லியிருந்தாலும், மணிக்கணக்கில் அவளிடம் அரட்டையடித்து இருந்தாலும், ஐ லவ் யூன்னு சொல்வதற்கு மட்டும் அவனது நாக்கு ஏனோ தடுமாறியது. ஐந்தருவிக்கு எல்லோரும் குளிக்கச் சென்ற இடத்தில், அமுதா மட்டும் குளிக்கச் செல்லாமல் திரும்பிவர, தனி ஆளாகக் கையைப் பிசைந்து ... Read More »

இரண்டாம் தேனிலவு – 15

இரண்டாம் தேனிலவு – 15

கோவையில் இருந்து காரில் ஊட்டிக்கு வந்த வழியில், கார் டிரைவர் ஏமாற்றிவிட்டு உடமைகளோடு ஓடிவிட… ஆபத்பாந்தவனாக வந்து உதவிய அரசு பேருந்தில் ஏறி, ஒருவழியாக ஊட்டிக்கு வந்து இறங்கினார்கள்… ஆனந்தும், ஷ்ரவ்யாவும். ஃபிரிட்ஜ் கதவைத் திறந்தால் வேகமாக முகத்தில் வந்து மோதுமே… அப்படியொரு குளிர்ச்சி ஊட்டியில்! ஊரே ஏ.சி. குளுமையில் ஜில்லென்றிருந்தது. கடுகடுக்க வைக்கும் மதிய வெயிலில் சென்னை தி.நகர் வீதிகளில் அலைந்து விட்டு, சரவணா ஸ்டோர் கடை முன்பு வந்தால்… அங்கிருந்து வந்து மோதும் ஏ.சி. ... Read More »

இரண்டாம் தேனிலவு – 14

இரண்டாம் தேனிலவு – 14

பஸ் பயணம் அமுதாவுக்கு வெறுப்பாக இருந்தது. ஊட்டி எப்போ வரும்? எப்போது பஸ்ஸில் இருந்து கீழே இறங்குவோம் என்றிருந்தது, அவளுக்கு! சலித்துக் கொண்டு குணசீலனைப் பார்த்தாள். அவன் லேப் – டாப்பில் மும்முரமாக மூழ்கியிருந்தான். “என்னங்க… என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” குணசீலனிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அமுதாவை திரும்பிக்கூடப் பார்க்காமல் தனது வேலையிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தான். “என்னங்க… நான் கேட்டுட்டே இருக்கேன்ல. பதில் சொல்லாமலயே இருருந்தா என்ன அர்த்தம்?” “நீ மறுபடியும் கூப்பிடனும்னு அர்த்தம்.” ... Read More »

இரண்டாம் தேனிலவு – 13

இரண்டாம் தேனிலவு – 13

குன்னூருக்கு முன்னதாக அமைந்திருந்தது அந்த அழகான இடம். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலையேறத் துவங்கிவிட்டாலே எல்லாமே அழகுதான் என்றாலும், போகப்போக அழகு இன்னும் மெருகேறிக்கொண்டே போகும். அப்படி அழகு மெருகேறி இருந்த இடம்தான் அது. “ஆனந்த் இது எந்த இடம்? நாம மட்டும்தான் இங்கே இருக்கோம். இப்படி தனியா இருக்குறதுனால எந்தப் பிரச்சினையும் இல்லையே…” மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி மெயின் ரோட்டில், வாடகைக்கு அமர்த்தி வந்த காரை ஓரமாக நிறுத்தி விட்டுக் காட்டுக்குள் சிறிது தூரத்திற்குத் தன்னை ... Read More »

இரண்டாம் தேனிலவு – 12

இரண்டாம் தேனிலவு – 12

மதுரையை நெருங்கிக் கொண்டிருந்தது, குணசீலனும், அமுதாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து. திடீரென்று, தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி இடது ஓரமாக திரும்பி, அங்கிருந்த மோட்டல் முன்பு நின்றது அந்த பஸ். “கால் மணி நேரம்தான் பஸ் இங்கே நிற்கும். ஓட்டல்ல சாப்பிடுறவங்க, இறங்கி சாப்பிட்டுட்டு வேகமா வந்திடுங்க. பஸ்ச தவறவிட்டா நாங்க பொறுப்பு இல்ல.” யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல், வழக்கமாக மோட்டல் வந்தவுடன் தான் சொல்லும் டயலாக்கை சொல்லிவிட்டு டிரைவருடன் ஓசி சாப்பாடு சாப்பிட இறங்கிக் ... Read More »

Scroll To Top